ரூ 2 லட்சத்திற்கு கொரோனா தடுப்பூசி வாங்கி கொடுக்க மன்சூர் அலிகானுக்கு கோர்ட் உத்தரவு

ரூ 2 லட்சத்திற்கு கொரோனா தடுப்பூசி வாங்கி கொடுக்க மன்சூர் அலிகானுக்கு கோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mansoor ali khan (2)தமிழக அரசு மருத்துவமனையில் ஏப்ரல் 15 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் விவேக்.

ஏப்ரல் 16ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதற்கு அடுத்த நாள் ஏப்ரல் 17ல் மரணமடைந்தார்.

விவேக் மருத்துவமனையில் இருந்தபோதே நடிகர் மன்சூர் அலிகான், தடுப்பூசி குறித்து பேசினார். விவேக் மாரடைப்புக்கு அதுவே காரணம் என கூறினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி பூபேஷ், நடிகர் மன்சூர் அலிகான் மீது போலீசில் புகார் அளித்தார்.

எனவே, மன்சூர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவானது.

பின்னர், முன்ஜாமீன் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தண்டபாணி, மன்சூர் அலிகானுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் கொடுத்தார்.

இத்துடன் மேலும், அபராதமாக சுகாதாரத் துறைச் செயலாளர் பெயரில் ரூ.2 லட்சத்திற்கு டிமாண்ட் டிராப் எடுத்து, கொரோனா தடுப்பூசி வாங்க நிதியாக வழங்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி குறித்து எவ்வித வதந்தியும் பரப்பக்கூடாது, பதற்றத்தை உருவாக்க கூடாது என்றும் நிபந்தனை உத்தரவையும் பிறப்பித்தார் நீதிபதி.

High court orders actor Mansoor Ali Khan to pay Rs 2 lakh for Covishield procurement

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ்..? வைரலாகும் போட்டோ

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ்..? வைரலாகும் போட்டோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy suresh in ponniyin selvanமணிரத்னம் இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை லைகா தயாரித்து வருகிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், சரத்குமார் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில், கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக ஒரு புகைப்படம் இணையங்களில் வெளியானது.

மகாராணி போன்ற உடை அணிந்த கீர்த்தியின் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த படத்தில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடிக்கிறார். இதனால் ஜெயம் ரவியின் தங்கை வேடத்தில் (குந்தவை) தான் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் எனவும் தகவல் பரவியது.

இதுகுறித்து படத்தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

“கீர்த்தி சுரேஷின் ரசிகர் ஒருவர் உருவாக்கிய போட்டோ டிசைன் அது. இதற்கும் படத்தின் கேரக்டருக்கும் எந்த தொடர்பும் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actress Keerthy Suresh is part of Ponniyin Selvan ?

இவன் வாயே திறக்கக்கூடாது.. கொலை மிரட்டல் விடுத்த பாஜக-வினர்.; மோடியை சாடிய ‘ரியல் ஹீரோ’ சித்தார்த்

இவன் வாயே திறக்கக்கூடாது.. கொலை மிரட்டல் விடுத்த பாஜக-வினர்.; மோடியை சாடிய ‘ரியல் ஹீரோ’ சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

siddharth (2)கொரோனா 2வது அலை நாடெங்கிலும் அதிவேகமாக பரவி வருகிறது.

கொரோனா சிகிச்சைக்கான ஆக்ஸிஜன் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மனிதர்களை நம் சமூகம் இழந்து வருகிறது.

இதனால் மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசை பலரும் கண்டித்து வருகின்றனர்.

ஆனால் “ஆக்ஸிஜன் இல்லை என பொய் சொல்லும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்.

இதனையடுத்து ரியல் ஹீரோவான சித்தார்த் அவர்கள் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில்,..

“நான் ஒரு கண்ணியமான மனிதன் அல்லது புனிதத் துறவி அல்லது தலைவர் என்று பொய் சொன்னால் அறை விழும்” என முதல்வர் யோகியை குறிப்பிட்டு இருந்தார்.

நடிகர் சித்தார்த்தின் இந்தப் பதிவுக்கு பா.ஜ.க.-வினர் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்புக்கும் மோதல் உருவானது.

இதனையடுத்து நடிகர் சித்தார்த் தனது அடுத்த ட்விட்டர் பதிவில்…

“என்னுடைய செல்பேசி எண்ணை தமிழக பா.ஜ.கவும் பா.ஜ.க. ஐடி செல்லும் வெளியிட்டுள்ளன. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் எனக்கும் என் குடும்பத்திற்கும் மிரட்டல் விடுத்து 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்திருக்கின்றன.

பாலியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து எண்களும் பதிவு செய்யப்பட்டு, காவல்துறையிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

நான் பேசாமல் இருக்க மாட்டேன். தொடர்ந்து முயற்சித்துப் பாருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் “தமிழக பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் என்னுடைய செல்பேசி எண்ணைக் குறிப்பிட்டு, என்னைத் தாக்கும்படி கூறி வெளியிட்ட பல சமூகவலைதளப் பதிவுகளில் இதுவும் ஒன்று. “இவன் இனிமேல வாயே திறக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்கள் என மற்றொரு ஸ்க்ரீன் ஷாட்டையும் சித்தார்த் பதிவிட்டுள்ளார்.

நாம் கோவிட்டிலிருந்து தப்பிவிடலாம். இவர்களிடமிருந்து தப்ப முடியுமா?” என்று மற்றொரு ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் சித்தார்த்.

Actor Siddharth receives rape , death threats

‘இந்தியன் 2’ விவகாரம்..: லைகா-ஷங்கர் மோதல்..; கண்டுக் கொள்ளாத கமல்..!

‘இந்தியன் 2’ விவகாரம்..: லைகா-ஷங்கர் மோதல்..; கண்டுக் கொள்ளாத கமல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

indian 2 (2)லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில்
கமல்ஹாசன் நடித்து வரும் படம் ‘இந்தியன் -2’.

பல பிரச்சனைகள் உருவானதால் ‘இந்தியன் 2’ பட படப்பிடிப்பு இன்னமும் முடிந்தபாடு இல்லை.

இதனால் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு படம் ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து ஒரு படம் என தயாராகி விட்டார் ஷங்கர்.

எனவே ‘இந்தியன் 2’ படத்தை முடித்து கொடுக்காமல், வேறு படங்களை இயக்க, இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது லைகா நிறுவனம்.

இதனால் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், விசாரணைக்கு வந்தது.

ஜூன் முதல் அக்டோபருக்குள் படத்தை முடித்து கொடுத்து விடுவதாக, இயக்குனர் ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை, தயாரிப்பு நிறுவனமான லைகா ஏற்கவில்லை. ஜூன் மாதத்திற்குள் படத்தை முடித்து கொடுக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் வலியுறுத்தியது.

இதனால் இருதரப்பினரின் பேச்சும் தோல்வி அடைந்தது.

இதனையடுத்து, விசாரணையை, ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தது.

ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல், இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும் முதல் பென்ச் தெரிவித்தது.

இந்த விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இப்பட நாயகன் கமல் கண்டுக் கொள்ளாமல் இருக்கிறாரே? என பேசத் தொடங்கியுள்ளனர்.

இந்திய சினிமாவே கொண்டாடும் கலைஞர் கமல்.

நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், நடன இயக்குனர் தயாரிப்பாளர் என சினிமாவை முழுவதுமாக அறிந்தவர்.

எனவே இந்த விவகாரம் சுமூகமாக முடிய கமல் தன் மௌனத்தை கலைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Stalemate on Kamal’s Indian 2 continues, Madras HC told

முன்னணி் நடிகருக்கு ஜோடியாகும் ‘குக் வித் கோமாளி’ பவித்ரா லட்சுமி

முன்னணி் நடிகருக்கு ஜோடியாகும் ‘குக் வித் கோமாளி’ பவித்ரா லட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor kathirதனியார் விளம்பரங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்தவர் பவித்ரா லட்சுமி.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார் பவித்ரா.

இந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துவிட்டதால் சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இவர் ஹீரோயினாக நடிக்கும் முதல் தமிழ் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இதில் நடிகர் சதீஷுக்கு ஜோடியாகிறார்.

ஹீரோவாக சதீஷ்க்கும் இதுதான் முதல் படம்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், பவித்ரா மேலும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

இதில் நடிகர் கதிருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம் இந்த குக் வித் கோமாளி பிரபலம்.

Cook with comali fame Pavithra lakshmi to romance with this top actor?

மே மாதம் ஒரு படம்.. ஜூன் மாதம் ஒரு படம்..; ஓடிடி-யில் தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

மே மாதம் ஒரு படம்.. ஜூன் மாதம் ஒரு படம்..; ஓடிடி-யில் தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணியில் உருவாகி தியேட்டர்களில் ஏப்ரல் 9ல் ரிலீசான படம் ‘கர்ணன்’.

இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்..

தனுஷ் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது கர்ணன்.

தற்போது கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் படத்தை பார்க்க முடியாமல் ரசிகர்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கர்ணன் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

அதன்படி மே 9-ம் தேதி கர்ணன் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது..

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஜூன் மாதம் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

ஆக மே & ஜூன் ஆகிய 2 மாதங்களில் தனுஷ் ரசிகர்களுக்கு செம விருந்து இருக்கு…

Dhanush 2 films will release in OTT

More Articles
Follows