தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மே 17 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
மே 4ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் சில தளர்வுகளை செய்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று முதல் மே 7ல் சென்னையை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்பட்டன.
நேற்று முதல் நாளே ரூ. 170 கோடி மது விற்பனையானதாக தகவல்கள் வந்தன.
இந்த நிலையில் மதுக்கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டதை எதிர்த்து வழக்கறிஞர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறப்பதால் நோய் தொற்று அதிகரிக்கும் என தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், மது வாங்க வருவோரிடம் ஆதார் அட்டை பெற வேண்டும்.
மொத்தமாக விற்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை என்பதால் மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது, மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டனர். மேலும், ஆன்லைனில் மட்டும் மது விற்பனை செய்து கொள்ள அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
கோர்ட்டின் இந்த உத்தரவு மது பிரியர்களுக்கு மரண அடியாக இருக்கும் என தெரிகிறது.
இந்த ஆன்லைன் சரக்கு விநியோகத்தை ஸோமோட்டோ நிறுவனம் கையில் எடுத்துக் கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராய்ட்டர்ஸின் அறிக்கையின்படி, உள்நாட்டு உணவு விநியோக நிறுவனமான ஸோமோட்டோ, மதுபானத்தை ஹோம் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது.
High Court ordered to shut Tasmac only online sales allowed