நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளுக்கும் நாளை தீர்ப்பு

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளுக்கும் நாளை தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

High Court judgement tomorrow on Nadigar sangam election result casesகடந்த 2019 ஆண்டு ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. ஆனால் இதற்கு முன்பே சில உறுப்பினர்கள் அளித்த புகாரின் பேரில் ஜூன் 19ஆம் தேதி தேர்தலை நிறுத்து வைத்து உத்தரவிட்டார் மாவட்ட பதிவாளர்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் தேர்தலை மட்டும் நடத்த அனுமதி அளித்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தான் 2019 ஜூன் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இதில் நடிகர் ரஜினிகாந்த் வாக்கு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க பதிவுத் துறை உதவி ஐஜி கீதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் சங்க அனைத்து வழக்குகளிலும் நாளை 2020 ஜனவரி 24ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

இந்த தீர்ப்பை நீதிபதி கல்யாண சுந்தரம் அளிக்கவுள்ளார்.

நடிகர் சங்க தேர்தல், தேர்தல் ரத்து செய்ய கோரிய வழக்கு, தனி அதிகாரி நியமனம் உள்ளிட்ட பல வழக்குகளுக்கு தீர்ப்பு அளிக்கிறார்.

High Court judgement tomorrow on Nadigar sangam election result cases

என்னை விட ஐஸ்வர்யா ராய்க்கு அங்க 2 இன்ச் கம்மி.. – ராதிகா சரத்குமார்

என்னை விட ஐஸ்வர்யா ராய்க்கு அங்க 2 இன்ச் கம்மி.. – ராதிகா சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Radhika talks about Aishwarya rai at Vaanam Kottattum eventமணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனசேகரன் என் தனா இயக்கியுள்ள படம் ‘வானம் கொட்டட்டும்’.

இந்த படத்தை தன் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக மணிரத்னம் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சாந்தனு, சரத்குமார், ராதிகா, வேலையில்லா பட்டாதாரி படத்தில் நடித்த அமிதாஷ் பிரேதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சித் ஸ்ரீராம்.

இந்த பட டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள ஆண்டாள் பள்ளியில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விழாவில் ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் மேடையேறி பேசினார்.

சரத்குமார் பேசியதாவது…

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீசில் நடிப்பது சந்தோஷம். அவரது தயாரிப்பில் நடித்தால் சிறந்த கலைஞருக்கான அடையாளம் கிடைத்துவிடும்.

ராதிகா பேசியதாவது…

மணிரத்னத்தின் 2வது படத்தில் என்னை பரதநாட்டிய கலைஞராக நடிக்க வைத்தார் மணி. அப்போது அழுதே விட்டார்.

அதன்பின்னர் நிறைய படங்களில் என்னை நினைத்து தான் கேரக்டரை வடிவமைப்பார். ஆனால் என்னை விட ஐஸ்வர்யா ராய்க்கு அங்க அங்க 2 இன்ச் கம்மியாக இருப்பதால் அவரையே நிறைய படங்களில் ஒப்பந்தம் செய்துவிட்டார்.

இந்த படம் நன்றாக வந்துள்ளது. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, மடோனா என அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்.

நான் பார்த்தபோது விக்ரம் பிரபு குட்டி பையன். என் வயதை சொல்வதில் எனக்கு தயக்கமில்லை. அன்று அவரது அப்பாவுடன் நடித்துள்ளேன். இன்று இவருடன் நடித்துவிட்டேன்” என பேசினார் ராதிகா.

இந்த படத்தை பிப்ரவரி 7-ம் தேதி திரைக்கு கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Radhika talks about Aishwarya rai at Vaanam Kottattum event

Vaanam Kottattum

 

இந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையுடன் வெளியாகும் டே நைட்

இந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையுடன் வெளியாகும் டே நைட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

day knightஅத்விக் விஷுவல் மீடியா மற்றும் பியூசர்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் ஆதர்ஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்திருக்கும் படம் ‘டே நைட்’. இதில் ஆதர்ஷ் நாயகனாகவும் அன்னம் ஷாஜன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கி இருக்கிறார் என்.கே.கண்டி. இவர், சிம்புவை வைத்து கெட்டவன் படத்தை இயக்கியவர்.

டே நைட் படம் குறித்து இயக்குனர் என்.கே.கண்டி கூறும்போது, ‘ஆஸ்திரேலியாவின் கிராமப்புறங்களில் இரண்டு மாத காலங்கள் தங்கி எடுக்கப்பட்ட முழு நீள தமிழ் திரைப்படம் இது. மிகக்குறைந்த முதலீட்டில் மிகக்குறைந்த குழுவினருடன் இப்படத்தை உருவாக்கி இருக்கிறேன். இதில் நடித்த அனைவருமே புதுமுக நடிகர்கள் மற்றும் புதுமுக தொழில்நுட்பக் கலைஞர்கள்.

இது ஒரு சைக்கோ திரில்லர் படம் என்பதை விட மர்டர் மிஸ்டரி படம் என்று சொல்லலாம். பாடல் காட்சிகள் எதும் இப்படத்தில் இல்லை. ஆனாலும், திகிலும் திருப்பங்களும் திரைக்கதை அமைப்புகளும் மிக புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் வரும் திரைக்கதை அமைப்பு இதுவரை இந்திய சினிமாவில் இடம் பெற்றதே இல்லை. 2018ம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவத்தை 2019 புலனாய்வு செய்து தேடி கண்டுபிடித்து முடித்துக் கொள்வதே இக்கதையின் சிறப்பம்சம்.

படத்தில் வரும் ஒரே ஒரு கதாபாத்திரத்தை தவிர மற்ற எல்லா கதாபாத்திரங்களும் கொலை செய்யப்பட்டு இறந்துவிடுவார்கள். எப்படி கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை மிக விறுவிறுப்புடனும் திகிலுடன் நகைச்சுவையுடனும் சொல்லியிருக்கிறோம்’. நான் சினிமாவை மட்டும் தான் நேசிக்கிறேன். இந்தப்படத்தின் கதை என்னவென்றால் எல்லாருக்கும் காதல் புனிதமானது என்றால் எனக்குக் காதல் கொடூரமானது’ என்றார்.

நடிகரும் தயாரிப்பாளருமான ஆதர்ஷ் இப்படம் குறித்து கூறும்போது, ‘எங்களுக்கு சினிமா பின்புலம் எதுவும் கிடையாது. அரசியல் பவரும் கிடையாது. 7 லட்சம் ரூபாயில் இந்த படத்தை எடுக்க முடிவு செய்தோம். இயக்குனர் என்.கே.கண்டிக்கு மிகப்பெரிய திறமை உண்டு. சரியான ஹீரோ, பட்ஜெட் கிடைத்தால் இவர் மிகப்பெரிய இயக்குனர் வரிசையில் இருப்பார். வெறும் பத்து லட்சம் ரூபாயில் இவ்வளவு குவாலிட்டியாக படம் எடுத்த இயக்குனர் கண்டிக்கு நன்றி. இந்தப்படத்திற்கு பிறகு நிச்சயம் எங்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்று நம்புகிறோம். முழுக்க முழுக்க சினிமா மேல் இருக்கிற காதல் காரணமாகத் தான் இப்படி ஒரு ரிஸ்க் எடுத்து தயாரித்து நடித்துள்ளேன்’ என்றார்.

அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அரிஷின் இசையமைத்துள்ளார். ஏவிஎஸ் பிரேம் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஆதர்ஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு என்.கே.கண்டி இயக்கியுள்ளார். ஜோஜோ மற்றும் ரியா சௌத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

“83” படத்தில் இணைந்த கமலஹாசன்!

“83” படத்தில் இணைந்த கமலஹாசன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kamal Haasanகமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமாகிய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் எண்டர்டெயின்மெண்ட், ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து இவ்வாண்டின் வெகு முக்கிய படைப்பான “83” படத்தின் தமிழ் பதிப்பை வழங்குகிறார்கள்.
இந்திய சினிமாவில் சரித்திரம் படைத்த பன்முகத்தன்மை கொண்ட நாயகனாக விளங்ககூடியவர் கமலஹாசன். அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் ( Rajkamal Films International ) தயாரிக்கும் மற்றும் வழங்கும் படங்கள்,எப்போதும் தரமும் தனித்தன்மை ஒருங்கே கொண்டதாக இருக்கும்.

அந்த வகையில் “83” படத்தை தமிழில் வழங்குவது குறித்து திரு. கமலஹாசன் கூறியதாவது…
83 படத்தை தமிழில் வழங்குவதில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன். வரலாற்றின் வெற்றி பக்கங்களை, அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்த கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் திரையில் உருவாக்கி அளிப்பதில் கர்வமும் பெருமையும் கொள்கிறேன். அது மட்டும் அல்லாமல் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற சீரிய கருத்தை இந்த தேசத்து மக்களின் மனதில் விதைத்த வகையில் இந்த அணிக்கு சிறப்பு மரியாதை உண்டு. முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கும் இந்த வெற்றியே சான்று. தன்னம்பிக்கையும், மனத்திடமும், இந்த வெற்றிக்கு ஊக்க மருந்து. பல்வேறு மக்களுக்கு தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் தந்த கதையை, கபில்தேவ் தலைமையில் மொத்த அணியும் போராடி, உலககோப்பையை வென்ற கதையை நம் மக்களுக்கு தமிழில் அளிப்பது மிகுந்த மகிழ்ச்சி.

தொடர்ந்து கதை அம்சமுள்ள , மற்றும் வெகு ஜன ரசனைக்கேற்ப படங்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் ஹிந்தியில் தயாரித்து வரும் Y Not ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் இந்தப் படத்தை விநியோகம் செய்ய உள்ளார்.

Y not studios தயாரிப்பாளர் சசிகாந்த் கூறியதாவது….
“83” படத்தின் தமிழ்பதிப்பை உலகநாயகன் கமல்ஹாசன் வழங்குவது எங்கள் அனைவருக்கும் மிகப்பெரும் பெருமை. “83” படம் கிரிக்கெட் விளையாட்டை கொண்டாடும் ஒரு படம். கிரிக்கெட் சாதாரணமான விளையாட்டல்ல. அது இந்திய மக்கள் அனைவரும் பேதமின்றி பூஜிக்கும் மதம் ஆகும். இந்தியாவிற்கு உலககோப்பையை கொண்டு வந்த வீரர்களை திரையில் மீட்டுருவாக்கம் செய்வது மிகப்பெரும் பெருமை. அந்த வீரர்கள் இப்படத்தின் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்திருப்பது எங்கள் அனைவருக்கும் பெருமை. இப்படி ஒரு படத்தை தமிழில் இணைந்து விநியோகிப்பதில் எங்கள் நிறுவனம் இணைந்திருப்பது மிகப்பெரும் கௌரவம் என்றார்.

இயக்குநர் கபீர்கான் கூறியதாவது…
திரு கமல்ஹாசன் அவர்களையும் திரு சசிகாந்த் அவர்களையும் பெரும் மகிழ்ச்சியுடன் எங்கள் அணிக்கு வரவேற்கிறேன். இருவரும் எங்கள் படத்தின் பதிப்பை இணைந்து வழங்குவது எங்களுக்கு கிடைத்த பாக்கியம் ஆகும். மிகப்பெரும் நிறுவனங்கள் இணைந்திருப்பதால் தமிழில் இப்படம் மிகப்பெரிய வெளியீட்டை காணும் என நம்பிக்கை கொள்கிறேன்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கேப்டன் கபில்தேவ்வாக நடிக்கிறார். இவருடன் தாஹிர் ராஜ் பாஷின், ஜீவா, சாஹிப் சலீம், ஜதீன் சர்னா, சிராக் படேல், டிங்கர் சர்மா, நிஷாந்த் தாஹியா, ஹார்டி ஷந்து, ஷஹில் கத்தார், அம்மி விர்க், ஆதிநாத் கொதாரே, தாய்ர்யா கர்வா, R பத்ரி, பங்கஜ் திரிபாதி ஆகியோர் அணி வீரர்களாக நடித்துள்ளார்கள். தீபிகா படுகோன் கபில்தேவ் மனைவி ரோமி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

Reliance Entertainment நிறுவன நிர்வாக அதிகாரி ஷிபாஷிஷ் சர்கார் கூறியதாவது ….
உலகநாயகன் திரு கமல்ஹாசன் இப்படத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தியது எங்களுக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. Rajkamal Films International நிறுவனமும் Y not studios நிறுவனமும் “83” படத்தை தமிழில் தரமான, மிகப்பெரும் வெற்றிப்படமாக மாற்றுவார்கள்.

83 படத்தை Kabirkhan Films Productions, Rajkamal Films International, Reliance Entertainment இணைந்து வழங்குகிறார்கள்.
தயாரிப்பு – கபீர்கான், தீபிகா படுகோன், விஷ்ணு இந்தூரி, சஜீத் நாதியத்வாலா, Phantom Films, Reliance Entertainment.

Reliance Entertainment, Y Not X இணைந்து விநியோகிக்கும் இத்திரைப்படம் 2020 ஏப்ரல் 10 உலகம் முழுதும் தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

என்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் – நடிகை சோனா வேண்டுகோள்!

என்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் – நடிகை சோனா வேண்டுகோள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress sonaநல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை சோனா. அவரது நடிப்பிற்குத் தீனி போடும் வகையிலான கதைகள் தற்போது அவரைத் தேடிவர துவங்கியுள்ளன..

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட மலையாளப்படமான பச்சமாங்கா என்ற படத்தில் நடிகை சோனா அதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தில் அவரோடு நடிகர் பிரதாப் போத்தனும் நடித்துள்ளார். ஜெஷீதா ஷாஜி மற்றும் பால் பொன்மணி தயாரித்துள்ள இப்படத்தை ஜெய்ஸ் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ட்ரைலரில் நடிகை சோனாவின் கவர்ச்சியான உடை குறித்து பலரும் சோனா இப்படத்தில் மிக கவர்ச்சியாக நடித்துள்ளார் என்று செய்தி பரப்பி வருகிறார்கள். ஒரு பிரபல தமிழ் நாளிதழ் கூட “ஷகிலா வழியில் சோனா கவர்ச்சியாக நடிக்கிறார்” என்பது போன்ற செய்தியை வெளியீட்டுள்ளது. மேலும் இப்படம் சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடிகை சோனா தான் இனி கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். இந்தப் பச்சை மாங்கா படம் அப்படி கவர்ச்சியை அடிப்படையாக கொண்ட படமாக இருந்தால் பிரதாப் போத்தன் எப்படி நடிப்பார்? என்ற கேள்வியையும் நடிகை சோனா எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது,

“பச்சமாங்கா படம் ஒரு கனமான கதையை அடிப்படையாக கொண்ட படம். நம் பாலு மகேந்திரா சார் படம் போல பக்கா க்ளாஸியான படம் அது. அப்படத்தின் ட்ரைலரில் என் உடை மற்றும் சிறிது நேர நடிப்பைப் பார்த்து பலர் நான் அதி கவர்ச்சியான நடிகை என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அது உண்மை அல்ல. கேரளாவில் பெண்கள் எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதால் தான் படத்தில் அப்படியான உடையை அணிந்திருந்தேன். இந்தப்படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்தரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக சிறப்பான படம். என் கதாப்பாத்திரமும் அப்படியே. படம் வந்தபின் இந்த வார்த்தையை அனைவரும் சொல்வார்கள்” என்றார்

நடிகர் விஜய்யிடம் விலை போனதா ஹலோ ஆப்.? நெட்டிசன்கள் டென்சன்

நடிகர் விஜய்யிடம் விலை போனதா ஹலோ ஆப்.? நெட்டிசன்கள் டென்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijayஇணையங்களில் தினம் தினம் ஒவ்வொரு ஆப் வந்துக் கொண்டிருக்கின்றன.

பேஸ் புக், ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம், ஸ்கைப், வாட்ஸ் அப், டிக் டாக், ஸ்ம்யூல் உள்ளிட்ட பல ஆப் (APP) வந்த வண்ணம் உள்ளன.

இதில் பல செய்திகள் தினம் தினம் டிரெண்டாகின்றன.

இந்த நிலையில் புதிதாக வந்துள்ள ஹலோ ஆப் நிறுவனம் நிறைய டிரெண்ட்டுக்களை தினம் தினம் அறிமுகம் செய்து வருகிறது.

இதற்காக இந்த நிறுவன ஊழியர்கள் வாட்ஸ் அப் குரூப்புகள் உருவாக்கியுள்னர்.

சம்பளத்தில் ரஜினியை முந்துகிறாரா விஜய்.? நெட்டிசன்கள் காமெடி

அதில் இன்றைய ஸ்பெஷல் என்ன? என்ன டிரெண்ட்ங்கில் உள்ளது என பதிவிடுவார்கள்.

முக்கியமாக நடிகர்கள் பற்றிய தகவல்கள் அடிக்கடி பதிவிடுவதை பார்க்க முடியும்.

இதில் பணிபுரிபகர்கள் நிறைய பேர் தளபதி விஜய் ரசிகர்கள் இருக்கிறார்களா? எனத் தெரியவில்லை.

நடிகர்கள் ரஜினி, அஜித் உள்ளிட்டோர்களின் பட செய்திகளோ அவர்களை பற்றிய செய்திகளே வந்தால் அன்றைய தினத்தில் சம்பந்தமில்லாமல் தளபதி விஜய் பற்றிய ஏதாவது ஒன்றை டிரெண்ட் செய்ய நினைக்கின்றனர்.

அதாவது விஜய் நடனம், விஜய் பாடல்கள் என்று புதிய டிரெண்ட் அலட்ர் செய்வார்கள்.

இதனால் ஹலோ ஆப் விஜய்யின் சொந்த நிறுவனமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இவர்கள் விஜய்யின் ரசிகர்களாவே இருக்கட்டும். அதற்காக பொதுமக்கள் பயன்படுத்தும் இது போன்ற ஆப்களில் தங்களை ஆசைகளை திணிக்கலாமா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

அண்மையில் கூட ஒரு பத்திரிகையாளர் இதனை கேட்க சம்பந்தப்பட்ட நிறுவன நபர்கள் மழுப்பலாக பதில் சொல்லியுள்ளனர்.

More Articles
Follows