தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மதுரை மாவட்டம் மேலுார் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன்.
இவர் நடிகர் தனுஷ் என் மகன். அவர், எனக்கு பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும்’ என மேலுார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அதை எதிர்த்து, நடிகர் தனுஷ் மனு தாக்கல் செய்ததால், உயர் நீதிமன்ற கிளை மேலுார் நீதிமன்ற வழக்கை ரத்து செய்தது.
மேலும், ‘தனுஷ் போலி ஆவணங்கள் தாக்கல் செய்து உயர் நீதிமன்றத்தில் அவருக்கு சாதகமாக உத்தரவு பெற்றார்.
அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் கதிரேசன்.
அந்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
‘நானே வருவேன்’ ஓவர்.; ‘வாத்தி’-யை அடுத்து பான் இந்தியா படத்தில் தனுஷ்
அதை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கதிரேசன் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார்.
மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகாததால், மனுவை தள்ளுபடிக்குரிய தலைப்பிட்டு இன்று (ஏப்.,27) விசாரணைக்கு பட்டியலிட நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது… கதிரேசன் தொடர்ந்த வழக்கில் நடிகர் தனுஷ் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியது.
நடிகர் தனுஷ் தரப்பில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக கதிரேசன் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
High court decides to send notice to Dhanush regarding paternity case