கூல் சுரேஷின் ரசிகையாக மாறிய ‘வெந்து தணிந்தது காடு’ பட ஹீரோயின்

கூல் சுரேஷின் ரசிகையாக மாறிய ‘வெந்து தணிந்தது காடு’ பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு எவருமே எதிர்பாராத வகையில் விளம்பரங்களை செய்தவர் நடிகர் கூல் சுரேஷ்.

தீவிர சிம்பு ரசிகரான இவர் பல படங்களில காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார்.

இவர் எது பேசினாலும் ‘வெந்து தணிந்தது காடு… வணக்கத்தை போடு..” என்று படத்தின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்பார்.

இதன் மூலம் இவருக்கும் படத்திற்கும் ஏகப்பட்ட பப்ளிசிட்டி கிடைத்தது.

செப்டம்பர் 15ஆம் தேதி ‘வெந்து அணிந்தது காடு’ படம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் நாயகி சித்தி இதானி ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அதில்… “கூல் சுரேஷ் இந்த படத்திற்கு அதிக அளவில் பிரமோஷன் செய்துள்ளார். நான் அவருடைய ரசிகை ஆகிவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.

Heroine of ‘Vendhu Tananthana Kadu’ became cool Suresh’s fan

பிரபலங்கள் முன்னிலையில் நடிகர் வின் ஸ்டார் விஜய் நடத்திய முப்பெரும் விழா

பிரபலங்கள் முன்னிலையில் நடிகர் வின் ஸ்டார் விஜய் நடத்திய முப்பெரும் விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை சாலிகிராமம் குமரன் காலணியில் உள்ள சிகரம் ஹாலில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

பாக்கியம் சினிமா 11ஆம் ஆண்டு விழா – முள்ளும் மலரும் 6ஆம் ஆண்டு விழா, – சாண்டோ சின்னப்பா தேவர் பட திறப்பு விழா மற்றும் பல்வேறு துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கும் விழா என இந்த நிகழ்ச்சி வெகு விமரிசையாக பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த விழாவில் நீதி அரசர் ஜோதிமணி, இயக்குனர் பேரரசு, இயக்குனர் அரவிந்தராஜ், தயாரிப்பாளர் சிகரம் சந்திரசேகர், தயாரிப்பாளர் விஜய் முரளி, பிஆர்ஓ பெரு துளசி பழனிவேல், மக்கள் குரல் ராம்ஜி, மியூசிக் யூனியன் தலைவர் தீனா, பொறியாளர் தா மணிமாறன், இலக்கிய திறனாய்வாளர் கொடைக்கானல் காந்தி அட்வகேட் நீதி செல்வன், தயாரிப்பாளர் காந்திமதி, இயக்குனர் ஹாருன், நடிகை அபிராமி, டாக்டர் அக்பர் கான், நடிகை டயானா ஸ்ரீ
ருத்ர மனோகரன் முள்ளும் மலரும் ஆசிரியர் பொறியாளர் பன்னீர் ராமச்சந்திரன் ஆகியோர்
கலந்து கொண்டனர்.

இயக்குனரும் நடிகருமான பாக்கியம் சினிமா இதழ் ஆசிரியரும் வெளியீட்டாளருமான விண் ஸ்டார் விஜய் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தனுஷுக்கு தமிழகத்தில் முதல் இடம்.; தென்னிந்திய அளவில் 2வது இடம்

தனுஷுக்கு தமிழகத்தில் முதல் இடம்.; தென்னிந்திய அளவில் 2வது இடம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நவீன டிஜிட்டல் காலத்தில் நமக்கு பிடித்த சினிமா நடிகர் நடிகைகளை தொடர்பு கொள்வது மிக எளிதான ஒன்றாகி விட்டது.

நடிகர்கள் பற்றி தெரிந்து கொள்ள இந்த சமூக வலைத்தளங்கள் ஓர் எளிய சாதனமாகி விட்டது.

பேஸ்புக் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சமூகவலைத்தளங்களில் முன்னணி நடிகர்கள் ஆக்டிவாக உள்ளனர்.

தங்களின் புகைப்படங்களை.. தங்களைப் பற்றி தகவல்களை அதில் அதிகம் பகிர்கின்றனர்.

எனவே பொதுமக்களும் அவர்களை சமூக வலைத்தளங்களில் பின் தொடங்கினர்.

இந்த நிலையில் நடிகர் தனுஷின் twitter பக்கத்தை 11 மில்லியன் ஃபாலோயர்கள் பின் தொடர்கின்றனர்.

இதன் மூலம் தமிழ் சினிமா நடிகர்களில் தனுஷ் முதலிடத்தை பெறுகிறார். தென்னிந்திய அளவில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.

ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட நடிகராக தனுஷ் உய(வள)ர்ந்து நிற்கிறார்.

தனுஷின் 3 படம் ரீ-ரிலீஸ்.; ஸ்ருதிஹாசனை கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்

சிவகார்த்திகேயன் சந்தானம் யோகிபாபு வரிசையில் சித்து சித்

சிவகார்த்திகேயன் சந்தானம் யோகிபாபு வரிசையில் சித்து சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையில் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்கள் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சந்தானம் , யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள்.

நாம் மேலே சொன்ன மூவர்கள் டிவியில் நடைபெற்ற ரியால்டி ஷோக்கள் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள்.

ஆனால் தற்போது டிவி சீரியல்கள் மூலம் பிரபலமான ஒரு நடிகர் வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார்.

அவர்தான் நடிகர் சித்து சித். அதன் விவரம் வருமாறு…

சின்னத்திரை மூலம் மக்களால் கொண்டாடப்பட்ட பலர் தற்போது வெள்ளித்திரை நட்சத்திரங்களாக ஜொலித்துக்கொண்டிருப்பதால், சின்னத்திரையில் முகம் காட்டுவது என்பது மிகப்பெரிய சவலாக இருக்கிறது. அந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஜெயிப்பது சிலர் மட்டுமே. அந்த சிலரில் ஒருவர் தான் நடிகர் சித்து சித்.

சித்து சித்

‘திருமணம்’ என்ற தொடர் மூலம் மக்களிடம் பிரபலமான சித்து சித், தற்போது ’ராஜா ராணி 2’ தொடரில் ஹீரோவாக நடித்து வருவதோடு, தமிழ் ரசிகர்களின் பேவரைட் சின்னத்திரை ஹீரோவாகவும் உயர்ந்துள்ளார்.

இந்த இடத்தை பிடிக்க சித்து சித், பல வருடங்கள் கடுமையாக உழைத்திருக்கிறார். சுமார் 6 வருடங்களாக நடன கலைஞராக பணியாற்றிய பிறகே நடிகர் வாய்ப்பை பெற்றவர், திருமணம் தொடர் மூலமாக மக்களிடம் பிரபலம் ஆனார்.

சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு திருவண்ணாமலையில் இருந்து வந்து இன்று தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருக்கும் சித்து சித், நடிக்கும் தொடர்கள் அத்தனையும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் பெற்று வருவதால், இவருக்கான ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, இவரை வெள்ளித்திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.சித்து சித்

சின்னத்திரையில் வெற்றி பெற்ற சித்து சித்தும் தனது அடுத்த இலக்காக வெள்ளித்திரையை நோக்கி பயணிக்க ரெடியாக இருப்பதோடு, சில திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே விரைவில் வெள்ளித் திரையில் சித்து சித் ஹீரோவாக களம் இறங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் சித்து சித், சமீபத்தில் எடுத்த தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையதளம் மற்றும் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

சித்து சித்

Sidhu sid will make his debut as a  hero on the silver screen

தன் அப்பா பெயரை இணைத்து 2வது குழந்தைக்கு பெயரிட்ட சௌந்தர்யா ரஜினி

தன் அப்பா பெயரை இணைத்து 2வது குழந்தைக்கு பெயரிட்ட சௌந்தர்யா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா. இவர் ரஜினி நடித்த கோச்சடையான் மற்றும் தனுஷ் நடித்த விஐபி 2 படங்களை இயக்கியுள்ளார்.

இவர் தன் முதல் கணவர் அஸ்வினை விவகாரத்து செய்த நிலையில் நடிகர் விசாகன் என்பவரை 2தாக திருமணம் செய்து கொண்டார்.

சௌந்தர்யாவுக்கு ஏற்கனவே வேத் என்ற ஒரு மகன் இருக்கிறார்

இந்த நிலையில் சௌந்தர்யா தாய்மை அடைந்து இருந்தார். நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சௌந்தர்யாவுக்கு மாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

எனவே ரஜினி ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் சௌந்தர்யா, விசாகன் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தன் 2வது குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயரிட்டுள்ளார் சௌந்தர்யா.

ஏற்கனவே ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா லிங்கா என்ற இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

தற்போது சௌந்தர்யாவுக்கும் வேத் மற்றும் வீர் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக ரஜினிகாந்துக்கு பேரன்கள் மட்டுமே உள்ளனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

சௌந்தர்யா

Soundharya Rajini again blessed with boy baby

அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள்.. நீயா நானா நிகழ்ச்சி: கணவனை கலாய்த்த மனைவி பற்றி கவிஞர் தாமரை கருத்து

அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள்.. நீயா நானா நிகழ்ச்சி: கணவனை கலாய்த்த மனைவி பற்றி கவிஞர் தாமரை கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் வழங்கி வருகிறார்.

இந்த வார நிகழ்ச்சியில் கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இதில் தன் கணவனுக்கு படிக்க தெரியாது.. அவர் இன்னும் முன்னேறவில்லை என மகள் முன்னிலையில் பேசியிருந்தார் ஒரு பெண்மணி.

ஆனால் அவருக்கு சிறந்த அப்பா என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார் கோபிநாத்.

இதனடுத்து ரசிகர்கள் அந்த பெண்ணை குறித்து விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் கவிஞர் தாமரை இந்த விவகாரம் குறித்து தன் சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது…

” அம்மாக்கள் இல்லை என்றால் குழந்தைகள் பள்ளி படிப்பை கூட தாண்ட முடியாது.

அந்த பெண் இதுபோன்ற நிகழ்ச்சியில் எப்படி பேச வேண்டும் என்பது தெரியாமல் பேசிவிட்டார். சிலர் இதுபோல பேசி தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள்.

கோபிநாத் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கும்போது அவரது பிள்ளைக்கு அவரது தாய் மார்க் பட்டியலில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருப்பார்” என தெரிவித்துள்ளார்.

நீயா நானா

Neeya Naana latest Show Lyricist Thamarai Statement

More Articles
Follows