சிவகார்த்திகேயனுக்கு நிறைய கடன்பட்டிருக்கும் *கனா* ஹீரோ தர்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தர்ஷனின் கனவு கனா படம் மூலம் நனவாகியிருக்கிறது. தனது முதல் படமான கனா வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாவதால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கும் தர்ஷன், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் பேனரில் கனா படத்தில் பணிபுரியும்போது கிடைத்த அனுபவங்கள் சிலவற்றை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

தனது கதாபாத்திரத்தை பற்றி அவர் கூறும்போது…

“அருண்ராஜா காமராஜ் எனக்கு கிராமத்து பின்னணியில் உள்ள ஒரு பையனை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்தை வழங்கினார். இது நகைச்சுவை மற்றும் உணர்வுகளை கொண்டது.

எனது கதாபாத்திரம் மற்றும் கௌசல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) ஆகியவற்றிற்கும் இடையிலான உறவை அவர் மிக இயல்பாக சொல்லியிருக்கிறார்” என்றார்.

தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் பற்றி தர்ஷன் பேசும்போது…

மிகவும் எமோஷனலாக, “ஒரு நடிகராக தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரத்துக்கு தேவையானவற்றை சிறப்பாக செய்யும் சிவகார்த்திகேயன், நான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பேன் என்று உணர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

உண்மையில், நான் அவருக்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன் என்பதையும் தாண்டி, இந்த அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு எனக்கு உண்டாகியிருக்கிறது. பார்வையாளர்கள் என்னை வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

மேலும், “கனா (கனவு) ஒரு பொதுவான உணர்வு, அல்லவா? எனக்கு மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருக்கும் படத்துடன் ஒரு வகையான பிணைப்பு இருந்தது. ரசிகர்கள் அவர்களுடைய சொந்த கனவு திரையில் பிரதிபலித்திருப்பதாக உணர்வார்கள்” என்றார்.

சக நடிகர்கள் பற்றி பேசும்போது…

“விருதுகள் மற்றும் பாராட்டுக்களை தாண்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் ‘கௌசல்யா’வாக எல்லோர் மனதிலும் நிற்பார். சத்யராஜ் சார் போன்ற ஒரு லெஜண்டுடன் நடித்ததை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது.

அவரது சிறிய அமைதியான நடிப்பு கூட பேச முடியாத வார்த்தைகளை அழகாக வெளிப்படுத்தும்” என்றார் தர்ஷன்.

சீதக்காதி பட டைட்டிலை மாற்ற இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதி நடிப்பில் 25வது படமாக வளர்ந்துள்ள படம் சீதக்காதி.

இப்படத்தை பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ர்.

இப்படம் வருகிற டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்பட டைட்டில்லை மாற்றக்கோரி இந்திய தேசிய லீக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த கட்சியின் அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது…

“சீதக்காதி தமிழர்களின் அடையாளமாக வாழ்ந்தவர். இஸ்லாமியராக இருந்தாலும், அனைத்து மக்களுக்காகவும், மனித நேயத்திற்காகவும் வாழ்ந்தவர், அப்துல் காதர் என்ற சீதக்காதி.

இவர், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில், 1698 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தவர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, சீதக்காதியின் கண்ணியத்தை சீரழிக்கும், எவ்வித நடவடிக்கையையும், இந்திய தேசிய லீக் கட்சி அனுமதிக்காது.

விஜய் சேதுபதி, நல்ல நடிகர். சீதக்காதி என்ற, படத்தின் பெயரை மாற்ற வேண்டும். இல்லையென்றால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.” என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

*ஜாம்பி* சூட்டிங்கை க்ளாப் அடித்து துவக்கி வைத்த பொன்ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மோ’ என்ற திகில் கலந்த நகைச்சுவை படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் புவன் நல்லான் R. இவரின் அடுத்த படமும் திகில் கலந்த நகைச்சுவை திரைப்படம் தான்.

உலகப்புகழ் பெற்ற ‘ஜாம்பி’ கதாபாத்திரத்தை மையமாக வைத்து இயக்குகிறார். ‘ஜாம்பி’ என்றே பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘எஸ்3’ பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் V.முத்துக்குமாரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

யோகிபாபுவும், யாஷிகா ஆனந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் கோபி சுதாகர், T.M.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், ‘லொள்ளு சபா’ மனோகர், சித்ரா ஆகியோருடன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மூலம் நகைச்சுவையில் பிரபலமானவர்கள்.

இசை – பிரேம்ஜி, ஒளிப்பதிவு – விக்ரம் மோகன், கலை – கண்ணன், படத்தொகுப்பு – தினேஷ், சண்டை பயிற்சி – ஓம் பிரகாஷ், இணை தயாரிப்பு – பாலா அன்பு.

இப்படத்திற்கான படப்பிடிப்பு பட பூஜையுடன் ஆரம்பமானது. பிரபல இயக்குநர் பொன்ராம் ‘க்ளாப்’ அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார்.

மனோபாலா நடிக்க முதல் காட்சி படமாக்கப்பட்டது.

சமுத்திரக்கனியின் *அடுத்த சாட்டை*யில் அதுல்யா ரவி-கன்னிகா ரவி கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரகனி, தம்பி ராமையா, யுவன், மஹிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாட்டை’.

ஒரு பள்ளி ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே இருக்க வேண்டிய புரிதலை அருமையாக உருவாக்கியிருந்தனர்.

தற்போது பார்ட் 2 படங்கள் உருவாகும் காலம் என்பதால் சாட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்த சாட்டை என்ற பெயரில் எடுக்கின்றன்ர.

இப்படத்தையும் அன்பழகனே இயக்க நாயகனாக சமுத்திரகனி நடிக்கிறார்.

இவர்களுடன் யுவன், கன்னிகா ரவி, அதுல்யா ரவி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜையுடன் சூட்டிங் ஆரம்பமாகியுள்ளது.

ஏற்கெனவே சமுத்திரகனி நடிப்பில் ‘நாடோடிகள் 2’ படம் உருவாகியுள்து. விரைவில் அப்பா படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணத்தை முடித்துவிட்டு சேரனுடன் இணையும் விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘தேசிய கீதம்’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘பாண்டவர் பூமி’, ‘ஆட்டோகிராப்’, ‘தவமாய் தவமிருந்து’, ‘மாயக்கண்ணாடி’, ‘பொக்கிஷம்’ என தமிழ் ரசிகர்களை கவர்ந்த படங்களை இயக்கியவர் சேரன்.

இதில் ஆட்டோகிராப் படம் முதல் அவரே நாயகனாக நடித்து இயக்கி வந்தார்.

அதன்பின்னர் மற்ற இயக்குனர் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

‘பிரிவோம் சந்திப்போம்’, ‘ராமன் தேசிய சீதை’, ‘யுத்தம் செய்’, ‘முரண்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘மூன்று பேர் மூன்று காதல்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.

இதன் பின்ன்ர் சர்வானந்த், நித்யா மேனன் நடிப்பில் 2015-ம் ஆண்டு ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்கினார்.

அப்படத்தை வெளியிட உச்சக்கட்ட சிரமம் அவருக்கு ஏற்ப்பட்டது.

இதனால் C2H (Cinema 2 Home) என்ற புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் திரையரங்குகளில் படத்தை வெளியிடாமல் சி.டி. மூலம் படத்தை வெளியிட்டார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்ன்ர ‘திருமணம் சில திருத்தங்களுடன்’ என்ற படத்தை சேரன் இயக்குவதாக அறிவித்துள்ளார்.

இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்க, காவ்யா சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், பால சரவணன், அனுபமா குமார், தம்பி ராமையா, மனோபாலா, ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதில் நாயகியின் அண்ணனாக சேரன் நடிக்கிறார்.

இப்படத்திற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய சித்தார்த் விபின் இசையமைக்க, பொன்னுவேல் தாமோதரன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

இப்பட ஃபர்ஸ்ட் லுக்கை போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார்.

இந்த விழாவில் சேரன் பேசியதாவது…

கஷ்ட காலங்களில் கூட நிற்பதாகவும் சரி, திரைப்படத்துக்காக முன்னெடுத்தும் சரி நடிகர் முரளி ஒரு சிறந்த மனிதர். அவருக்கு அப்புறம் நான் பார்த்த, மிகச் சிறந்த மனிதர் விஜய் சேதுபதி தான்.

விரைவில் நாங்கள் இருவரும் படம் பண்ணப் போகிறோம்.” என பேசினார்.

ஏழைகளின் கண்ணீரை ரஜினிக்கு பிறந்தநாள் பரிசாக்கிய கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் தனது 68வது பிறந்த நாளை கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கொண்டாடினார்.

அவருக்கு திரையுலக பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதில் நடிகை கஸ்தூரியும் அவருக்கு பிறந்தநாள் பரிசு அளித்துள்ளார். இது குறித்து அவர் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

“மானு மிஷன் முயற்சியில், லைகா நிறுவனத்தின் ஆதரவில், ஏழை பிள்ளைகள் சிலரை தேர்வு செய்து, ரஜினி நடித்த 2.0 படம் பார்க்க அழைத்து சென்றேன்.

அந்த 3 மணி நேரமும் வேதனையை மறந்து உற்சாகமாக மகிழ்ந்த அந்த குழந்தைகளின் சிரிப்பையும், அவர்கள் குடும்பத்தினரின் ஆனந்த கண்ணீரையும் ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் பரிசாக்குகிறேன்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

More Articles
Follows