2022 ஜனவரி 12 நிலவரப்படி… பொங்கல் ரேஸில் ‘தேள்’ & மற்ற 9 படங்கள் பற்றிய பார்வை..

2022 ஜனவரி 12 நிலவரப்படி… பொங்கல் ரேஸில் ‘தேள்’ & மற்ற 9 படங்கள் பற்றிய பார்வை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொங்கல் சமயத்தில் வெளியாகவிருந்த ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘ராதே ஷ்யாம்’ மற்றும் ‘வலிமை’ ஆகிய படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தன.

இதனையடுத்து மற்ற தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை பொங்கல் தினத்தில் வெளியிட முன்வந்துள்ளனர். ஒரு சில படங்கள் அறிவிக்கப்பட்டு பின் வாங்கியது.

தற்போது இன்றைய நிலவரப்படி பொங்கலுக்கு மோதவுள்ள படங்கள் பற்றிய ஒரு பார்வை இதோ… (சில படங்கள் ஓடிடியில் ரிலீசாகிறது)

1. சசிகுமார் நடித்த ’கொம்பு வச்ச சிங்கம்டா’ 2. விதார்த் நடித்த ’கார்பன்’ 3. சதீஷ் நடித்த ’நாய் சேகர்’ , 4. அஸ்வின் நடித்த ‘என்ன சொல்ல போகிறாய்’, மற்றும் 5. ‘மருத’ 6. ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா 7. ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த தேள், மற்றும் 8 பாசக்கார பய, 9 புத்தம் புது காலை விடியாதா?, 10 சினம் கொள் ஆகிய படங்கள் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஜனவரி 13 மற்றும் 14ல் வெளியாகவுள்ள படங்கள் பற்றிய ஒரு பார்வை இதோ…

தேள்.

நடிகர் ஹரிகுமார் இயக்கியுள்ள தேள் படத்தில் பிரபுதேவா மற்றும் சம்யுக்தா ஜோடியாக நடித்துள்ளனர். பிரபுதேவா மகனாக ஈஸ்வரி ராவ் அம்மாவாகவும் நடித்துள்ளனர். இப்படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது

ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா

லட்சுமிமேனன் கதாநாயகியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா.

கே எஸ் ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியன் எழுதி இயக்கியுள்ளார். சந்தோஷ பாண்டி ஒளிப்பதிவில் கே.ஜெய் க்ரிஷ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு சந்திரகுமார் படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்கிசோஃபிரினியா எனும் மன சிதைவு நோயை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.

நாய் சேகர்

கிஷோர் ராஜ்குமாரின் இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ள படம் நாய் சேகர். சதீஷ், பவித்ரா லெட்சுமி ஜோடியாக நடித்துள்ளனர். அஜேஷ் இசையமைத்துள்ளார். வடிவேலு நடித்த ஒரு படத்தில் நாய்சேகர் என்பது அவரது கேரக்டர் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஜிஎஸ் குழுவினர் நாய் சேகர் பெயரை விட்டுக் கொடுக்காத காரணத்தினால் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து வருவது தனிக்கதை. இந்த படத்தை லைகா தயாரித்து வருகிறது.

கொம்பு வச்ச சிங்கம்டா

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார், மடோனா செபஸ்டின், சூரி, மறைந்த இயக்குநர் மகேந்திரன், ஹரிஷ் பெரடி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. இந்தர் குமார் தயாரித்துள்ளார்.

கார்பன்

ஹிப் ஹாப் ஆதி நடித்த அன்பறிவு படத்தில் வில்லனாக நடித்திருந்தார் விதார்த். இந்த அன்பறிவு படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் விதார்த் நடிப்பை பாராட்டும்படியாக இருந்தது,

தற்போது விதார்த் நடிப்பில் 25வது படமாக உருவாகியுள்ள படம் “கார்பன். ஶ்ரீனிவாசன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

கனவில் காண்பவை எல்லாம் நிஜத்தில் அப்படியே அசலாக நடப்பதால் இந்த படத்திற்கு கார்பன் என பெயர் வைத்திருக்கிறார்களாம்.

தன்யா பாலகிருஷ்ணன் நாயகியாக நடிக்க, விக்ரம் ஜெகதீஷ் (ஒண்டிகட்ட படப்புகழ்), பாவ்லின் ஜெஷிகா (வாய்தா படப்புகழ்) மாரிமுத்து, மூணார் ரமேஷ், நிதீஷ் அஜய், வினோத் சாகர், மூர்த்தி (பிச்சைக்காரன் படப்புகழ்) டபுட் செந்தில், சுபா வெங்கட், பேபி ஜனனி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

மருத

பிக்வே பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜிஆர்எஸ் என்பவர் நடித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘மருத’. இந்த படத்தில் நடிகை ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சரவணன், விஜி, வேலா ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடல் ஒன்றை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன சொல்ல போகிறாய்..

ஹரிஹரன் இயக்கத்தில் ட்ரைடன்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் என்ன சொல்ல போகிறாய். இதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின்குமார் நாயகனாக நடித்துள்ளார்.
இவருடன் அவந்திகா, தேஜு அஸ்வினி, ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

புத்தம் புது காலை விடியாதா…

ஐந்து தனித்தனி கதைகளை உள்ளடக்கிய புத்தம் புது காலை திரைப்படம் கடந்த 2020ல் ரிலீசானது. சுதா கொங்கரா, கௌதம் வாசுதேவ் மேனன், சுஹாசினி மணிரத்னம், ராஜீவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ் என 5 இயக்குநர்கள் இந்த படங்களை இயக்கியிருந்தனர்.

தற்போது இதன் இரண்டாம் பாகம் புத்தம் புது காலை விடியாதா என்ற பெயரில் உருவாகியுள்ளது.

இரண்டாவது கோவிட்-19 லாக்டவுனில் அமைக்கப்பட்ட இக்கதைகள், காதல் மற்றும் இரண்டாவது வாய்ப்புகள் குறித்துப் பேசுகின்றன. ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அர்ஜுன் தாஸ், திலிப் சுப்பராயன், கௌரி ஜி கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந்த் மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் நடித்துள்ள கதைகளை பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் ஆண்டனி மற்றும் சூர்ய கிருஷ்ணா ஆகியோர் இயக்கியுள்ளனர்.

புத்தம் புதுக் காலை விடியாதா… வரும் பொங்கல், ஜனவரி 14, 2022 அன்று Amazon Prime Video-இல் ரிலீசாகிறது.

சினம் கொள்…

ரஞ்சித் ஜோசப் என்பவர் இயக்கத்தில் ‘சினம் கொள்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை Sky magic பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவன சார்பில் பாக்ய லட்சுமி வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஆண்டவன் கட்டளை, மிக மிக அவசரம் போன்ற படங்களில் நடித்த அரவிந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் நர்வினி டெய்சி, லீலாவதி, பிரேம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – M.R.பழனிக்குமார் இசை – N.R.ரகுநந்தன் வசனம் மற்றும் பாடல்கள் – தீபச் செல்வன். எடிட்டிங் – அருணாசலம் சிவலிங்கம். கலை – நிஸங்கா ராஜகரா. சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் – நித்தியானந்தம். தயாரிப்பு நிர்வாகம் – R.வெங்கடேஷ் தயாரிப்பு – காயத்ரி ரஞ்சித், பாக்யலட்சுமி வெங்கடேஷ். கதை, திரைக்கதை, இயக்கம் – ரஞ்சித் ஜோசப்.

படம் வருகின்ற (14.01.2022) பொங்கல் அன்று Eelam play என்ற ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

Here’s full film details of 2022 pongal release

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துங்க.. – கீர்த்தி சுரேஷ்

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துங்க.. – கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.

இளம் வயதிலேயே சிறந்த நடிகைக்கான (மகாநடி படம்) தேசிய விருதை வென்றவர் இவர்.

முன்னணி நாயகியாக இருந்தபோதும் ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தனக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளார்.

அவரின் அறிக்கையில்…‛‛எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.
நான் கவனமாக முன்னெச்சரிக்கையாக இருந்ழம் கொரோனா பாதிப்பு தொற்றிக் கொண்டது. நான் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுகிறேன்.

என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தடுப்பூசி போடவில்லை என்றால் உடனே போட்டுக் கொள்ளுங்கள். விரைவில் குணமாகி மீண்டும் வருவேன்.

தயவு செய்து அனைவரும் கொரோனா விதிமுறை, கடைப்பிடிக்கவும்.” என தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh tested Covid positive and she advice fans

‘பாரத ரத்னா’ லதா மங்கேஷ்கர் ஐசியூ-வில் அனுமதி

‘பாரத ரத்னா’ லதா மங்கேஷ்கர் ஐசியூ-வில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர் பாடகி லதா மங்கேஷ்கர்.

இவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு தற்போது 92 வயதாகும் நிலையில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூ., பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லதா மங்கேஷ்கர் நலமாக உள்ளார். வயது முதிர்வு காரணமாக முன்னெச்சரிக்கை காரணமாக ஐசியு., பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மருமகள் தெரிவித்துள்ளார்.

Legendary Singer Lata Mangeshkar admitted to ICU after Corona result

ஹீரோவும் நான்தான்.. வில்லனும் நான்தான்..; அஜித்தின் சக்ஸஸ் பார்முலா

ஹீரோவும் நான்தான்.. வில்லனும் நான்தான்..; அஜித்தின் சக்ஸஸ் பார்முலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேர் கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் நடிகர் அஜித்குமார் இயக்குனர் வினோத் ஆகியோர் இணையவுள்ளனர். (வலிமை படம் இன்னும் ரிலீசாகவில்லை)

இது அஜித் நடிப்பில் உருவாகவுள்ள 61வது படமாகும். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அஜித் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு வேடத்தில் ஹீரோவாகவும் மற்றொரு வேடத்தில் வில்லனாகவும் அஜித் நடிக்கவிருக்கிறாராம்.

இதற்கு முன்பு எஸ்ஜே. சூர்யா இயக்கிய வாலி படத்தில் அப்படியான ஹீரோ – வில்லன் வேடத்தை செய்திருந்தார் அஜித்.

அதுபோல வரலாறு படத்தில் 3 வேடங்களில் நடித்திருந்தார். அதிலும் நெகட்டிவ் பாசிட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.

மேலும் மங்காத்தா படத்தில் நெகட்டிவ்வான ஹீரோ கேரக்டரில் அசத்தியிருந்தார் அஜித்.

இந்த படங்கள் அனைத்தும் அஜித்துக்கு நல்ல பாராட்டுக்களை பெற்றுத் தந்தது.

Actor Ajith plays dual role in AK 61

எல்லாருக்கும் என் பெற்றோர் போல கிடைக்கனும்.. – டாக்டர் சிம்பு

எல்லாருக்கும் என் பெற்றோர் போல கிடைக்கனும்.. – டாக்டர் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என தன் அப்பா டி. ராஜேந்தரை போல பன்முகத்திறமை கொண்டவர் சிலம்பரசன்.

(ஒரே ஒரு வித்தியாசம்.. எந்தவொரு நடிகைகளையும் தொட்டு நடிக்க மாட்டார் டி.ராஜேந்தர். அப்பாவுக்கு நேர் எதிர் சுபாவம் கொண்டவர் சிம்பு.)

9 மாத குழந்தையாக இருக்கும்போது படங்களில் நடிக்க தொடங்கியவர் சிம்பு. தற்போது 39 வயதாகிறது. இதுவரை படங்களில் நடித்து வருகிறார்.

மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்கள் இவரது திரைப்பயணத்தில் முக்கியமானவை ஆகும்.

சினிமா தவிர சமூக சார்ந்த ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற பிரச்சினைகளில் தைரியமாக கருத்து கூறியவர். நடிகர் சங்க தேர்தல் சமயத்தில் விஷாலை சரமாரியாக கேள்விகளால் துழைத்தவர் இவர்.

2021ல் நவம்பரில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது பத்து தல, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி வருவதற்காக சிம்புவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் சில தினங்களுக்கு முன் அறிவித்தது.

இந்த நிலையில் இன்று ஜனவரி 11ல் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவருக்கு இந்த டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சிம்புவின் பெற்றோர் டி.ராஜேந்தர் – உஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிம்பு பேசியதாவது…

இது எனக்கான வெற்றி இல்லை. என்னை 9 மாத குழந்தையிலிருந்து என்னை இந்த பயணத்தில் இணைத்தவர்கள் என் தாய் தகப்பன்தான்.

எனவே இந்த பெருமைகள் அனைத்தும் அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும். அவர்களை போன்ற பெற்றோர் எனக்கு அடுத்த ஜென்மத்தில் கிடைப்பார்களா? எனத் தெரியாது.

குழந்தைகளுக்கு பிடிச்சதை செய்து கொடுக்க எல்லா குழந்தைகளுக்கும் இதுபோல பெற்றோர் கிடைக்க வேண்டும்.
இறைவனுக்கு நன்றி சொல்கிறேன் என நெகிழ்ச்சியாக பேசினார் டாக்டர் சிம்பு.

ஏழை பணக்காரன்.. உலகத்தை அழிச்சிடலாம்..; விரக்தியில் விஜய் ஆண்டனி

ஏழை பணக்காரன்.. உலகத்தை அழிச்சிடலாம்..; விரக்தியில் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகையே அச்சுறுத்தும் வைரசாக கோவிட் 19 உருவெடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இதன் வீரியம் குறையாமல் பல வைரஸ் ரூபங்களில் வந்து மக்களை மரண படுக்கையில் வைத்திருக்கிறது.

தற்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா 3வது அலை உருவாகியுள்ளது.

ஏழை பணக்காரன் யாராக இருந்தாலும் இந்த தொற்றுக்கு விதிவிலக்கல்ல

அரசியல் பிரபலங்களும் நடிகர், நடிகைகளும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவதை நாம் தினம் தினம் செய்தியாக பார்க்கிறோம்.

இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி தன் சமூகவலைதள பக்கத்தில் ‛‛‛‛கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

விரக்தியின் உச்சத்தில் விஜய் ஆண்டனி பதிவிட்ட இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.

Vijay Antonys recent tweet about Corona made controversy

More Articles
Follows