ஹரீஷ் கல்யாண் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ஜெர்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாழ்க்கையின் பெரும்பாலான ஆச்சர்யங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தான் வரும். குறிப்பாக, சினிமாவில், சிவப்பு கம்பளங்கள் தன்னிச்சையாக விரிக்கப்படும். அப்படி தான் தெலுங்கு சினிமாவில் ஹரீஷ் கல்யாணுக்கும் ஒருவித வரவேற்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டு மக்களின் இதயங்களை கவர்ந்த ஹரீஷ் கல்யாண், தெலுங்கு சினிமாவிலும் நானி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஜெர்சி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பெரும் அளவில் பாராட்டுக்களை பெற்று வருகிறார். சமூக வலைத்தளங்களிலும், விமர்சனங்களிலும் அவர் நடித்த சக்தி வாய்ந்த கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

“இது முற்றிலும் நானே எதிர்பாராதது, என் கதாபாத்திரத்தை கவனித்து, இந்த அளவிற்கு என்னை பாராட்டுவார்கள் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. தெலுங்கு ரசிகர்களின் அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கதாபாத்திரத்திற்கு என்னை நடிக்க கேட்டபோதே அந்த கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்தேன், ஆனால் இந்த அளவுக்கு மக்களை சென்று சேரும் என்று நினைக்கவில்லை. இதில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், புகழ்பெற்ற இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் எனக்கு ஃபோன் செய்து என்னை பாராட்டுவது தான். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த ஒவ்வொருவருக்கும், குறிப்பாக என் நண்பர் நானிக்கும் நான் நன்றி கூறுகிறேன். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றியை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார் ஹரிஷ் கல்யாண்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படமான ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22, 2019 முதல் தொடங்குகிறது. ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலன் கோபாலன் தயாரிக்க, சஞ்சய் பாரதி இயக்கும் இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

ஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் “ கள்ளத்தனம் “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கண்ணன் கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக K.தங்கவேலு தயாரித்திருக்கும் படம் “ கள்ளத்தனம் “இந்த படத்தின் யுகன், வினோ இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.கதாநாயகிகளாக சொப்னா நகினா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் மணிகண்ணன், முல்லை, அம்மு மார்டின்,அல்வாவாசு, கோவைசெந்தில், கிச்சி மார்டின் இவர்களுடன் ஏராளமான கூத்துப்பட்டறை நடிகர்களும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – எடிசன் M.S. அமர்நாத்

இசை – ரவிகிரண்

எடிட்டிங் – லட்சுமணன்

நடனம் – ராஜு

தயாரிப்பு – K.தங்கவேலு

இணை தயாரிப்பு – T.R.கார்த்திக் தங்கவேலு

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – C.தண்டபாணி

படம் பற்றி இயக்குனர் C.தண்டபாணி கூறியது..

ஹீரோ கிராமத்தில் வேளாண்மை படிப்பு படித்துவிட்டு அங்குள்ள விவசாய மக்களுக்கு மண் ஆராய்ச்சி செய்து உதவி வருகிறார். அந்த சமயத்தில் ஊரில் வில்லன் பல வகையில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறான். எதிர்பாரா விதமாக ஹீரோ வீட்டில் புதையல் சம்மந்தமாக ஒரு ஓலைச் சுவடி இருப்பதும் அதில் பல ரகசியங்கள் அடங்கி இருப்பதை எப்படியோ தெரிந்துகொண்டு வில்லன் அந்த ஓலைச் சுவடியை கைப்பற்ற நினைக்கிறான். இதனால் நாயகனுக்கும் வில்லன் கும்பலுக்கும் சண்டை நடக்கிறது. இறுதியில் ஓலைச்சுவடியை வில்லன் கைபற்றினானா இல்லை நாயகன் அதை தடுத்தாரா புதையல் யாருக்கு கிடைத்தது என்பதை காமெடி கலந்து கமர்ஷியலாக சொல்லுகிறோம்.

படப்பிடிப்பு செங்கம் சாத்தனூர், செஞ்சி, வேலூர் போன்ற இடங்களில் நடைபெற்றது. விரைவில் படம் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர் C.தண்டபாணி.

முன்னாள் மிஸ் இந்தியாவை கரம் பிடிக்கவுள்ளார் நடிகர் மஹத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்புவின் நண்பரும் நடிகருமான மகத் திருமணம் செய்யவுள்ளார்.

இவர் அஜித்துடன் மங்காத்தாவில் நடித்திருந்தார்.

அதன் பிறகு பிரியாணி, வடகறி, சென்னை 28, அன்பானவன் அடங்காதன் அசராதவன் படங்களில் நடித்திருந்தார்.

தற்போது வந்தா ராஜாவாத்தான் வருவேன், யாகன், கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

இந்நிலையில் 2012ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற பிராச்சி மிஸ்ராவை காதலித்துள்ளார்.

விரைவில் இவர்கள் திருமணம் செய்யவுள்ளனர்.

அடிக்கடி அரசியல் பேசும் சிம்பு ஏன் ஓட்டு போடவில்லை தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாடாளுமன்றத் தேர்தல் தமிழக வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இதில் நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.

தி.நகர் பகுதி வாக்குச் சாவடியில் தான் சிம்புவும் ஓட்டு போடுவார் என செய்தியாளர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை.

இதற்கு அவர் தந்தையும், நடிகரும், அரசியல் தலைவருமான டி.ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

சிம்பு எப்போதும் வாக்களிக்க தவறியதில்லை. ஆனால், தற்போது அவர் லண்டனில் இருக்கிறார். அவரால் வர முடியாத சூழ்நிலை. என தெரிவித்துள்ளார்.

ஓட்டு போடுங்க… ஸ்டார் ஹோட்டல்ல செமயாய் சாப்பிடுங்க..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குடிமக்களாகிய நாம் அனைவரும் தவறாமல் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் 50 சதவீத தள்ளுபடியில் உணவருந்தும் ஒரு வாய்ப்பு.

ஏதோ பல காரணங்களைக் காட்டி தேர்தலில் நாம் வாக்களிக்க பலரும் முன்வருவதில்லை. ஒரு நாட்டினுடைய வளர்ச்சி என்பது அந்தத் தேர்தலில் மக்களின் பங்களிப்பை ஒட்டியே இருக்கும்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஒட்டுமொத்தமாக தேர்தல் வாக்குப்பதிவு என்பது 65 முதல் 75 சதவீதம் வரை மட்டுமே உள்ளது.

ஆனால் வெளிநாடுகளில் வாக்குப்பதிவு சதவீதம் 90 ஐ தாண்டுகிறது. எனவே உண்மையான ஜனநாயகம் மலர அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டியது அவசியம் என்கிறார் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள Clarion President ஹோட்டல் உரிமையாளர் அபூபக்கர்/

18 ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 50 சதவீத தள்ளுபடி விலையில் தரமான உணவுகள் இங்கு கொடுக்கப்படுகிறது.

வாக்களித்ததன் அடையாளமாக ஆட்காட்டி விரலின் மையை காட்டினால் போதும்.18 முதல் 21ம் தேதி வரை ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஹோட்டலுக்கு வரலாம் ஒவ்வொரு முறை உணவு அருந்தும் போதும் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வாக்களிப்பது என்பது நம் மிக முக்கியமான கடமை என்பதை உணரும் நோக்கமாக இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறது கிளாரியன் பிரசிடெண்ட் ஹோட்டல் நிர்வாகம்.

Poll your vote and get offer in Clarion President hotel

20 நாட்களில் ‘பெருநாளி’ சூட்டிங் ஓவர்; இயக்குநர் ‘சிட்டிசன்’ மணி அசத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் ‘சிட்டிசன்’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வரும் ‘சிட்டிசன்’ மணி, இதுவரை சுமார் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பதோடு, அஜித், விஜய், ரஜினி, சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருபவர், வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடியில் கலக்கியவர், தற்போது இயக்குநராக கலக்க ஆரம்பித்துவிட்டார்.

நடிகர்கள் பலர் இயக்குநர் அவதாரம் எடுத்தாலும், காமெடி நடிகர்கள் படம் இயக்குவது அறிதான ஒன்று தான்.

அந்த வகையில், ‘பெருநாளி’ படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் ‘சிட்டிசன்’ மணி, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் தனது படக்குழுவினருடன் நாகர்கோவிலில் முகாமிட்டவர், தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.

தற்போது, படத்தின் பின்னணி வேலைகளில் பிஸியாக இருப்பவரிடம், படம் குறித்து கேட்கையில், தாய்மாமன் – மருமகள் செண்டிமெண்ட் தான் படம். குடும்ப உறவுகளின் செண்டிமெண்ட்டை பற்றி படம் பேசினாலும், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்துவிதமான அம்சங்கள் நிறைந்த முழுமையான கமர்ஷியல் படமாக இருக்கும்.

சுமார் 30 ஆண்டுகளாக சினிமாவில் பல துறைகளில் பணியாற்றியிருக்கிறேன். அதில் கிடைத்த அனுபவங்களை வைத்து, சரியான முறையில் திட்டமிட்டு இப்படத்தை குறுகிய காலத்தில் முடித்திருக்கிறேன்.

விரைவில் படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம். அதன் பிறகு படத்தை ரிலீஸ் செய்யும் பணியில் இறங்க இருக்கிறேன்.” என்றார்.

தஷி இசையமைப்பில் 6 பாடல்கள் இடம்பெற்றிருக்கும் இப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்ட பாடல் ஒன்றும் இடம்பெற்றிருக்கிறதாம்.

கானா உலகநாதன் பாடியிருக்கும் இந்த பாடல், இதுவரை இல்லாத அளவுக்கு ஜெயலலிதாவின் புகழை இப்பாடலில் சொல்லியிருக்கிறார்களாம்.

ஆர்.குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பவர் சிவா நடனம் அமைத்திருக்கிறார்.

தீப்பொறி நித்யா சண்டைப்பயிற்சியை கவனித்துள்ளார். படத்தொகுப்பை பன்னீர் கவனிக்கிறார்.

மேலும், இப்படத்தில் காமெடி நடிகர் கிரேன் மனோகர், சிறந்த குணச்சித்திர நடிகராக பலரது பாராட்டுக்களை பெரும் விதத்தில் முக்கிய கதாபத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறாராம்.

இதுவரை பார்க்காத ஒரு கிரேன் மனோகர் இதில் பார்க்கலாமாம். அதேபோல், படத்தின் ஹீரோயின் மதுனிக்கா கொடுத்த ஒத்துழைப்பும் படப்பிடிப்பு விரைவாக முடிய ஒரு காரணமாம்.

சிசர் மனோகர், கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்க, ஏராளமான காமெடி நடிகர்களும் நடித்திருக்கும் இப்படத்தை ரோஷினி கிரியேஷன்ஸ் சார்பில் மார்கிரேட் அந்தோணி தயாரிக்கிறார்.

Citizen movie fame Mani became director in Perunaazhi movie

More Articles
Follows