சிம்பு-சந்தானம் கூட்டணியில் பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண்

சிம்பு-சந்தானம் கூட்டணியில் பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Harish Kalyan crooned in Simbu music for Sakka Podu Podu Rajaநடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முக திறமைக் கொண்ட சிம்பு முதன்முறையாக இசையைமப்பாளர் அறிமுகமாகியுள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’.

இப்படத்தை ‘விடிவி’ கணேஷ் தயாரிக்க, சேதுராம் இயக்கியுள்ளார்.

சந்தானம், வைபவி சாண்டில்யா, விவேக், ரோபோ சங்கர், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ‘சக்க போடு போடு ராஜா’விற்கான டைட்டில் பாடலை ஹரிஷ் கல்யாண் பாடியிருக்கிறாராம்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீடு அண்மையில் நடந்து முடிந்த நிலையில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Harish Kalyan crooned in Simbu music for Sakka Podu Podu Raja

நான் சொன்னா அதை செய்ய 5 லட்சம் பேர் உள்ளனர்… கமல் பேச்சு

நான் சொன்னா அதை செய்ய 5 லட்சம் பேர் உள்ளனர்… கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

5 Lakhs peoples are there to do my words into action says Kamalசென்னையில் விவசாய சங்க ஒருங்கிணைப்பு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் கலந்துக் கொண்ட கமல்ஹாசன் பேசியதாவது…

நான்உழவன் மகன் இல்லை. ஆனால் உழவனின் மருமகன்.

நான் ஓட்டு சேகரிக்க இங்கு வரவில்லை. நான் தமிழகத்திற்கு சோறு சேகரிக்க வந்துள்ளேன்.

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் என்னை பொறுக்கி என்றார். அறிவு, ஞானத்தை நான் எங்கு வேண்டுமானாலும் பொறுக்குவேன்.

திருடனை நாம் துரத்தும்போது அவன் நம்மை எதிர்த்து கேள்வி கேட்கும் நிலைதான் இன்று உள்ளது.

எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்தான் என்பதை மறந்து விட்டீர்கள்.

தமிழகமும் மராட்டியமும்தான் இந்தியாவில் அதிகளவில் வரி கட்டும் மாநிலங்களாக உள்ளது.

மற்ற மாநிலங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஹைட்ரோ கார்பனை விட விவசாயம் மிகவும் முக்கியமானது.

கிணறு இன்று தற்கொலை செய்யும் இடமாக மாறிவிட்டது.

ஒரு ஆற்றையே காணாமல் போக செய்துவிட்டார்கள் அரசு அதிகாரிகள்.

குளங்களை, ஏரிகளை சரிசெய்ய நான் இணைவேன்.

நான் சொல்வதை செய்வதற்கு 36 ஆண்டுகளாக 5 லட்சம் பேர் உள்ளனர்.

அவர்கள் குழுவாக பிரிந்து விவசாயிகளை சந்தித்து உதவிக்கு வருவார்கள்.” இவ்வாறு பேசினார் கமல்ஹாசன்.

5 Lakhs peoples are there to do my words into action says Kamal

புதிய கடவுளை அறிமுகப்படுத்தி வணங்க சொன்ன கமல்ஹாசன்

புதிய கடவுளை அறிமுகப்படுத்தி வணங்க சொன்ன கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan introduced New God and asked farmers to worshipசென்னையில் விவசாய சங்க ஒருங்கிணைப்பு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது…

என்னைப் பார்த்து, ட்விட்டரில் இருந்து சாக்கடை அள்ள வாருங்கள் என்கிறார்கள். ஒரு ஆள் எத்தனை சாக்கடைகளை அள்ள முடியும்.

அருகில் உள்ள கேரளா மாநிலம் கூட நாம் சோறு போடுவோம் என காத்து கொண்டிருக்கிறார்கள்.

விவசாயிகளுடன் கைகோர்க்க நான் இங்கு வந்துள்ளேன்.

சினிமா இல்லாமல் இருந்துவிடலாம். ஆனால் உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் மக்கள் இருக்க முடியாது.

நான் பகுத்தறிவாளன். கடவுள் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள்.

நீங்கள் அத்துடன் சேர்ந்து புதிய கடவுள் ஒன்றையும் வணங்க வேண்டும்.

மழை, ஏரி, ஆறுகளை வணங்க கற்றுக் கொள்ளுங்கள்.” என்று கமல் பேசினார்.

Kamalhassan introduced New God and asked farmers to worship

மெர்சல் 2… விஜய்க்காக காத்திருக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்

மெர்சல் 2… விஜய்க்காக காத்திருக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay with producer hema rukmaniஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தை தன் 100வது படைப்பாக தயாரித்தது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்.

இப்படத்திற்கு பாஜக.வின் எதிர்ப்பு கிளம்பியதால் படம் வேறு விதத்தில் இந்தியா முழுக்க பிரபலமானது.

படம் வெளியாகி 2 வாரங்களை கடந்துள்ளநிலையில் ரூ. 200 கோடி வசூலையும் அள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் 2ஆம் பாகம் வெளிவருமா? என கேள்வியும் எழுந்துள்ளது.

விஜய் சார் ஓகே சொன்னால் மெர்சல் 2 படத்தை தயாரிக்க காத்திருக்கிறோம் என தயாரிப்பு நிறுவனமே கூறிவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.

மேலும் தன் அடுத்த படமும் விஜய் உடன்தான் என ஒரு பேட்டியில் அட்லி தெரிவித்திருந்தார்.

எனவே மெர்சல் 2 படம் உருவாக நிச்சயம் வாய்ப்புள்ளது என நம்பலாம்.

விஜய்-முருகதாஸ் படத்திற்கு யாரும் எதிர்பாராத இசையமைப்பாளர்.?

விஜய்-முருகதாஸ் படத்திற்கு யாரும் எதிர்பாராத இசையமைப்பாளர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sam cs musicமெர்சல் படத்தை முடித்துவிட்டு ஏஆர். முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதுநாள் வரை யுவன் அல்லது அனிருத் அல்லது ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில் சாம் பற்றிய பேச்சுவார்த்தை எழுந்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

Music composer Sam CS may score music for Vijay 62

தீரன் அதிகாரம் ஒன்று என்ன மாதிரியான கதை..? கார்த்தி விளக்கம்

தீரன் அதிகாரம் ஒன்று என்ன மாதிரியான கதை..? கார்த்தி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Theeran Adhigaaram Ondru story revealed by movie teamட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கார்த்தி, தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, ரகுல் ப்ரீத் சிங், இயக்குநர் H.வினோத், ஜிப்ரான், கலை இயக்குநர் கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கார்த்தி பேசியது…

தீரன் அதிகாரம் ஒன்று வழக்கமான போலீஸ் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் புதுமையான படமாக இருக்கும்.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்துக்கு பின் இந்த படத்தின் படபிடிப்புக்காக ராஜஸ்தான், ஜெய்சால்மர் போன்ற இடங்களுக்கு படபிடிப்புக்காக சென்றோம்.

அங்கே கடுமையான வெயில் மற்றும் குளிரை தாங்கிக்கொண்டு படபிடிப்பை நடத்தினோம். இந்த படத்தின் கதை நான் “ சிறுத்தை “ படத்துக்காக படபிடிப்பில் இருந்த போதே எனக்கு தெரியும்.

அப்போது வந்த அதே கதை மீண்டும் என்னிடம் வந்தது. நம்மை சுற்றியே இந்த கதை வந்துகொண்டு இருக்கிறதே என்று நான் யோசித்து இந்த கதையில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து நடித்தேன்.

நாம் ரோட்டில் நடந்து செல்லும் போது எதிரே வரும் யாரும் நம்முடைய கண்ணை பார்க்க மாட்டார்கள்.

அதையெல்லாம் தாண்டி ஒருவர் நம்முடைய கண்ணை பார்ப்பார் அவரிடம் சென்று பேசினால் அவர் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை நம்மிடம் சொல்லுவார் என்று என்னிடம் “ மாற்று உலகத்தை “ பற்றி அதிகம் படித்த என்னுடைய நண்பன் கூறுவார்.

அதே போல் தான் இந்த படத்தின் கதை என்னை சுற்றியே வந்துக்கொண்டே இருந்தது. நாங்கள் ராஜஸ்தானுக்கு படபிடிப்புக்கு சென்ற போது அங்கே ஓரிடத்தில் இதோ நம்ம கார்த்தி வரார் என்ற தமிழ் குரல் கேட்டது.

அவர்கள் எல்லாம் யாரென்று பார்த்தால் நம்ம சென்னை, சௌகார்பேட்டை மக்கள் தான். அவர்களிடம் நீங்கள் எப்படி இங்கே எப்படி என்று கேட்டபோது “ பூஜைக்காக வந்தோம், குடும்ப நிகழ்வுக்காக வந்தோம் “ என்று பதில் அளித்தனர்.

தீரன் அதிகாரம் ஒன்று முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும். ரகுல் ப்ரீத் சிங் உடன் நான் நடித்த காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது.

இந்த படத்தில் காலையில் காரை ஸ்டார்ட் பண்ணும் போது கேட்க ஒரு அழகான மெலடி பாடல், காரை எனர்ஜியுடன் ஓட்ட ஒரு ஹிந்தி குத்து பாடல், காரை வேகமாக ஒட்டி செல்லும் போது கேட்க ஒரு ஹீரோ இன்ட்ரோ பாடல், மீண்டும் ஒரு அழகான மெலடி என்று மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல்களை நமக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் தந்துள்ளார்.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் எந்த போலீஸ் படத்தின் சாயலும் தெரியாது. இயக்குநர் என்னிடம் என்ன கேட்டாரோ அதை நான் இந்த படத்தில் தந்துள்ளேன்.

தீரன்-ல் நான் இயக்குநரின் நடிகராக தான் இருந்துள்ளேன். இந்த படம் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்றார் கார்த்தி.

நிகழ்ச்சியில் இயக்குநர் வினோத் பேசியது

போலீஸ் என்றாலே தவறானவர்கள் தான் என்ற பிம்பம் மக்கள் மனதில் உள்ளது. அதற்கு காரணம் வாட்ஸ்ஆப்பில் வரும் போலீஸ் வீடியோக்கள் தான்.

அந்த தவறான பிம்பத்தை மாற்ற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். எப்படி சினிமாவில், அரசியலில், பத்திரிக்கையாளர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்களோ அதே போல் தான் காவல் துறையிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று இருக்கிறார்கள்.

நிஜமான போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அதேபோல் தான் இந்த படத்திலும் இருப்பார்கள். தீரன் அதிகாரம் ஒன்று கமர்ஷியல் படம். எல்லோருக்கும் இப்படம் ஒரு பாடம் போல் இருக்கும்.

ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஒரு படம். படத்தில் தீரன் திருமாறன் என்ற போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ளார்.

போலீசை சுற்றி நடக்கும் பரபரப்பான கதையாக இதை உருவாக்கியுள்ளோம். ஜிப்ரான் மிகச்சிறந்த பாடல்களை இந்த படத்துக்கு தந்துள்ளார் என்றார் இயக்குநர் வினோத்.

Theeran Adhigaaram Ondru story revealed by movie team

Theeran Adhigaaram Ondru Audio Launch Photos (19)

More Articles
Follows