ஜெய்ப்பூர் கோட்டையில் சிந்தி முறைப்படி காதலனை கரம்பிடித்தார் ஹன்சிகா (படங்கள்)

ஜெய்ப்பூர் கோட்டையில் சிந்தி முறைப்படி காதலனை கரம்பிடித்தார் ஹன்சிகா (படங்கள்)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா மோத்வானி.

தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஷால், ஆர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

சிம்பு நடித்த ‘மகா’ திரைப்படம் ஹன்சிகாவின் 50 வது படமாகும்.

ஹன்சிகா மோத்வானி

சினிமா துறை மட்டுமின்றி இவர் சமூக சேவைகளிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். நிறைய குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் தன் காதலனை வெளி உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்படி ஹன்சிகாவிற்கும் அவரது காதலர் சோஹேல் கதுரியாவுக்கும் சிந்தி முறைப்படி திருமணம் நடைபெற்றது.

ஹன்சிகா மோத்வானி

இதற்கான நிகழ்வு கடந்த ஓரிரு தினங்களாகவே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முந்தோடா கோட்டையில் நடந்து வருகிறது.

டிசம்பர் 2 தேதியிலிருந்து.. முதல் நாளில் மருதானி வைக்கும் நிகழ்வும், 2வது நாளில் இசை நிகழ்ச்சியும் நடந்தது.

ஹன்சிகா மோத்வானி

நேற்று டிசம்பர் 4 காலையில் மஞ்சள் வைக்கும் சடங்கு நடந்தது. அதனை தொடர்ந்து இறுதி நிகழ்ச்சியாக திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு ஹன்சிகா மெரூன் கலர் லெஹங்காவும் நிறைய தங்க ஆபரணங்களும் அணிந்திருந்தார்.

தனது சோசியல் மீடியா பக்கத்தில் திருமண சடங்கு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

ஹன்சிகா மோத்வானி

எனவே ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் ஹன்சிகாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமண விழாவுக்கு அழைத்துள்ளார் ஹன்சிகா என்பது குறிப்பிடத்தக்கது.

ஹன்சிகா மோத்வானி

Hansika Motwani-Sohael Khaturiya are married

நடிகை மஞ்சுவுக்காக ‘துணிவு’ பட கதையை மாற்றிய இயக்குநர் வினோத்

நடிகை மஞ்சுவுக்காக ‘துணிவு’ பட கதையை மாற்றிய இயக்குநர் வினோத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘துணிவு’ படத்தை வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்து உள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இதில் நாயகியாக மஞ்சுவாரியர் நடிக்க முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார்.

விரைவில் ‘துணிவு’ படம் வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் குறித்து பேசி வருகிறார் இயக்குனர் வினோத்.

அவரின் பேட்டியில்… “துணிவு படத்தில் நாயகியாக நடிக்க மஞ்சு வாரியாரை அணுகினோம். அப்போது அவர் வழக்கமான வேடங்களை செய்து விட்டேன்.

கொஞ்சம் வில்லத்தனம் கலந்த கேரக்டர் என்றால் நான் பணிபுரிய தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார். எனவே மஞ்சுவுகாக சில மாற்றங்களை படத்தில் செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கவில்லை. அவர் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த நடிகர் வைரவனின் குடும்பத்துக்கு உதவும் ‘கட்டா குஸ்தி’ நாயகன்

மறைந்த நடிகர் வைரவனின் குடும்பத்துக்கு உதவும் ‘கட்டா குஸ்தி’ நாயகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’ மற்றும் ‘பாண்டியநாடு’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹரி வைரவன்.

அதன்பிறகு சினிமா வாய்ப்பு இல்லாமல் இவர் இருந்து வந்துள்ளார்.

இதனிடையில் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் ஓரிரு தினங்களுக்கு முன் மரணமடைந்தார்.

இவருடன் பணியாற்றிய நடிகர் அப்பு குட்டி இயக்குனர் சுசீந்திரன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

மேலும் நேற்று டிசம்பர் 4ல் சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்ற ‘கட்டா குஸ்தி’ பட வெற்றி விழாவில் கலந்து கொண்டார் விஷ்ணு விஷால்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது…

“வைரவன் என்னை மச்சான் என்று தான் அழைப்பார். அவருடன் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பேன்.

கடந்த ஆறு மாதமாக அவரது குடும்பத்திற்கு உதவி செய்து வருகிறேன். சில தினங்களுக்கு முன்பு கூட அவர் எனக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

தற்போது அவர் மரணம் அடைந்துள்ளார் அவரது குழந்தைகளின் கல்விச் செலவை நான் ஏற்பதாக குடும்பத்தாரிடம்உறுதி அளித்து இருக்கிறேன்”

இவ்வாறு பேசினார் விஷ்ணு விஷால்.

வீழ்ச்சியில் விஜய்சேதுபதி.; ரஜினி கமல் விஜய் போல அஜித் கை கொடுப்பாரா.?

வீழ்ச்சியில் விஜய்சேதுபதி.; ரஜினி கமல் விஜய் போல அஜித் கை கொடுப்பாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பகாலங்களில் இவரது படங்களும் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது.

தென்மேற்கு பருவக்காற்று சூது கவ்வும் தர்மதுரை விக்ரம் வேதா நானும் ரவுடிதான் உள்ளிட்ட பல படங்கள் விஜய் சேதுபதிக்கு பெரும் பெயரை பெற்று தந்தது.

மேற்கண்ட படங்களில் கதையின் நாயகனாக நடித்து வந்த விஜய் சேதுபதி அதன் பிறகு மாஸ் ஹீரோவாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள மசாலா படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனால் தொடர் தோல்வியை சந்தித்தார்.

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’, ‘ஜூங்கா’, ‘சீதக்காதி’, ‘லாபம்’, ‘துக்ளக் தர்பார்’, ‘சிந்துபாத்’, ‘சங்கத்தமிழன்’, ‘அனபெல் சேதுபதி’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ஓரிரு தினங்களுக்கு முன் வெளியான ‘டிஎஸ்பி’ படமும் தோல்வி வரிசையில் இணைந்துள்ளது.

‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக.. ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு வில்லனாக.. ‘விக்ரம்’ படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்தார். இவர் வில்லனாக நடித்த இந்த மூன்று படங்களும் சூப்பர் ஹிட் ஆனது.

இனி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்துக்கு வில்லனாக நடித்தால் அடுத்த வெற்றியை கொடுக்கலாம் விஜய் சேதுபதி.

தற்போது ‘காந்தி டாக்ஸ்’, ‘கிறிஸ்மஸ்’, ‘ஜவான்’ உள்ளிட்ட ஹிந்தி படங்கள் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இவர் விஜய்சேதுபதிக்கு நெருங்கிய நண்பர் என்பதால் இதில் விஜய்சேதுபதி இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

JUST IN விஜய் – லோகேஷ் இணையும்  ‘தளபதி 67’ பூஜை நடைபெற்றது.; நாளை முதல் சம்பவம் ஸ்டார்ட்

JUST IN விஜய் – லோகேஷ் இணையும்  ‘தளபதி 67’ பூஜை நடைபெற்றது.; நாளை முதல் சம்பவம் ஸ்டார்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் – லோகேஷ் கூட்டணி அமைந்துள்ளது.

‘தளபதி 67’ என்று தற்காலிகமாக இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் விஜய் நடிக்க அனிருத் இசை அமைக்கிறார்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கிறார். இந்த நிறுவனம்தான் ‘வாரிசு’ படத்தின் தமிழக வெளியீடு உரிமையை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘தளபதி 67’ படத்தின் பூஜை இன்று டிசம்பர் 5 காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜையுடன் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் செல்போன்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. எனவே இது தொடர்பான படங்கள் வெளியாகவில்லை.

விரைவில் பட தயாரிப்பு நிறுவனமே இந்த புகைப்படங்களை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

நாளை டிசம்பர் 6ஆம் தேதி இந்த படத்தின் போட்டோ சூட் நடைபெறும்.

டிசம்பர் 7 முதல் 9 தேதி வரை ப்ரோமோ சூட் நடைபெறும் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

இதற்கான செட் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத. லேபிள் போடப்பட்டுள்ளது.

‘துணிவு’ படம் பேங்க் கொள்ளை கதை? நெகட்டிவ் ரோலில் அஜித்.? வினோத் சொல்லும் சீக்ரெட்

‘துணிவு’ படம் பேங்க் கொள்ளை கதை? நெகட்டிவ் ரோலில் அஜித்.? வினோத் சொல்லும் சீக்ரெட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்து வரும் ‘துணிவு’ படத்தை இயக்கியுள்ளார் வினோத்.

இந்த படம் பேங்க் கொள்ளை சம்பவத்தை பற்றிய கதை என கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வினோத் தன் சமீபத்தை பேட்டியில் ‘துணிவு’ படத்தின் கதை பற்றி தெரிவித்துள்ளார்.

அதில்… “இந்த படத்தின் கதையை பற்றி இப்போது சொல்ல முடியாது. அது மற்றவர்களின் யூகமாகவே இருக்கட்டும்.

ஒரு பேங்க் போன்ற செட் போட்டது உண்மைதான். எனவேதான் இந்த படத்தின் கதை பேங்க் கொள்ளை பற்றியது என்று செய்திகள் வலம் வந்தன.

இதில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறாரா அஜித்? எனவும் பேச்சுக்கள் எழுந்துள்ளன அதைப்பற்றி தெரிவித்தால் மீண்டும் மங்காத்தா போன்ற கதையா? என்ற யூகங்கள் எழும்.

எனவே துணிவு ரிலீஸ் வரை காத்திருங்கள்” என தெரிவித்துள்ளார் வினோத்.

More Articles
Follows