ஜி.வி.பிரகாஷின் அம்மா தயாரிக்கும் படத்திற்கு இப்படியொரு பெயரா?

ஜி.வி.பிரகாஷின் அம்மா தயாரிக்கும் படத்திற்கு இப்படியொரு பெயரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gvprakash mother Raihannah ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும், ஜி.வி.பிரகாஷின் அம்மாவுமான ரஹைனா தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார்.

‘யோகி அண்ட் ஃபிரெண்ட்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி முதல் படமாக ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ என்ற படத்தை தயாரிக்கிறார்.

இவருடன் சுபா மற்றும் வாசுகி ஆகியோரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

அசார் ஹீரோவாக நடிக்க, சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். விஜய் டிவி புகழ் விக்னேஷ் கார்த்திக் இயக்கவுள்ளார்.

இவர்களுடன் யோகி பாபு, மன்சூர் அலிகான், ‘வழக்கு என் 18/9’ புகழ் முத்துராமன், உமா பத்மநாபன், ‘இருக்கு ஆனா இல்ல’ புகழ் ஏதேன், சிங்கப்பூர் தீபன், விஜய் டிவி ராமர், டாக்டர் ஷர்மிலி மற்றும் விஜய் டிவி அர்ச்சனா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரெஹானாவே இசையமைக்கிறார். படத்தொகுப்பை பிரேம் குமார் கவனிக்க, ஒளிப்பதிவாளராக வம்ஷிதரன் பணிபுரிய இருக்கிறார்.

தலைக்கு எண்ணெய் வைக்காததால், படத்தின் நாயகன் ஒரு பிரச்சனையில் மாட்டி கொள்கிறாராம். அதிலிருந்து தப்பிக்க அவர் என்ன செய்கிறார்? என்பதை படத்தின் ஒருவரிக் கதை என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தன் மகன் ஜிவி. பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கிறாராம் ஏ.ஆர்.ரஹைனா.

அருண் விஜய்யுடன் இணைந்த த்ரிஷா

அருண் விஜய்யுடன் இணைந்த த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kuttram 23ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்த அருண் விஜய்க்கு ‘என்னை அறிந்தால்’ படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இதில் அஜித்-த்ரிஷா நாயகன் நாயகியாக நடிக்க, வில்லனாக அசத்தியிருந்தார் அருண்விஜய்.

தற்போது மீண்டும் ஹீரோவாக அறிவழகன் இயக்கியுள்ள ‘குற்றம் 23’ படத்தில் நடித்துள்ளார்.

மெடிக்கல் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் நாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார்.

ஐஸ் இன் சினிமாஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார் அருண் விஜய். இசை விஷால் சந்திரசேகர்.

இந்நிலையில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் கிடைத்த நட்பினால், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை த்ரிஷா வெளியிட்டுள்ளார்.

தனுஷுக்கு அவருடன் நடிக்க ஆசை… அவருக்கு அஜித்துடன் நடிக்க ஆசை.

தனுஷுக்கு அவருடன் நடிக்க ஆசை… அவருக்கு அஜித்துடன் நடிக்க ஆசை.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith and dhanushநான் ஈ மற்றும் புலி ஆகிய படங்களில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கிச்சா சுதீப்.

தற்போது தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகி வரும் முடிஞ்சா இவன புடி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் சுதீப்பின் சமீபத்திய பேட்டியில்…. அஜித்து;ம் நானும் நண்பர்கள் என்றாலும் அவர் படத்தில் இதுவரை நடிக்கவில்லை.

அட்லீஸ்ட் அவருக்கு வில்லனாக நடித்து விட ஆசை என தெரிவித்துள்ளார்.

சிலநாட்களுக்கு முன்பு நடைபெற்ற முடிஞ்சா இவன புடி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சுதீப்புடன் நடிக்க தனக்கு ஆசை என தனுஷ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

‘சாலை’ படத்தை எடுத்து மறுபிறவி எடுத்த சார்லஸ் குழுவினர்

‘சாலை’ படத்தை எடுத்து மறுபிறவி எடுத்த சார்லஸ் குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Saalai Making Stills (3)முகிலன் சினிமாஸும் தங்கத்துளசி புரொடக்‌ஷன்ஸும் இணைந்து தயாரிக்கும் படம் “சாலை”.

‘எப்படி மனதிற்குள் வந்தாய்’ படத்தின் நாயகன் விஸ்வா ஹீரோவாக நடிக்கிறார். கிரிஷா (KRISHA) ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

இவர்களுடன் ஆடுகளம்’ நரேன், ஸ்ருதி, அஜித் மணியன், ப்ரீத்தி வர்மா, ஆலன் ஜான் ஆகியோர் நடிக்கின்றனர்.

“நஞ்சுபுரம்”, “அழகு குட்டிச் செல்லம்” ஆகிய படங்களை தொடர்ந்து சார்லஸ் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தை முழுக்க முழுக்க காஷ்மீரில் படமாக்கியுள்ளனர்.

ஆபத்தான கொட்டும் பனிப்பொழிவுக்களுக்கிடையில் நாற்பத்தைந்து நாட்கள் இப்படத்தை படமாக்கி இருக்கிறார்களாம்.

ஜி. பாலமுருகன் ஒளிப்பதிவு செய்ய, வேத் சங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படம் குறித்து இயக்குனர் கூறியதாவது…

“சாலை படத்தை பொறுத்தவரை ‘பனி’ என்பதுதான் கதையின் த்ரில்லிங் பாயிண்ட்.

அழகிலும், பயத்திலும் ஒரு விஷுவல் ட்ரீட்டை இப்படம் தரும். சூட்டிங் முடித்து திரும்பியதே தங்களின் மறுபிறவி போல உள்ளது.” என்றார்.

‘டைரக்டர் சொல்ற மாதிரி என்னால நடிக்க முடியாது’ – ரித்விகா

‘டைரக்டர் சொல்ற மாதிரி என்னால நடிக்க முடியாது’ – ரித்விகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rithvika photosபரதேசி, மெட்ராஸ், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட படங்களில் நாயகி இல்லையென்றாலும் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் ரித்விகா.

தற்போது கபாலி படத்தில் ரஜினியை அப்பா, அப்பா என அழைத்து பாசமழை பொழிந்தவர் இவர்.

இவரின் சமீபத்திய பேட்டியில் தன் சினிமா அனுபவங்கள் குறித்த இவர் கூறியதாவது…

நான் 3ஆம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு நடிப்பு ஆசை இருந்தது.

எட்டு வயசு இருக்கும்போதே மாறுவேடப் போட்டி, பாட்டுப் போட்டி, நடனப் போட்டி என அனைத்திலும் ஆர்வமாக கலந்துப்பேன்.

ஆர்வம் இருக்கிற துறையில நம்ம திறமையை வெளிப்படுத்தினா நிச்சயம் ஒரு அடையாளம் கிடைக்கும் நான் நம்புறேன்.

காலேஜ் நாட்கள்ல ஷார்ட் பிலிம்ல நடிக்க ப்ரெண்ட்ஸ் கூப்பிடும்போது சந்தோஷமா இருக்கும்.

புரஃபெஷனல் ஆக்டர் மாதிரி நடிக்கிற அப்படின்னு எல்லோரும் சொன்ன பிறகுதான் சினிமாவுக்கு முயற்சி பண்ணினேன்.

அப்போ முதல் படமே பாலா சாரின் பரதேசி படம் அமைஞ்சது.

கபாலியில நடிக்கும்போது ரஜினி சார் “என்னப்பா இந்தப் பொண்ணு நடிப்புல இப்படி பின்னுது” சொன்னாரு.

நான் நடிப்புக்காக ரொம்ப ரிஸ்க் எடுக்க மாட்டேன். டைரக்டர் நடிச்சுக்காட்டி இப்படி செய்யுங்கன்னு சொன்னா என்னால முடியாது.

என்னோட கேரக்டரை நான் தெளிவா புரிஞ்சிப்பேன். அதை மைண்ட்ல ஏத்திப்பேன்.

அப்புறம் டைரக்டர் சொல்றதே கேட்டுட்டு அப்படியே பண்ணிடுவேன்.” என்றார்.

பிறந்தநாளில் தனுஷுக்கு இன்ப அதிர்ச்சியளித்த ரஜினி

பிறந்தநாளில் தனுஷுக்கு இன்ப அதிர்ச்சியளித்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and dhanushதனுஷ் நேற்று (ஜூலை 28) தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இவர் தற்போது நடித்துவரும் வடசென்னை பட குழுவினருடனும் மற்றும் , தனது குடும்பத்தினருடனும் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.

இந்நிலையில் தனுஷே எதிர்பாராத வண்ணம் அங்கு வந்த ரஜினிகாந்த், தனுஷிற்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.

பிறந்தநாள் காணும் தனுஷுக்கு வாழ்த்து கூறி, ஆசீர்வதித்தார்.

அதன்பின்னர் கிட்டதட்ட சுமார் 3 மணி நேரம் ரஜினி அங்கு இருந்தாராம்.

தனுஷ் பிறந்த நாளுக்கு ரஜினி நேரில் வந்து வாழ்த்துதியது இதுவே முதல் முறை.

இப்புகைப்படங்களை தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் ரஜினியுடன் வடசென்னை படக்குழுவினர் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

More Articles
Follows