குரு உச்சத்துல இருக்காரு பட பாடல்கள் சூட்டிங் முடிந்தபிறகு இசையமைத்த தாஜ்நூர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் தண்டபாணி இயக்கத்தில், தனசண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குரு உச்சத்துல இருக்காரு’.

குருஜீவா நாயகனாகவும் பைசா திரைப்படத்தில் நடித்த ஆரா நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில், பாண்டியராஜன், MS பாஸ்கர், நமோ நாராயணன், இமான் அண்ணாச்சி, மனோ மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

குரு உச்சத்துல இருக்காரு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் வசந்த், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, பின்னணிப் பாடகர் வேல் முருகன் மற்றும் பாடலாசிரியர் சினேகன் வருகை தந்திருந்தனர்.

இவர்கள் முன்னிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டது.

வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இயக்குநரை, தயாரிப்பாளரை, படத்தில் பணிபுரிந்த கலைஞர்களை பாராட்டி படம் வெற்றி பெற வாழ்த்தினார்கள்.

குரு உச்சத்தில இருக்காரு திரைப்படத்திற்கு இசையமைத்த தாஜ்நூர், இதில் வேலை பார்த்தது தனக்கு ஒரு புது அனுபவத்தை தந்ததாகவும், பாடல் காட்சிகள் படப்பிடிப்புகள் முடிந்த பின்னால் இசையமைத்தது சவாலாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

சினேகன், பா. விஜய் மற்றும் மீனாட்சி சுந்தரம் இந்த திரைப்படத்தின் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்கள்.

விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

Guru Uchaththula Irukkaru Movie audio launch news updates

மோடி திட்டம்; சிம்பு அதிரடி; இன்று மாலை தட்டுறோம் தூக்றோம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சரித்திரத்தில் பல நாட்களை மறக்கமுடியாது. அதுபோல்தான் இந்த நாளும் அமைந்துவிட்டது.

ஆம். கடந்த 2016ல் நவம்பம் 8ஆம் தேதியை இந்தியர்கள் யாரும் மறக்கமுடியாது.

அன்றைய தினம் இரவில் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார் பிரதமர் மோடி.

இதனால் கறுப்பு பணம் ஒழியும் என தெரிவித்தார்.

இதற்கு ஆரம்பத்தில் வரவேற்பு இருந்தாலும் நாட்களுக்கு ஆக ஆக பணத்தட்டுப்பாட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

பல்வேறு எதிர்க்கட்சிகள் இன்றுவரை இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தினத்தை முன்னிட்டு டிமாண்டிசேஷன் ஆந்தம் என்ற பாடலை உருவாக்கியுள்ளனர்.

கபிலன் வைரமுத்து எழுதியுள்ள இந்த வரிகளுக்கு பாலமுரளிபாலு இசையமைத்துள்ளார்.

சிம்பு பாடியுள்ள இப்பாடலை இந்த பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

இப்பாடல் தட்டுறோம் தூக்றோம் என்ற படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடல் மோடியின் திட்டத்திற்கு ஆதரவாக உருவாக்கப்பட்டுள்ளதா அல்லது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதா? என்பதை இன்று 6 மணிக்கு தெரிந்துக் கொள்ளலாம்.

Simbu crooned Demonetization Anthem for Thatrom Thookrom movie

சுசீந்திரன் எப்போதும் சுதந்திரம் தருவார்… கவிஞர் வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படம் நாளை மறுநாள் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.

இதுகுறித்து இப்பட பாடலாசிரியர் வைரமுத்து கூறியதாவது…

“நெஞ்சில் துணிவிருந்தால்” இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படைப்பு.

இயக்குநர் சுசீந்திரன் சலிக்காத உழைப்பாளி, அழுக்காத போராளி, ஒரு கலையாளி. தன் படைப்புக்குள் ஓர் உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்ற துடிப்பு தான் சுசீந்திரனின் பலம்.

இதுவரைக்கும் அவர் படைத்த படைப்புகள் பெரும்பாலும் வெற்றியை மட்டுமே தொட்டு இருக்கின்றன அல்லது தோல்வியை தொட்டது இல்லை அந்த வரிசையில் இன்னொரு வெற்றிப்படைப்பான சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் வெளிவருகிறது.

இந்த படைப்பு சமூகத்திற்கு ஒரு செய்தி சொல்லும் படைப்பாக இருக்கும். தகுதிமிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும்.

இந்த மையத்தை வைத்து இந்த படைப்பு இயங்குகிறது. அரசியல், கலை, சமூகம், அரசாங்கம், கல்வி, நீதி, மருத்துவம் எல்லா துறைகளிலும் தகுதிமிக்கவர்கள் தகுதி மிக்க இடத்தை அடைய வேண்டும் என்ற உன்னத இலட்சியத்தை உள்ளடக்கமாக கொண்டு இந்த படம் இயங்குகிறது.

இதில் நானும் பாடல் எழுதியிருப்பது எனக்கு கிடைத்த பெருமையாகும். சுசீந்திரன் படங்களில் எனக்கு எப்பொழுதுமே ஒரு சுதந்திரம் தருவார். எழுதி கொடுத்து இசையமைக்கலாமே என்று அவர் புன்னகையோடு கேட்கின்ற போது நான் மகிழ்ந்து போவேன்.

அப்படி எழுதி கொடுத்து இமான் இசையமைத்து ஒரு பாடல் இந்த படத்தில் உள்ளது அது அனைவராலும் முணுமுணுக்கப்படும் என நம்புகிறேன்.

அறம் என்பது என்ன தர்மம் செய்வது மட்டுமே அறமா, அன்னமிடுவது மட்டுமே அறமா, அள்ளித்தருவது மட்டுமே அறமா இல்லை அறத்தின் எல்லைகளை இந்த படம் விரிவு செய்கிறது.

அதை என் வரி உறுதி செய்கிறது. எண்ணம் அறிந்து ஏழை பசிக்கு அன்னமிடுவது அறமாகும். அறிமுகம் இல்லா நோயாளிக்கு ஆப்பிள் தருவது அறமாகும்.

சொந்தகாரனுக்கு தருவதல்ல அறம், நண்பனுக்கு அள்ளித்தருவதல்ல அறம், தெரிந்த முகத்திற்கு தருவதல்ல அறம். தெரியாத முகத்திற்கு, அறிமுகம் இல்லா முகத்திற்கு எவன் ஒருவன் தருகின்றானோ அதுதான் அறம் மூத்து செறிந்த கிழவி நெற்றியில் முத்தம் தருவது அறமாகும்.

இரத்த பந்தம் இல்லாதவருக்கு இரத்த தானமும் அறமாகும். குற்றம், ஊழல் காணும் இடத்தில் கோவம் என்பது அறமாகும்.

போர்கள் கொலையை வெறுத்ததில்லை சமூகம் கொலையை வெறுத்திருக்கின்றது. யுத்தத்தில் கொலை தான் தர்மம்.

இந்த சமூகம் எப்போது யுத்தத்தில் இருக்கிறதோ அப்போது கொலையும் கூட அறமாகிவிடுகிறது என்ற கீதையின் கருத்தையும், யுத்த தர்மத்தையும் இந்த படம் முன்னிலை படுத்துகிறது.

இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் எல்லாம் இந்த படத்தின் பெருமைக்கு பெருமை சேர்க்கின்றார்கள். சுசீந்திரன் தொட்டதெல்லாம் வெற்றி படம்தான்.

இந்த படம் வெற்றியின் இன்னொரு உயரத்தை எட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எட்டும் என்று நம்புகிறேன் எட்டித் தீரும் என்று வாழ்த்துகிறேன்.”

இவ்வாறு வைரமுத்து கூறினார்.

Suseenthiran will give freedom to write lyricist says Vairamuthu

சுசீந்திரன் சொல்லும் கருத்து கண்டிப்பாக கவனிக்கப்படும்… சந்தீப் கிஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாநகரம் படத்தை தொடர்ந்து தமிழில் சந்தீப் கிஷன் நடித்துள்ள படம் நெஞ்சில் துணிவிருந்தால்.

இப்படம் குறித்து நாயகன் சந்தீப் கிஷன் பேசியதாவது…

மாநகரம் வெளியான பின் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் என்னை பாராட்டினார்கள்.

தமிழில் நிச்சயம் தரமான படைப்புகளில் மட்டும் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.

ஒவ்வொரு நாயகர்களுக்கும் ஒவ்வொரு அடையாளம் இருக்கும். அதை போல் என்னுடைய அடையாளமாக நான் தரமான படங்களில் நடிக்க வேண்டும். இது தான் என்னுடைய ஆசை.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று நான் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே முயற்சித்து வருகிறேன். வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிக்க முயற்சித்தேன் ஆனால் சில காரணங்களால் எனக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை.

இப்போது நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தின் மூலம் நாங்கள் இணைந்துள்ளது மகிழ்ச்சியாகவுள்ளது.

நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தில் நான் குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

விக்ராந்த் பாண்டிய நாடு படத்தை விட இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவருக்கும் இந்த திரைப்படத்தின் கண்டிப்பாக நல்ல பெயர் வாங்கி தரும். நானும் மெஹ்ரீனும் இனைந்து நடித்துள்ள காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. மாநகரம் திரைப்படத்தில் இருந்து இதில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் முற்றிலும் வேறுபடும்.

நான் படத்தை பார்த்துவிட்டேன் படம் சிறப்பாக வந்துள்ளது. என்னுடைய கதாபாத்திரமும் நிச்சயம் மக்களிடம் எனக்கு மீண்டும் நல்ல பெயர் வாங்கி தரும்.

இந்த படத்திலும் இயக்குநர் சுசீந்திரனின் பாணியில் சமூகத்துக்கு ஒரு நல்ல கருத்து ஒன்றை சொல்லியுள்ளோம் அது கண்டிப்பாக கவனிக்கப்படும் ஒன்றாக இருக்கும் என்றார் சந்தீப் கிஷன்.

Sundeep Kishan talks about Suseenthiran and Nenjil Thunivirudhal

நயன்தாரா உறுதியாக நின்று முடித்துக் கொடுத்தார்… அறம் இயக்குனர் கோபி நயினார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KJR ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் படம் அறம். அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். முன்னதாக நாயகியை மையப்படுத்திய பல படங்களில் நயன்தாரா நடித்திருந்தாலும், இந்த படம் சமூக பிரச்சினைகளை பற்றி பேசும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

டிவி நிகழ்ச்சிகளில் காமெடியாக பார்த்த என்னை சினிமாவில் முதன்முறையாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கோபி.

நடிகர் நாகேஷ் கூட முதல் படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் தான் நடித்தார், நீங்க நல்ல வருவீங்க என்று சொன்னார் இயக்குனர்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பெரிய ரசிகன், அவருடன் நடித்தது என் பாக்கியம் என்றார் நடிகர் பழனி பட்டாளம்.

இந்த காலகட்டத்துக்கு தேவையான மிகவும் முக்கியமான படம். படம் பார்க்கும் ரசிகர்களின் மனதை இந்த அறம் கனக்க செய்யும் படம்.

படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் சாட்டையடியாக இருக்கும். கோபி பெரிய புரட்சிகர இயக்குனராக வருவார் என்றார் நடிகர் ஈ ராம்தாஸ்.

ராஜா ராணி படத்தின் நயன்தாராவுடன் நடித்ததன் மூலம் நிறைய இளைஞர்களிடத்திலும் போய் சேர்ந்திருக்கிறேன்.

அவருடன் இரண்டாவது முறையாக சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி. கடும் வெயிலில் ஒரு பெருங்கூட்டம் மிகவும் கஷ்டப்பட்டு படத்தை உருவாக்கியிருக்கிறது என்றார் நடிகர் பாண்டியன்.

இந்த படத்துக்கு முன்பு, எனக்கு நிகழ்ந்த துயரத்தின் போது எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது பத்திரிக்கையாளர்கள் தான். அதன் மூலம் தான் இந்த மிகப்பெரிய வாய்ப்பே எனக்கு கிடைத்தது என்பது தான் உண்மை.

இயக்குனர் சற்குணம் தான் தயாரிப்பாளர் ராஜேஷை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதன்பின் நயன்தாராவுக்கு கதை சொல்ல வைத்தார்கள், சில மணி நேரங்களிலேயே எனக்கு அட்வான்ஸ் கொடுத்தார்கள். எல்லாமே ஒரு கனவு போல வேகமாக நடந்தது.

கதை ஓகே ஆனபிறகு கூட இந்த படத்தை தடுக்க நிறைய பேர் முயற்சி செய்தார்கள். ஆனாலும் நயன்தாரா மேடம் உறுதியாக இருந்து இந்த படத்தை முடிக்க துணை நின்றார்.

இந்த படத்தில் என்னை போலவே எல்லோருக்கும் சமூக அக்கறை இருந்தது, அதனால் தான் எல்லோரும் இந்த படத்துக்குள் வந்தார்கள். முதலில் பாடல்கள் வேண்டாம் என்று தான் முடிவெடுத்திருந்தோம். பின்னர் படத்தை முடித்த பிறகு இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு போட்டுக் காட்டி, உமாதேவியின் வரிகளில் பாடல்களை சேர்த்தோம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட என்னிடம் பேசிய நயன்தாரா, நிச்சயம் படம் வெற்றி பெறும். அடுத்த கட்டத்துக்கு உங்களை நகர்த்தும் வரை நான் உடன் இருப்பேன் என்றார்.

எங்களை போன்ற கலைஞர்களை பத்திரிக்கையாளர்கள் நீங்கள் தான் அடக்குமுறையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றார் இயக்குனர் கோபி நயினார்.

இந்த சந்திப்பில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், சௌந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Director Gopi Nainar talks about Nayanthara dedication in Aramm movie

கமல் அறிமுகப்படுத்திய செயலி திட்டம் கேரளா அரசின் காப்பி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் கமல் தன் அரசியல் பிரவேசத்தை பகிரங்கமாக அறிவித்தார்.

இன்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அறிமுகப்படுத்திய மையம் விசில் என்ற செயலியில் மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம் என தெரிவித்தார்.

அதன்படி #maiamwhistle #theditheerpomvaa #virtuouscycles #KH ஆகிய ஹேஸ் டேக்குளை பத்திரிகையாளர்கள் முன்பு அறிமுகப்படுத்தினார்.

இந்த செயலி தற்போது ஆராய்ச்சியில் உள்ளதால் 2018 ஜனவரி முதல் இது பயன்பாட்டிற்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதே போன்ற விசில் நவ் என்ற ஒரு ஆப் கடந்தாண்டு கேரளா அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே கேரளா முதல்வரும் என் முதல்வர் தான் என தெரிவித்திருந்தார் கமல்.

மேலும் அரசியல் கற்க கேரளா சென்று வந்தேன் எனவும் கமல் தெரிவித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Is Kamal copied new app maiam whistle concept from Kerala Govt

விசில் நவ் என்ற செயலி பற்றி தகவல்களை இங்கே காணலாம்..

http://www.whistlenowkerala.com/

More Articles
Follows