கபாலி டிக்கெட்டுக்கு ரூ. 5000 கொடுத்த கவர்னர் கிரண்பேடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தை தாண்டிய ரஜினியின் கபாலி புயல் புதுச்சேரியை விட்டு வைக்குமா என்ன?

அங்கு அம்மாநில கவர்னரே கபாலி படத்திற்கு இலவச டிக்கெட்டுகளை கொடுக்க முன்வந்தார்.

பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பவர்களுக்கும், தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டுபவர்களுக்கு ‘கபாலி’ படத்தின் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

எனவே இதற்காக 500 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் 145 குடும்பங்களில் கழிவறை கட்டப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி டிக்கெட்டுகளுக்கான ஆன தொகையில் கவர்னர் கிரண்பேடி ரூ. 5௦௦௦ வழங்கியிருக்கிறாராம்.

இவர் தவிர கவர்னர் மாளிகையின் மற்ற ஊழியர்களும் பணம் கொடுக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.

கபாலி பிரீமியர் ஷோ Live Updates

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகிய கபாலி படத்தின் முதல் ஷோ மலேசியாவில் தொடங்கிவிட்டது.

தமிழகத்தை விட மலேசியா ரசிகர்கள் அதிர வைத்து வருகின்றனர். மலாய் மொழியில் ரிலீஸ் ஆனாலும் தமிழ் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் கடவுள் இருக்கான் குமாரு படக்குழுவினர் தற்போது படத்தை பார்த்து வருகின்றனர்.

இயக்குனர் ராஜேஷ், தயாரிப்பாளர் சிவா உள்ளிட்டோர் அங்கு உள்ளனர்.

கபாலி படத்தை பார்க்க திருவிழா போல கூட்டம் கூடி வருகிறது.

குழந்தைகளுக்கு கபாலி டீ ஷர்ட் அணிந்து தீபாவளி ஆடை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

ரசிகர்களின் உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லையாம்.

தலைவர் தோன்றும் காட்சிகளுக்கு விசில் சத்தம் விண்ணை பிளக்கிறதாம்.

இதுவரையும் இனிமேலும் வரும் படங்களுக்கு இப்படி ஒரு ஓப்பனிங் கிடைக்குமா? என திரையுலகினரே ஆச்சரியப்பட்டு நிற்கின்றனர்.

ஒரு திருவிழா போல கூட்டம் அலை மோதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அடுத்த ஆண்டில் தனுஷின் ‘மாஸ்’ ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் யதார்த்த நடிகர் என பெயர் பெற்றவர் தனுஷ்.

எனவே இவருக்கு எல்லா வயதினரும் ரசிகர்களாக உள்ளனர்.

ஆனால் முற்றிலும் தன் ரசிகர்களுக்காக தனுஷ் நடித்த படம் மாரி.

பாலாஜி மோகன் இயக்கியிருந்த இப்படத்தில் காஜல் அகர்வால், ரோபா சங்கர், விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இப்படம் உண்டாக்கியதால் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

அடுத்த ஆண்டு 2017ஆம் ஜனவரி மாதத்தில் இதன் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் மீண்டும் விஜய்யுடன் இணையும் மோகன்லால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவில் அசைக்க முடியாத நடிகர்களில் ஒருவராக மோகன்லால் திகழ்ந்து வருகிறார்.

எத்தனையோ இளம் நடிகர்கள் வந்தாலும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தனக்கே என வைத்திருக்கிறார்.

இவர் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், படங்களை வாங்கி விநியோகம் செய்து வருகிறார்.

விஜய்யின் ஜில்லா படத்தை கேரளாவில் ரிலீஸ் செய்திருந்தார்.

தற்போது ரஜினியின் கபாலி பட உரிமையை பெற்றுள்ள இவர் எவரும் எதிர்பாராத வகையில் 306 தியேட்டர்களில் வெளியிட இருக்கிறார்.

இதனையடுத்து, பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 60 படத்தையும் கேரளாவில் வெளியிடவிருக்கிறாராம் மோகன்லால்.

ஜில்லா படத்தில் விஜய்யுடன் மோகன்லால் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கபாலி பார்த்த ரஜினிகாந்த் ரஞ்சித்திடம் என்ன சொன்னார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக தமிழர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் என்ற பெருமையை நாளை வெளியாகவுள்ள கபாலி பெற்றுள்ளது.

இப்படத்தின் சிறப்பு காட்சியை அமெரிக்காவில் உள்ள ரஜினிகாந்த் நேற்று தன் மகளுடன் பார்த்தார்.

அவர் திரையரங்கில் நுழைந்தவுடன் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி அவரை வரவேற்றுள்ளனர்.

படத்தை ரசித்து பார்த்த ரஜினிகாந்த், படம் முடிந்தவுடன் ரஞ்சித்துக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார்.

அதில் ‘நிறைய முத்தங்களுடன் மகிழ்ச்சி’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

‘பன்ச் டயலாக்ஸ் வேண்டாம்…’ விஜய் எடுத்த அதிரடி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கும் தளபதி 60 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதில் இவருடன் கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக ஜோடியாக நடிக்கிறார்.

இதில் தேவையில்லாத பன்ச் டயலாக்குகளை இடம் பெற செய்ய வேண்டாம் என்றும் கதையின் கேரக்டருக்கு என்ன தேவையோ? அதை வைத்தால் போதும் என கூறிவிட்டாராம் விஜய்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்திற்கு எங்க வீட்டு பிள்ளை என பெயரிடப்படலாம் என தெரிகிறது.

இந்நிலையில் இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய் ஒரு பாடலை பாடவிருக்கிறாராம்.

இப்பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை செப்டம்பரிலும், பாடல்களை நவம்பரிலும் வெளியிடவுள்ளனர்.

அடுத்த ஆண்டு (2017) பொங்கல் தினத்தில் இப்படம் வெளியாகிறது.

More Articles
Follows