அரசுப் பள்ளிகளை ரேஷன் கடைகளாக மாற்றிய புதுச்சேரி அரசு; ஆசிரியர்களே அரிசி அளக்கும் அவலம்..!

அரசுப் பள்ளிகளை ரேஷன் கடைகளாக மாற்றிய புதுச்சேரி அரசு; ஆசிரியர்களே அரிசி அளக்கும் அவலம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pondicherry governmentபுதுச்சேரி மாநிலத்தில் (காரைக்கால், மாஹி, ஏனாம்) மொத்தம் 3.36 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன.

அதில் 1.8 லட்சம், சிவப்பு குடும்ப அட்டைகள், 1.56 லட்சம் மஞ்சள் குடும்ப அட்டைகள் உள்ளன.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமலானதால் புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசு 9,425 மெட்ரிக் டன் அரிசி, பருப்பு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதையடுத்து, ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு அரிசி, பருப்பு ஆகியவற்றை நியாயவிலைக் கடை மூலமாக தராமல் அரசு ஊழியர்கள் மூலம் சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டன.

இதனால் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தற்போது மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக்கடை மூலம் இலவச அரிசி தர புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.

இதில் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் தவிர்த்து, மற்றவர்களுக்குத் தர துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி தந்தார்.

இதைத் தொடர்ந்து, தற்போது புதுச்சேரி அரசு ரூ.5.28 கோடியை ஒதுக்கீடு செய்தது.

அரசு ஊழியர்கள் தவிர்த்து மீதமுள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கும் பணி ஊரடங்கு தொடங்கிய பிறகு தற்போது தொடங்கியுள்ளது.

மாநில அரசு முடிவின்படி நியாய விலைக்கடை மூலம் அரிசி வழங்கப்படவில்லை.

நியாய விலைக்கடை ஊழியர்களைத் தவிர்த்து, மீண்டும் பல்வேறு துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆசிரியர்கள் மூலமாக அரசுப் பள்ளிகளில் வைத்து துணைநிலை ஆளுநர் உத்தரவின்படி அரிசி விநியோகம் இன்று (ஜூலை 1) தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக நியாய விலைக்கடை ஊழியர்கள் தரப்பில் கூறுகையில்…

“புதுச்சேரியில் 507 நியாய விலைக்கடைகள் முழுவதும் மூடப்பட்டு அங்கு பணிபுரியும் 800 பேரின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது.

ஏற்கெனவே 3 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை.

ஆனாலும் கொரோனா காலத்தில் நாங்கள் வேலை செய்யத் தயாராக இருக்கிறோம்.

இருந்தபோதிலும் அரசு எங்களுக்கு பணி வழங்கவில்லை.

ரேஷன் கடைகளில் அரிசி விநியோகத்தை ஆசிரியர்கள் மூலம் மேற்கொள்கின்றனர்.

ரேஷன் கடைகளின் செயல்பாடும், ஊழியர்களின் வாழ்வும் முற்றிலும் மாறிவிட்டது.’ என்கின்றனர்.

தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்

தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

devayaniதேவயானி நடித்த அரசு கொரோனா விளம்பரப்படம் தற்போது அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

இதுபற்றி தேவயானி கூறியதாவது.

“இந்த நெருக்கடியான கொரோனா காலத்தில் எங்களைப் போன்ற கலைஞர்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொழுது அது மிக வேகமாக அனைவரிடமும் சென்றடைகிறது. இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த தமிழக முதல்வருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விளம்பரப் படத்தில் தேசிய விருதுபெற்ற ஆடுகளம் ஜெயபாலன் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஒரு தந்தை மகளுக்கான பாசப்பிணைப்போடு இந்த விளம்பரம் அமைந்திருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு “பாரதி” படத்தில் எனக்கு மருமகனாக நடித்து இப்போது “கட்டில்” படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இ.வி.கணேஷ்பாபு இந்த விளம்பரத்தை எழுதி இயக்கியிருக்கிறார். செழியன் குமாரசாமி தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டிருக்கிறார்.

இந்த ஊரடங்கு காலகட்டத்தில் எனது குடும்பத்தோடு அந்தியூர் அருகிலுள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் வாழ்ந்து வருகிறேன். இடைப்பட்ட நாட்களில் அரசு அனுமதியோடு சென்னைக்கு வந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சென்றிருக்கிறேன். கிராமங்களின் வாழ்க்கையை முழுமையாக நான் இப்போது அனுபவித்து வருகிறேன் என்று தான் சொல்ல வேண்டும். இப்போது தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவது. கிராமத்து சமையல் செய்வது, குழந்தைகளோடு, கணவனோடு விளையாடுவது, தினமும் இரவு நேரத்தில் என் மூத்த மகள் பகவத்கீதை வாசிக்க அதை நாங்கள் குடும்பத்தோடு கேட்பது, குழந்தைகளுக்கான கல்வி இப்படி வாழ்க்கையின் அர்த்தங்களை முழுமையாக செயல்படுத்தி வருகிறோம். மகாபாரதம் ராமாயணம் போன்ற தொடர்கள் தொலைக்காட்சிகளில் மறு ஒளிபரப்பாகிறது. இதை குடும்பத்தோடு பார்த்து மகிழ்ந்து வருகிறோம்.

கொரோனா வைரஸிடமிருந்து நாமெல்லாம் மீண்டு ஊரடங்கு தளர்த்தப் பட்ட பிறகு சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் முழுவீச்சுடன் நான் செயல்படுவேன். நல்ல தரமான படங்களுக்காக, கதாபாத்திரத்துக்காக நான் காத்திருக்கிறேன்.

நிச்சயமாக தமிழக மக்களுக்கு பிடித்த கதாபாத்திரங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன்.” இவ்வாறு தேவயானி கூறினார்

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sakshi agarwalசில நாட்களுக்கு முன் நடிகை சாக்‌ஷி அகர்வால், தன்னை டிக்டாக்லிருந்து விலக்கி கொண்டு சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

நேற்று மத்திய அரசு டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை விதித்திருப்பதை அறிந்து தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வால்

இது இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் முக்கிய முடிவு என்றும், இந்த முடிவு இந்தியாவின் சுயசார்பு திறனை மேம்படுத்தும் என்று கூறியுள்ளார்.

கண்பார்வையற்ற சஹானாவுக்கு ஸ்டூடியோ செட்டப்பை பரிசளித்த ‘கோப்ரா’ படக்குழு.!

கண்பார்வையற்ற சஹானாவுக்கு ஸ்டூடியோ செட்டப்பை பரிசளித்த ‘கோப்ரா’ படக்குழு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singer sahanaசெவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள ‘கோப்ரா’ படத்தின் “தும்பி துள்ளல்” என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இரு தினங்களுக்கு முன் வெளியானது.

இது வெளியான நிமிடத்தில் இருந்தே பாடல் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றது.

ஏ.ஆர் ரஹ்மானின் அற்புத இசையில் பாடல் எல்லோராலும் பாரட்டப்பெற்று தற்போது 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இன்னும் வெற்றிகரமாகப் பார்க்கப்பட்டு வருகிறது

இந்நிலையில் இப்பாடலை நேற்று கண் பார்வையற்ற சிறுமி சஹானா கீ-போர்டில் மிக அழகாக வாசித்து ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

சஹானா பிறவியிலேயே கண்பார்வையற்ற சிறுமி.

அவர் ஜீ தமிழ் சேனலில் சரிகமபா நிகழ்ச்சியில் இரண்டாவதாக வந்தவர்.

அவரின் கீ-போர்டில் வாசித்த பாடல் வந்த சற்று நேரத்திலேயே எல்லாராலும் பாராட்டப்பெற்று பகிரப்பட்டது.

அதுவும் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

நேற்று இரவு சஹானாவின் வீடியோவை கவனித்த ஏ.ஆர் ரஹ்மான் ட்விட்டரில் ஸ்வீட் என ரீ ட்வீட் செய்து பாராட்டியிருந்தார்.

உடனே படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தன் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாகவும் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சார்பாகவும் சிறுமி சஹானாவிற்கு விலை உயர்ந்த மைக் உள்ளிட்ட ஸ்டூடியோ செட்டப்பை பரிசாக கொடுத்து மகிழ்வித்துள்ளார்.

வாணி ராணி-அரண்மனைக்கிளி சீரியல் நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா

வாணி ராணி-அரண்மனைக்கிளி சீரியல் நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

navya samyகொரோனா வைரஸ் தொற்றால் பொது முடக்கம் விடப்பட்டு ஒட்டு மொத்த உலகமே முடங்கியுள்ளது.

தமிழகத்திலும் வைரஸ் பாதிப்பு அதிகமாகவுள்ளது.

இதனால் மக்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

டிவி சூட்டிங்குகள் மட்டும் சில தளர்வுகளுடன் நடத்தப்பட்டது. ஆனால் சினிமா படப்பிடிப்புகள் நடத்த இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் டிவி சீரியல் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்த நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் தெலுங்கில் ஆமே கதா, நா பேரு மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

தமிழில் வாணி ராணி, அரண்மனைக்கிளி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இது குறித்து இவர் கூறியுள்ளதாவது..

நான் இந்த துறையை நம்பித்தான் இருக்கிறேன். அதனால் என்னால் படப்பிடிப்புக்கு வர முடியவில்லை என்று கூற முடியாது.

நான் படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. சில அறிகுறிகள் தென்பட்டவுடன் பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கு தொற்று ஏற்பட்டிருப்பதால் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம்” என நவ்யா சாமி தெரிவித்துள்ளார்.

நெய்வேலி NLC பாய்லர் வெடித்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு; முதல்வர் நிதியுதவி

நெய்வேலி NLC பாய்லர் வெடித்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு; முதல்வர் நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

edappadi palanisamyகடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சியில், இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று காலை பெரும் விபத்து ஏற்பட்டது.

5-வது அலகில் பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், 6 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 2வது சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 22 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து கடலூர், திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டுச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களில் பத்மநாபன், அருண், வெங்கடேசன், நாகராஜன், சிலம்பரசன் உள்ளிட்ட 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் காயமடைந்த 17 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்…

தீ விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கவும், காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தீ விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தி கேட்டு வருத்தம் அடைந்ததாகவம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், விபத்தில் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நெய்வேலி என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்த விபத்தில் 7 பேர் பலியான சம்பவத்தில் அதிரடி நடவடிக்கையாக பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக என்.எல்.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

More Articles
Follows