தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிம்பு குரலில் விபின் நடித்த “ஞேயங் காத்தல் செய்” என்ற ஆல்பம் பாடல் ஒன்று நண்பர்கள் தினத்தில் வெளியானது.
இப்பாடல் பார்வையாளர்களின் மனதை வருடி யூடியூப்பில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இளைஞர்கள் இப்பாடலை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இந்த `ஞேயங் காத்தல் செய்’ இசை ஆல்பத்தின் இயக்குநர் கார்த்திக் ரவிச்சந்திரன் ஆவார்.
இந்த பாடலை வெளியிடும் போது `மாநாடு’ பட `அப்துல் காலிக்’ கெட்டப்பில் இருந்தாராம் சிம்பு.
`ஞேயங் காத்தல் செய்’னா, நட்பைப் பேணிக் காக்கணும்’ என பொருள்படும்.
ஆத்திச்சூடியில ஞேயம்னா நட்புனு இருக்கு. இந்தத் தலைப்பு பத்தி சிம்பு கேட்கவே இல்லையாம்.
சின்ன வயசிலேயே நிறைய தெரிஞ்சு வச்சிருக்கார் சிம்பு” என்கிறார் இந்த ஆல்பத்தின் ஹீரோ விபின்.