மீண்டும் ஒரு கொண்டாட்டத்திற்கு காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்

மீண்டும் ஒரு கொண்டாட்டத்திற்கு காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GK Cinemas celebrate 15 years of Dhanush entry in Cinemaதுள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான தனுஷ், திரையுலகில் நுழைந்து 15 வருடங்களை கடந்துவிட்டார்.

இதன் நிறைவையொட்டி கடந்த மே 10ஆம் தனுஷ் ரசிகர்கள் கொண்டாடினர்.

இதனையொட்டி தன் திரையுலக வாழ்க்கையில் உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து இருந்தார் தனுஷ்.

இந்நிலையில் தனுஷ் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில், சென்னை போரூரில் உள்ள ஜிகே சினிமாஸ் நிறுவனம் வருகிற மே 14ஆம் தேதி காலை 8 மணிக்கு விஐபி (வேலையில்லா பட்டதாரி) படத்தின் சிறப்பு காட்சியை திரையிட உள்ளதாக அறிவித்துள்ளது.

இதனால் மீண்டும் ஒரு கொண்டாட்டத்திற்கு தனுஷ் ரசிகர்கள் காத்திருக்க தொடங்கிவிட்டனர்.

Ruban Mathivanan‏ @GKcinemas
To celebrate @dhanushkraja 15 years , #VIP is being screened on Sunday, 8 AM show. Bookings to open tonight!!#VIPatGKCinemas

விவேகம் டீசரால் ரூ.5 லட்சம் நஷ்டம்; அஜித் ரசிகர்கள் செய்த அட்டகாசம்

விவேகம் டீசரால் ரூ.5 லட்சம் நஷ்டம்; அஜித் ரசிகர்கள் செய்த அட்டகாசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith fans damaged theatre screen while screening Vivegam Teaser at Ram Cinemasநேற்று மே 11ஆம் தேதி இரவு 12.01 மணிக்கு அஜித் நடித்த விவேகம் டீசர் வெளியானது.

எனவே அஜித் ரசிகர்களுக்காக இந்த டீசரை தியேட்டரில் திரையிட்டது திருநெல்வேலி ராம் முத்துராம் சினிமாஸ்.
இதை காண கட்டுக்கடங்காத கூட்டம் தியேட்டரில் கூடியது.

இதில் சில ரசிகர்கள் ஆர்வக்கோளாறினால் தியேட்டர் ஸ்கீரினுக்கு பாலாபிஷேகம் செய்துள்ளனர்.

இதனால் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள ஸ்கிரீன் முற்றிலும் சேதமடைந்துவிட்டது.

இதை தியேட்டர் உரிமையாளர் ட்விட்டரில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

“டீசரை கொண்டாட அனுமதித்தோம், எங்களுக்கு கிடைத்தது இந்த ரூ. 5 லட்சம் நஷ்டம் தான், நன்றி” என பதிவிட்டுள்ளார்.

Ram Muthuram Cinemas‏ @RamCinemas
Milk abishegam on the 5 Lakh silver screen during the teaser launch. We are giving full freedom to celebrate & in return we got this. Thanks

ajith new look

சூர்யா நடிக்க வேண்டிய கேரக்டரில் சசிகுமார்

சூர்யா நடிக்க வேண்டிய கேரக்டரில் சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sasi kumar and suriyaகொம்பன் மற்றும் மருது ஆகிய படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிப்பார் என கூறப்பட்டது.
ஆனால் மற்ற படங்களில் நடிக்க கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.
எனவே சூர்யாவுக்காக எழுதிய கதையில் சசிகுமாரை நடிக்க வைத்துவிட்டாராம் முத்தையா.
கொடி வீரன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் மஹிமா நம்பியார், சனுஷா, பால சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதன் சூட்டிங் நேற்றுமுதல் தொடங்கியது.

படத்தின் நாயகன் சசிகுமாரே இப்படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷுக்கு காத்திராமல் பிரபுதேவாவுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்

தனுஷுக்கு காத்திராமல் பிரபுதேவாவுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthik subbaraj and prabhu devaஎவருமே எதிர்பாராத சமயத்தில், தான் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கவுள்ளதை அறிவித்தார் தனுஷ்.

இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.

இந்த அறிவிப்பு வந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் மற்ற படங்களை முடித்துக் கொடுத்தார் தனுஷ்.

இதன் படப்பிடிப்பு அக்டோபரில்தான் துவங்கும் என தகவல்கள் வந்தன.

எனவே தனுஷ் வரும்வரை அவருக்கு காத்திராமல் பிரபுதேவா நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம் கார்த்திக் சுப்புராஜ்.

இதில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே.

ஆனால் கால்ஷீட் பிரச்சினையாலும் சில கன்னட அமைப்புகள் பிரச்சினையாலும் இவர் விலக, தற்பேது புதிய நாயகியை தேடிக் கொண்டிருக்கிறாராம் கார்த்திக் சுப்புராஜ்.

லைக்கா நிறுவன ஆஸ்பத்திரியை திறந்து வைத்தார் ரஜினி

லைக்கா நிறுவன ஆஸ்பத்திரியை திறந்து வைத்தார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthஷங்கர் இயக்கி, ரஜினி நடிப்பில் உருவாகிவரும் 2.0 படத்தை ரூ. 400 கோடி செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதனிடையில் இலங்கை தமிழர்களுக்கு கட்டப்பட்டுள்ள வீடுகளை இலவசமாக கொடுக்க நினைத்த லைக்கா நிறுவனம், ரஜினியை இலங்கைக்கு அழைத்தனர்.

ஆனால் ரஜினி இலங்கை செல்லக்கூடாது என தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் நெருக்கடி கொடுக்கவே ரஜினி செல்லவில்லை.

தற்போது சென்னையில் லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன் அவர்களால் கட்டப்பட்டுள்ள ‘வெஸ்ட் மின்ஸ்டர்’ என்ற ஆஸ்பத்திரியை ரஜினிகாந்த் திறந்து வைத்துள்ளார்.

சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே கிட்டதட்ட ரூ.125 கோடி செலவில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விழாவில் ரஜினி பேசியதாவது…

“சுபாஷ்கரனை எனக்கு இரண்டு ஆண்டுகளாகத்தான் தெரியும். ஆனால் ஒரு நாற்பது ஆண்டுகள் பழகிய மாதிரி நெருக்கமாகிவிட்டார்.

நல்ல மனிதர், மனிதாபிமானி. அவர் இந்த மருத்துவமனையை சேவை நோக்கத்தில் திறந்திருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள்” என்றார்.

சிவகார்த்திகேயன் படத்திலிருந்து விலகும் சமந்தா..?

சிவகார்த்திகேயன் படத்திலிருந்து விலகும் சமந்தா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and samanthaரெமோ படத்தை முடித்தவுடன் அதிரடியாக இரண்டு படங்களை ஒப்புக் கொண்டார் சிவகார்த்திகேயன்.

ஒரு படத்தை மோகன்ராஜா இயக்க, அதில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார்.

தற்போது வேலைக்காரன் என்று பெயரிடப்பட்ட இதன் சூட்டிங் மலேசியாவில் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து மற்றொரு படத்தை பொன்ராம் இயக்க அதில் சமந்தா உடன் நடிக்கவிருந்தார்.

ஆனால் அதன் சூட்டிங் இதுவரை தொடங்கவில்லை.
அதற்குள் சமந்தா வீட்டில் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற துவங்கவுள்ளது.

சமந்தாவை நிச்சயம் செய்த நாக சைதன்யாவும் அக்டோபர் மாதத்திற்குள் திருமணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

எனவே சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் போது கால்ஷீட் குளறுபடி ஏற்பட வாய்ப்புள்ளதால் அதிலிருந்து சமந்தா விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

More Articles
Follows