தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகம் புதுச்சேரி கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் தேதி (ஏப்ரல் 6) அறிவிக்கப்பட்டுவிட்டது.
இதனை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்புக் குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கடலூரில் வட்டாட்சியர் விஜயா தலைமையில் நிலை கண்காணிப்புக் குழுவினர் புதுச்சேரி மாநில எல்லைப் பகுதியான பெரியகாட்டுப்பாளையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக கடலூருக்கு வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர்.
அதில் 6 மூட்டைகளில் டி-சர்ட், சில்வர் பாத்திரங்கள் இருந்தன. சுமார் 4 ஆயிரம் டி-சர்ட்டுகளில் மக்கள் நீதி மய்யம் பெயருடன் கமல் படம், டார்ச் லைட் சின்னம், புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் சட்டப் பேரவைத் தொகுதி, சோமநாதன் ஆகிய பெயர்கள் பொறிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
மேலும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவற்றை கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
நாட்டில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டும் மநீம தலைவர் கமல் அவர்கள் நான்_கேட்பேன் என அடிக்கடி சொல்வார்.
இப்போது கமலே அவரது கட்சியினரே இப்படி செய்திருப்பதால் நான்_கேட்பேன் கமல் சார் என கமெண்ட் அடிக்கின்றனர்.
Gifts and Kamal T shirts seized by election commission officers