தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விழுப்புரத்தில் அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது…
நாம் தேர்தலில் தோல்வி அடைய காரணம் பாஜக. கூட்டணி தான். இதனால் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்து விட்டோம்.
தி.மு.க. தான் ஆட்சிக்கு வர வேண்டும் என பொதுமக்கள் விருப்பப்பட்டு வாக்களிக்கவில்லை” என்று பேசினார் சி.வி.சண்முகம்.
இதனையறிந்த நடிகையும் பாஜக உறுப்பினருமான காயத்ரி தன் ட்விட்டர் பதிவில் சி.வி.சண்முகத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதில்…
அதிமுகவுடன் பாஜக கூட்டணி இல்லையென்றால் வென்று கிழித்திருப்பார்களா? தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர்களுக்கு பலம் அளித்தது பாஜக தான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
பல ADMK வேட்பாளர்கள் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். கடந்த முறை அதிகாரத்தில் இருந்தபோதும், இந்த ஆண்டு ஆத்மார்த்தமாக மக்களை அடைய முடியவில்லை https://t.co/oGvLcczRFH
என்றால் அது யாருடைய தோல்வி?
என்னைப் போன்ற பாஜக ஆதரவாளர்களை காயப்படுத்தியுள்ளது. 1 மாதம் ஒவ்வொரு இடத்திலும் பயணம் செய்து இந்தத் தேர்தலில் நான் பாஜக மற்றும் ADMK காக பிரச்சாரம் செய்துள்ளேன்.
நான் கடின உழைப்பைக் கொடுத்தேன் வெற்றிக்காக. இது போன்ற அறிக்கைகளுக்கு நான் வலுவான பதிலைக் கொடுப்பேன்.
என்னைப் போலவே ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 10000 பா.ஜ.க உறுப்பினர்கள் ADMK பாஜக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். இதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.
பிரதமர் மோடி ஜீ காரணமாக தமிழ் மக்கள் பல வழிகளில் பயனடைந்துள்ளனர். எங்கள் கட்சி தமிழகத்தில் வளர்ந்துள்ளது.
ஆன்மீக மற்றும் தேசபக்தி கொண்ட தமிழ் மக்கள் எங்கள் பிரதமருடன் உள்ளனர்.
இவ்வாறு காயத்ரி பதிவிட்டுள்ளார்.
Gayathri Raghuram slams ex minister CV Shanmugam