தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் முதன்முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
இவர் இயக்கியுள்ள யாதுமாகி நின்றாய் என்ற படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது.
இதில் தனுஷ் அவர்கள் புடவை நிலவே என்ற ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதை நாம் முன்பே பார்த்தோம்.
இந்நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது காயத்ரி ரகுராம் பேசும்போது…
இப்படம் திரைத்துறையில் பணியாற்றும் நடன கலைஞர்களின் பற்றிய உண்மை சம்பவங்களின் தொகுப்பு என்றார்.
மேலும் பேசும்போது….
பெண்களின் வாழ்க்கையில் ஆரம்பம் முதல் அவர்களின் வாழ்க்கையில் ஒவ்வொறு கட்டத்தையும் அவர்கள் எப்படி வாழவேண்டும் என்ற ஒரு சமூக
கருத்தை கூறும் வகையில் இப்படம் உள்ளது.
குறைந்த செலவில் பெண்களுக்கு முக்கியதுவம் கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கவர்ச்சி என்பது இல்லை.
தனுஷ் இப்படத்தில் ஒரு பாடலை பாடி உதவி செய்தார். மேலும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் பேருதவி செய்தார்.
இது என் அப்பாவின் கனவாகும், அதை தவிர இப்படத்தை என் குருநாதர் இயக்குனர் திரு A.L.விஜய் அவர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் கூறினார்.
தன் தந்தை ஸ்தானத்தில் இருந்து உதவி வரும் கலா மாஸ்டருக்கு நன்றியும் தெரிவித்தார்.
விழாவில் கலா மாஸ்டர் பேசும்போது…
தற்போது இருக்கும் சூழ்நிலையில் பெண்கள்,பெண்குழந்தைகளின் பாதுகாப்பற்ற நிலையை நாமே பார்த்து கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில் இப்படம் பெண்களுக்கான ஒரு அழகான திரைப்படம், இதை தவிர இப்படத்தில் என் கணவரும் நடித்துள்ளார். எங்கள் குடும்பத்தில் ஒருவர் இயக்குனராகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் இப்படம் பார்ப்பவர்களை இது ஒரு அருமையான கதை என்று சொல்ல வைக்கும்.” என்றார்.
Gayathri Raghuram directorial Yaadhumaagi Nindraai Press meet