‘காந்தியம்’ படத்தில் நம் வாழ்க்கை தரத்தை உயர்த்த லிங்கா யோசனை

‘காந்தியம்’ படத்தில் நம் வாழ்க்கை தரத்தை உயர்த்த லிங்கா யோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gandhiyam movie will teach you Modern lifeஜெய் ஸ்ரீ ராம் கிரியேஷன்ஸ் சார்பில் லிங்கா தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிக்கும் படம் ‘காந்தியம்’.

இப்படத்தில் ஹீரோயினாக அக்‌ஷதா நடிக்க, மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

தனசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீசாய் தேவ் இசையமைத்திருக்கிறார். கவிஞர் செ.காளிமுத்து, சரண்யா, ஜோகி பி.சரண், மறைந்த அண்ணாமலை ஆகியோர் பாடல்கல் எழுதியிருக்கிறார்கள்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், டாக்டர் ரவி கே.விஷ்ணு பிரசாத், பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜய முரளி, சக்தி டிரான்ஸ்போர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் அருள், நடிகரும் பாடலாசிரியருமான சினேகன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

ரவி கே.விஷ்ணு பிரசாத் பாடல்கள் குறுந்தகடை வெளியிட, சினேகன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் ஹீரோ, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான லிங்கா, “’காந்தியம்’ என்ற இந்த திரைப்படம் உங்களுடைய பார்வைக்கு மிக வித்தியாசமாக இருக்கும்.

ஒரு கிராமத்தை எப்படி நகரமாக மாற்றுகிறார்கள் என்பதை தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறோம். நமது வாழ்க்கை தரம் ஏன் இப்படி இருக்கிறது, நாம் ஏன் இப்படி இருக்கிறோம், என்பதை விவரிக்கும் இப்படம் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும்.

கோவையில் உள்ள பி.கே.ராமராஜ் வாணவராயர் ஜமீன் கோட்டையில் தான் இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்தியிருக்கிறோம். இப்படம் சாமாணிய மக்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாகியுள்ளது.

நாகரீகமானவர்களுக்கும், நாகரீகத்தை இன்னும் அறியாமல் இருப்பவர்களும் பிடித்தமான ஒரு படமாகவும் இப்படம் இருக்கும்.

இந்த படத்தில் மறைந்த அண்ணாமலை எழுதிய அம்மா பாடல் அனைவரையும் கவரும். குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு பாடலாகவும் இருக்கும். இப்பாடல் மட்டும் இன்றி மற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவரும்.” என்றார்.

சினேகன் பேசுகையில், “இந்த நிகழ்ச்சிக்கு நான் வர முக்கிய காரணம் பாடலாசிரியர் காளிமுத்து. நான் பல காவல் துறை அதிகாரிகளை பார்த்திருக்கிறேன், அவர்கள் தமிழ் பற்று அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள், எப்படி தான் அவர்களால் அப்படி இருக்க முடிகிறது என்று கூட நான் யோசித்திருக்கிறேன்.

ஒரு பக்கம் காவல் பணி, மறுபக்கம் தமிழை காக்கும் பணி என்று பேலன்ஸ் செய்வார்கள். அவர்களைப்போன்ற ஒரு காவல் துறை அதிகாரி தான் காளிமுத்து. அவர் எழுதிய கவிதை புத்தகங்களை நான் வெளியிட்டிருக்கிறேன். தற்போது அவர் பாடலாசிரியாக அறிமுகமாகியிருக்கும் படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

‘காந்தியம்’ என்ற தலைப்பே ஈர்க்கிறது. அகிம்சை என்ற ஒன்றை உலகிற்கு கற்றுக்கொடுத்த காந்தி பிறந்தநாளான இன்று (அக்.2) இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நடைபெறுவது சிறப்பானதாகும். இந்த படம் ஆக்‌ஷன் படம் என்று சொன்னார்கள்.

காந்தியம் என்ற தலைப்பு வைத்துவிட்டு ஆக்‌ஷன் இருக்கிறது என்றால், அதற்கு நிச்சயம் பெரிய காரணம் இருக்கும், அது சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

இப்போதெல்லாம் சிறிய படங்கள் தான் வெற்றி பெறுகிறது. பெரிய படங்கள் ஓடுவதில்லை. அதனால் சிறிய படங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். அந்த வகையில் இந்த ‘காந்தியம்’ நிச்சயம் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.

நிகழ்ச்சியில் ஒபிஆர் சங்க தலைவர் விஜய முரளி, ஜாக்குவார் தங்கம், ரவி கே.விஷ்ணு பிரசாத், அருள் அனைவரும் பேசினார்கள்.

Gandhiyam movie will teach you Modern life

Gandhiyam (13)

சிரஞ்சீவியின் ‘சைரா’ படம் பார்த்த 7 போலீசார் சஸ்பென்ட்

சிரஞ்சீவியின் ‘சைரா’ படம் பார்த்த 7 போலீசார் சஸ்பென்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

syeraaசிரஞ்சீவி, அமிதாப்பச்சன், நயன்தாரா, விஜய்சேதுபதி, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் சைரா நரசிம்மா ரெட்டி நேற்று வெளியானது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிரஞ்சீவி படம் வெளியாவதால் ஆந்திரா, தெலுங்கானாவில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஆந்திராவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் 7 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களின் வேலைக்கே இநத் படம் ஆப்பு வைத்துள்ளது.

நேற்று காந்தி ஜெயந்தி என்பதால் நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடந்தன. ஆந்திர மாநிலத்தில் சமூக நலத்துறை சார்பாக பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டன. எனவே போலீஸ் பணியில் இருக்க வேண்டும் என்றும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இருந்தபோதிலும் கர்னூல் பகுதியை சேர்ந்த ரச்சர்லா, கோஸ்படு உள்ளிட்ட 7 போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை விட்டுவிட்டு முதல் நாள் முதல் காட்சி பார்க்க சென்றுவிட்டனர்.

இது உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றுவிட்டது.

எனவே 7 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சொல்லி டிஎஸ்.பிக்கு உத்தரவு போய் இருக்கிறது.

தற்போது 7 பேரின் வேலையும் கேள்விக்குறிக்குள்ளாகியுள்ளது.

ENPT படம் நவம்பர்ல வரும் சொல்றாரு டைரக்டர்..; நம்பலாமா?

ENPT படம் நவம்பர்ல வரும் சொல்றாரு டைரக்டர்..; நம்பலாமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ENPT Dhanushகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.

இவர்களுடன் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள்.

தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார்.

இந்த படம் பண நெருக்கடி, கோர்ட்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் 4 வருடங்கள் தள்ளிப் போனது.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் பேசும்போது

எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் நவம்பர் 15ம் தேதி கட்டாயம் வெளியாகும். நானும் அதற்காகத்தான் காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.

இதை நம்பலாமா? சரி.. நவம்பர் வரை காத்திருப்போம்.

சிவாஜி 9.. கமல் 10.. யோகிபாபு 11… ‘காவி ஆவி நடுவுல தேவி’

சிவாஜி 9.. கமல் 10.. யோகிபாபு 11… ‘காவி ஆவி நடுவுல தேவி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babuஒரே படத்தில் இரட்டை வேடங்கள், மூன்று வேடங்கள் என நம் அபிமான நடிகர்களை பார்த்திக்கிறோம்.

ஆனால் 5க்கும் மேற்பட்ட வேடங்களில் சிவாஜி மற்றும் கமல் இருவரும் மட்டுமே நடித்துள்ளனர்.

நவராத்திரி படத்தில் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்திருத்தார். தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்திருந்தார் கமல்.

தற்போது இவர்களை மிஞ்சும் வகையில் 11 வேடங்களில் நடிக்கவுள்ளாராம் யோகிபாபு.

புகழ்மணி இயக்கும், காவி ஆவி நடுவுல தேவி படத்தில், ராம்சுந்தர் – பிரியங்கா ஜோடியாக நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை கதையை வி.சி.குகநாதன் எழுதியுள்ளார்.

இதில் ”காதலர்களை சேர்த்து வைப்பதற்காக, யோகிபாபு, 11 விதமான, ‘கெட் அப்’களில் தோன்றுகிறாராம்.

கேரளாவிலும் அசத்த போகும் அசுரன்; கைகொடுக்கும் சூப்பர் ஸ்டார்

கேரளாவிலும் அசத்த போகும் அசுரன்; கைகொடுக்கும் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

asuran movie posterவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அசுரன்.

ஜிவி, பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி தானு தயாரித்துள்ளார்.

இந்த படம் நாளை வெளியாகவுள்ளது. இதனிடையில் இதன் கேரள வெளியீட்டு உரிமையை கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மேக்ஸ்லேப் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தனுஷின் படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு இருப்பது ஒரு காரணம் என்றாலும் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் என்பதும் இங்கே கவனித்தக்கது.

கேரளாவில் அதிக தியேட்டர்களில் இந்த படத்தை வெளியிடுகின்றனர்.

தளபதி & மக்கள் செல்வன் இணையும் படம் பூஜையுடன் தொடங்கியது

தளபதி & மக்கள் செல்வன் இணையும் படம் பூஜையுடன் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay and Vijay sethupathiலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தளபதி 64 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீசும் நடிக்க உள்ளார்.

நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க முக்கிய வேடத்தில் சாந்தனு நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படம் பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டது. இதில் விஜய், விஜய் சேதுபதி, அனிருத், மாளவிகா மோகனன், சாந்தனு, ஸ்டண்ட் சில்வா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

More Articles
Follows