கஜா புயல் பாதிப்புக்கு ரூ. 20 லட்சம் நிதி வழங்கிய சிவகார்த்திகேயன்

கஜா புயல் பாதிப்புக்கு ரூ. 20 லட்சம் நிதி வழங்கிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gaja Relief Aid Sivakarthikeyan gives Rs 20 lakhs to relief fundஓரிரு தினங்களுக்கு தமிழகத்தின் கரையை கடந்த கஜா புயலால் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

நாகப்பட்டினம், வேதாரண்யம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது.

இதன் காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். 347 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 39,938 மின் கம்பங்கள் விழுந்துள்ளன.

3,559 கி.மீ. நீளமுள்ள மின் கம்பிகள் சேதமடைந்துள்ளன. 56,942 குடிசை வீடுகள் முழுமையாகவும், 3,404 குடிசை வீடுகள் பகுதியாகவும், 30,328 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் 20 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களைத் தன்னுடைய ரசிகர் மன்றத்தினர் மூலம் பாதிக்கப்பட்டுள்ளப் பகுதிகளுக்குக் கொண்டு சேர்த்துள்ளார்.

மேலும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனியாக ரூ. 10 லட்சம் நிதியை வழங்கியிருக்கிறார்.

Gaja Relief Aid Sivakarthikeyan gives Rs 20 lakhs to relief fund

ஏஆர். ரஹ்மான்-ஷாரூக்கான் கூட்டணியில் இணைந்தார் நயன்தாரா

ஏஆர். ரஹ்மான்-ஷாரூக்கான் கூட்டணியில் இணைந்தார் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayanthara and srk2018ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன.

வருகிற நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 16ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை பிரபலப்படுத்தும் விதமாக ஜெய்ஹிந்த் இந்தியா என்ற ஆல்பத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ளார்.

இதற்கான புரொமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. 45 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவில் ஷாரூக்கான், நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஏ.ஆர்.ரஹ்மான், டிரம்மர் சிவமணி, ஸ்வேதா மோகன் மற்றும் ஹாக்கி அணி வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

கஜா-வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய்சேதுபதி 25 லட்சம் நிதி

கஜா-வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய்சேதுபதி 25 லட்சம் நிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathis kind gesture for Cyclone Gaja victimsதமிழகத்தின் டெல்டா பகுதிகளை கஜா புயல் தாக்கியதால் வீடு, தொழில்களை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர்.

இதுவரை 45 பேர் உயிர் இழந்துள்ளனர். எண்ணற்ற ஆடுகள், மாடுகள் உயிரிழந்துள்ளன.

சாலையெங்கும் மரங்கள் வீழ்ந்து கிடப்பதால் மின் கம்பிகளும் அறுந்துள்ளன. இதனால் மின்சாரமும் இல்லாமல் தவித்து வருகின்றன.

4 நாட்கள் ஆன நிலையிலும் இன்னும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை.

டெல்டா பகுதி மக்கள் மீது அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள் நிவாரணப்பணிகளை செய்து வருகின்றனர்.

அரசு நிவாரணப் பணிகளும் தாமதம் ஆகி வருவதால் ஆங்காங்கே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி 25 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்களை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில்…

”கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வசதி முழுமையாக திரும்பவதற்கு பத்து தினங்கள் ஆகும் என்பதால், அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் சார்ஜிங் டார்ச்லைட் ஆயிரக்கணக்கில் வழங்கப்படும்.

லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து நாசமாகிவிட்டதால், அதற்கு முன்னுரிமைக் கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் தோப்புகளை முழுவதுமாக புனரமைத்து தரப்படும்.

அவர்கள் தங்களின் பிள்ளைகள் போல் வளர்த்து வந்த தென்னை, பலா போன்ற மரங்களின் கன்றுகளை, மீண்டும் அவ்விடத்தில் புதிதாக நட்டு வைக்கப்படும். இதற்கான களப்பணிகளில் என்னுடைய ரசிகர்களும் ஈடுபடுவார்கள். நிவாரண நிதி தேவைப்படுபவர்களை ரசிகர் மன்றத்தின் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் நிவாரண நிதி வழங்கப்படும்.“ என்றார்.

இதனிடையே கஜா புயல் மற்றும் கனமழையின் காரணமாக உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, அந்த குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யவிருப்பதாக தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathis kind gesture for Cyclone Gaja victims

அக்னிச் சிறகுகளுக்காக பாடிலாங்வேஜை மாற்றும் விஜய் ஆண்டனி

அக்னிச் சிறகுகளுக்காக பாடிலாங்வேஜை மாற்றும் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Antony plans to change his body language for Agni Siragugal movie‘மூடர் கூடம்’ படத்தை இயக்கிய நவீன் இப்போது ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி மற்றும் அருண்விஜய் நடித்து வரும் ‘அக்னிச் சிறகுகள்’ என்ற படத்தில் இயக்க உள்ளார் நவீன்.

இதில் பிரகாஷ்ராஜ், ஷாலினி பாண்டே, நாசர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

டி.சிவாவின் ‘அம்மா கிரியேசன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை அண்மையில் கமல் வெளியிட்டார்.

இப்படத்திற்காக விஜய் ஆண்டனியில் பாடிலாங்வேஜை முழுமையாக மாற்ற திட்டமிட்டு இருக்கிறாராம் நவீன்.
மேலும் இதில் வித்தியாசமான விஜய்ஆண்டனியைப் பார்க்கலாம் என்கிறார் படக்குழுவினர்.

அதைத்தானே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்… ஆகட்டும்.. ஆகட்டும்…

Vijay Antony plans to change his body language for Agni Siragugal movie

கஜா தாக்கிய டெல்டா பகுதிக்கு ஜிவி.பிரகாஷின் நிவாரண பொருட்கள்

கஜா தாக்கிய டெல்டா பகுதிக்கு ஜிவி.பிரகாஷின் நிவாரண பொருட்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakashநாகை, வேதாரண்யம் மற்றும் டெல்டா பகுதி மக்களுக்காக கஜா புயல் நிவாரண உதவிகளை 2-லாரிகளில் அனுப்பி வைத்துள்ளார் நடிகர் ஜி.வி.பிரகாஷ்.

வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில்படத்தின் டப்பிங் பணிகளில் இருந்த ஜி.வி.பிரகாஷ் டப்பிங்கை தற்காலிகமாக நிறுத்தி விட்டு இப்படி ஒரு அதிரடி பணியில் ஈடுபட்டதை சோசியல் மீடியாக்களும், பொது மக்களும் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

இது பற்றி ஜி.வி.பிரகாஷ் பேசும் போது……

கஜா புயல் ஈவு இரக்கமற்ற பேரிடர் மற்றும் பேரழிவு . மக்கள் மீது தொடுக்கப்பட்ட இயற்க்கை சீற்றம் மனதுக்கு வேதனையை தந்தது. தென்னை மரங்கள், மா மரங்கள். வீடுகள், கால்நடைகளை இழந்து நிற்கும் அந்த விவசாயிகளை நினைக்கும் போதும், படகுகளை இழந்து நிற்கும் மீனவர்களை நினைக்கும் போதும் நிலை குலைந்து போனேன்.

அவர்களுக்கு தேவை அனுதாபமோ,ஆறுதலோ அல்ல. முடிந்த அளவு அவர்களுக்கு உதவி செய்ய முன் வருவோம்.

பேரிடரில் சிக்கி தவிக்கும் சகோதர சகோதரிகளுக்கு ஆதரவு கரம் நீட்டி அன்பை விதைத்து மனித நேயம் காப்போம் என ஜி.வி.பிரகாஷ் கூறினார்.

ஒக்கி புயலின் போதும் ஜி.வி.பிரகாஷ் களத்தில் இறங்கி சேவை செய்ததை குமரிமக்கள் பெரிதும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

ராம்சரண், ஜுனியர் என்டிஆர் இணையும் படத்தை தொடங்கிய ராஜமௌலி

ராம்சரண், ஜுனியர் என்டிஆர் இணையும் படத்தை தொடங்கிய ராஜமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RRR shootபாகுபலி படத்திற்கு முன்பே ராஜமௌலி படங்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு நாம் அறிந்த ஒன்றுதான்.

அதுவும் உலகையை கலக்கிய ‘பாகுபலி 1 மற்றும் 2’ பாகங்கள் வந்த பின்னர் இந்த எதிர்பார்ப்பு இரட்டிப்பாகி விட்டது.

அந்த படத்திற்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் படப்பிடிப்பு இன்று திங்கள் (நவ., 19) முதல் ஆரம்பமாகியுள்ளது.

ஹைதராபாத் அருகில் உள்ள கொக்க பேட் என்ற இடத்தில் இதன் சூட்டிங்கை தொடங்கியுள்ளனர்.

படத்தின் ஹீரோக்கள் ராம்சரண், ஜுனியர் என்டிஆர் மோதும் சண்டைக் காட்சிகள் இன்று படமாக்கப்படும் என கூறப்படுகிறது.

முதன் முதலாக ராஜமௌலி இயக்கிய ‘ஸ்டூடன்ட் நம்பர் 1’ படத்தின் நாயகன் ஜுனியர் என்டிஆர் நடித்திருந்தார்.

அதன் பின் ‘சிம்ஹாத்ரி, யமதொங்கா’ ஆகிய படங்களிளிலும் அவரை இயக்கினார்.

‘மகதீரா’ படத்தில் ராம் சரணை இயக்கினார்

தற்போது இவர்கள் மூவரும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜமௌலி படங்களுக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு இருப்பதால் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் உருவாகிறது.

இப்படத்தின் ஹீரோயின்கள் விவரம் இதுவரை தெரியவில்லை.

ஜான்வி கபூர், ஆலியா பட் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடிக்க வாய்ப்பு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

More Articles
Follows