தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
இதன் படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இதன் படப்பிடிப்பில் அனுமதி இல்லாமல் சமயபுரம் ஜெயா என்ற யானை கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் யானையை கோயில் பூஜைக்கு கொண்டு செல்வதாக அவர்கள் பொய் சொன்னதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இதனையடுத்து உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப வனத்துறை முடிவு.
மேலும்..
கடந்த நவம்பர் 20 ஆம் தேதி பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது போக்குவரத்து விதிகளை மீறி நடிகர் விஜய் காரின் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்த தகவலையடுத்து நடிகர் விஜய்யின் கார் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அபராதம் அனுப்பப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் விஜய்க்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாம்.