தனுஷுக்கு வாய்ஸ் கொடுத்த கமல்… உங்களுக்கு தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படம், கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி வெளியானது.

இதில் தனுஷ், ஸ்னேகா, சோனியா அகர்வால், பாலாசிங், அழகம்பெருமாள் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின் 10வது ஆண்டு நிறைவையொட்டி, இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய சொல்லி, தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் இடம்பெற்ற நெருப்பு வாய்னில் என்ற பாடலை கமல்ஹாசன் பாடியிருந்தார்.

இப்பாடல் திரையிடப்பட்ட போது, ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

ரஜினி படத்தில் சிரஞ்சீவி-மகேஷ்பாபுக்கு கெஸ்ட் ரோல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கும் 2.ஓ படத்தில் ரஜினியுடன் அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதன் தயாரிப்பு நிறுவனமான லைக்கா, இதன் பர்ஸ்ட் லுக்கை அண்மையில் மும்பையில் மிகப்பிரம்மாண்டமாக வெளியிட்டது.

இந்நிலையில் இப்படத்தின் கெஸ்ட் ரோலில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி மற்றும் மகேஷ்பாபு ஆகியோர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே படத்தில் பிரபல நட்சத்திரங்கள் இருக்கும் நிலையில், இவர்களும் இணைந்துள்ளதால், படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவும் என கூறப்படுகிறது.

ஆக்ஷன் ரூட்டுக்கு மாறும் காமெடி ஹீரோ சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் “ஓடி ஓடி உழைக்கனும்“.

இதில் சந்தானம் நாயகனாக நடிக்க, நாயகியாக அமோரா தஸ்தர் நடிக்கிறார்.

இவர்களுடன் யோகி பாபு நான் கடவுள் ராஜேந்திரன், சுவாமிநாதன், ஊர்வசி மதுசூதனராவ், மன்சூரலிகான், மயில்சாமி ஆகியோரும் நடிக்கின்றனர்.

கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையைமக்கிறார்.

எடிட்டிங்கை ராமாராவ் கவனித்துக் கொள்ள, ஞானகிரி இயக்குகிறார்.

இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் சந்தானம் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவுடன் மோதினாராம்.

ஹீரோவானாலும் இதுநாள் வரை காமெடி ரூட்டில் பயணித்த சந்தானம், தற்போது ஆக்ஷனுக்கு மாறியுள்ளார்.

முறையாக பயிற்சி பெற்று, கராத்தேவில் சந்தானம் பிரவுன் பெல்ட் வாங்கியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

தல-தளபதி பட இயக்குனருக்கு ஓகே சொல்வாரா இளையராஜா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமுத்திரக்கனியின் உதவியாளரும் நண்பருமான பாணி இயக்கியுள்ள படம் ராணி. இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் முக்கிய கேரக்டர்களில் இரண்டு குழந்தைகள் நடித்துள்ளனர்.

அவர்களுக்கு இணையான பாத்திரத்தில் தன்ஷிகா நடித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு பேசும்போது…

“புது இயக்குனர்கள் எல்லாம் எப்படி? இளையராஜாவை புக் செய்கிறார்கள் என தெரியவில்லை.

நானும் இளையராஜாவின் இசையில் என் படங்கள் உருவாக வேண்டும் என நினைப்பேன்.

ஆனால் அதற்கான கதையை நான் அமைக்க வேண்டும்.

கதை இவ்வளவுதானா? இதற்கு நான் இசையமைக்க வேண்டுமா? என இளையராஜா என்னை பார்த்து கேட்டு விடக் கூடாது.

ஒரு நல்ல கதையை உருவாக்கி அவரிடம் கால்ஷீட் கேட்க வேண்டும்” என தன் ஆதங்கதை கூறினார் பேரரசு.

விஜய் நடித்த திருப்பாச்சி, அஜித் நடித்த திருப்பதி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் பேரரசு என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

விஷாலை தொடர்ந்து விஜய்யுடன் மோதும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பரதன், அடுத்த வருடம் 2017 பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இதே நாளில் சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள கத்தி சண்டை படமும் வெளியாகவுள்ளது.

இந்த இரண்டு படங்களும் மோதவுள்ள நிலையில், தற்போது, இத்துடன் 3வது ஒரு படமும் இணையக்கூடும் என சொல்லப்படுகிறது.

அது கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள கவண் படமாகும்.

இதில் டி.ராஜேந்தர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் காதலியின் கணவரை இளையராஜாவுடன் ஒப்பிட்ட பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படப்புகழ் தன்ஷிகா நடிப்பில் பாணி இயக்கியுள்ள படம் ராணி.

இளையராஜா இசையமைத்துள்ள இதன் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு பேசியதாவது…

“நான் என் வாழ்க்கையில ரெண்டே பேர பாத்துதான் பொறாமைப்படுறேன்.

என்னையும் ஒரு பெண் காதலித்தாள். ஆனால் எங்க மேரேஜ் நடக்கல.

இப்போ அவளோட புருசன பாத்து நான் பொறாமைப்படுறேன்.

அதுப்போல் இப்போது இளையராஜாவையும் பார்த்து பொறாமைப்படுறேன்.

இளையராஜாவின் இசையை கேட்டால் எவ்வளவு நீண்ட பயணம் வேண்டாலும், போரடிக்காமல் பயணிக்கலாம்.

ஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் இசைஞானி இளையராஜாவை மிஞ்ச முடியாது” என்று பேசினார் பேரரசு.

More Articles
Follows