கண்ணா… இனிமே ஹோட்டல்ல ‘கபாலி’யும் கிடைக்கும்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்தை முதல் நாள் முதல் காட்சியை தியேட்டர்களில் பார்த்துவிட கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக கபாலி படத்தை ஹோட்டல்களிலும் ரிலீஸ் செய்கின்றனர்.

பெங்களூர், எலக்ட்ரானிக் சிட்டியிலுள்ள க்ரவுன் பிளாஸா மற்றும் இலகங்காவிலுள்ள ராயல் ஆர்ச்ஸிட், குமரக்ருபா சாலையிலுள்ள லலித் அசோக் உள்ளிட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஒரு நாளைக்கு 4-5 காட்சிகள் திரையிடப்படவுள்ளதாகவும் முதல் 3 நாட்களுக்கு மட்டும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரு டிக்கெட்டுக்கு ரூ.1,300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.

இதற்காக குறிப்பிட்ட சில துறைகளிடம் இருந்து அனுமதி பெற விநியோகஸ்தர்கள் முயற்சித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவை சந்தித்த தனுஷின் மகன் யாத்ரா.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை மணந்தார் தனுஷ்.

தற்போது இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு குழந்தைகள் உள்ளனர்.

இதில் யாத்ரா படிக்கும் பள்ளியில் மாணவர்களை இன்று சென்னை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களும் இருந்துள்ளார்.

அவரும் பள்ளி மாணவர்களை சந்தித்து, அவர்களுடன் அன்பாக பேசி சாக்லேட் கொடுத்தார்.

அப்போது ரஜினியின் பேரன் யாத்ராவிடம் முதல் அமைச்சர் பேசியுள்ளார்.

முருகதாஸ்-சூர்யா கூட்டணியில் இணைந்த நதியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 1980-90களில் நடிப்பாலும் அழகாலும் நட்சத்திரங்களையே கவர்ந்தவர் நதியா.

பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜெயம் ரவியுடன் ‘எம்.குமரன் s/o மகாலட்சுமி’ படத்தில் நடித்து ரீஎன்ட்ரி ஆனார்.

இந்நிலையில் தற்போது முருகதாஸ் இயக்கவுள்ள ‘வாஸ்கோடகாமா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரித்திசிங் நடிக்க, வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நதியா நடிக்கவுள்ளதாகவும் இவரும் வில்லத்தனம் செய்வார் என்றும் கூறப்படுகிறது.

வெகுவிரைவில் இதன் படத்தின் தொடங்கப்படவுள்ளது.

‘இனிமேலும் இதான் என் ரூட்…’ – கீர்த்தி சுரேஷ் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடித்த படங்கள் வெளியாகும் முன்னரே பல படங்களில் கமிட் ஆகி மற்ற நடிகைகளுக்கு தண்ணி காட்டியவர் கீர்த்தி சுரேஷ்.

ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, விஜய்-60 என டாப் ஹீரோக்களின் படங்களில் தவறாமல் இடம் பெற்று வருகிறார்.

இந்நிலையில் இவரின் சமீபத்தில் இவர் கூறியதாவது…

“எனக்கு ஹோம்லியான கேரக்டர்களே பெயரை கொடுத்துள்ளது. அதுதான் எனக்கும் செட் ஆகிறது.

இதே ரூட்டை தொடர இருக்கிறேன். கவர்ச்சியாக நடித்து இமேஜை கெடுத்துக் கொள்ளப் போவதில்லை.

பாடல் காட்சிகளில் கூட மிதமான கிளாமரைதான் தருவேன்” என கண்டிப்பாக கூறியுள்ளார்.

(பின்குறிப்பு: படத்திற்கும் அவர் சொன்னற்கும் சம்பந்தமில்லை)

கபாலி வரட்டும்.. காத்திருக்கும் தனுஷ் – பிரபுதேவா – விக்ரம்பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ வருகிற ஜுலை 22ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்களுக்கிடையில் இப்படம் வெளியாவதால் திரையுலகில் மாபெரும் புரட்சியை உருவாக்கும் எனத் தெரிகிறது.

எனவே இப்படம் வெளியாகும் நாளில் எந்த ஒரு படத்தையும் வெளியிட எந்தவொரு தயாரிப்பாளரும் முன்வரவில்லை.

தமிழில் மட்டுமில்லை தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியாவில் எந்த படமும் வெளியாகவில்லை.

இதனையடுத்து, அடுத்த வெள்ளிக்கிழமை ஜுலை 29ஆம் தேதியும் எந்த படங்களும் வெளியாகாது எனத் தெரிகிறது.

மேலும் ‘கபாலி’ படத்திற்கு ரசிகர்களின் அமோக ஆதரவு கிடைத்தால், ஆகஸ்ட் 5ஆம் தேதியும் படங்கள் வெளியாகாது.

எனவே கிட்டதட்ட 3 வாரங்களுக்கு கபாலி மட்டும்தான் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்.

இதனையடுத்து ஆகஸ்ட் 12ஆம் தேதிதான் புதிய படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போதுதான் தனுஷின் ‘தொடரி’, விக்ரம் பிரபுவின் ‘வாகா’, பிரபுதேவாவின், ‘தேவி’, ஆகிய படங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

கபாலி டிக்கெட்டு காலி: சிம்பு-வெங்கட் பிரபு எடுத்த புது முயற்சி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி ரிலீசுக்கு பல ஐடி நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளன.

அப்படி இருக்கும்போது சினிமா துறையைச் சார்ந்தவர்கள் சும்மா இருப்பார்களா?

அன்றைய தினம் அறிவிக்கப்படாத விடுமுறை நாளாக மாறிவிட்டது.

இந்நிலையில் சிம்பு, தற்போது நடித்துவரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படக்குழுவினர் அனைவருக்கும் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் எடுத்து விட்டாராம்.

இதுபோல் சென்னை 28 இரண்டாம் பாகத்தின் கலைஞர்களுக்கும் வெங்கட் பிரபு டிக்கெட் எடுத்துவிட்டதாக அறிவித்து இருக்கிறார்.

இவர்களைத் தொடர்ந்து அருண் விஜய்யின் குற்றம் 23 படக்குழு தங்கள் படப்பிடிப்பை ஒத்தி வைத்துள்ளனர்.

More Articles
Follows