தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் மே 17 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலங்களில் சில தளர்வுகளுடன் வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கடந்த 48 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் சுரக்குடியைச் சேர்ந்த டிரைவர் நடேசன் என்ற 37 வயது இளைஞர் ஒருவரை அடிதடி வழக்கில் காரைக்கால் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
பரிசோதனை முடிவில் அந்த கைதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கைதிக்கு கொரோனா உறுதியானதால் அவரை கைது செய்த காவலர்கள் 2 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அவருக்கு எப்படி கொரோனா தொற்று வந்தது? அவர் எங்கு சென்றார்? என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது.
அவர் அண்மையில் சென்னைக்கு சென்று வந்துள்ளதாகவும் ஒரு தகவல் கசிந்து வருகிறது.
அவரின் குடும்பத்து உறவினர்களையும் பரிசோதனை செய்யவுள்ளனர்.
இந்த செய்தி காரைக்கால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பகுதியை சார்ந்த கார்த்தி என்ற வாலிபரிடம் நாம் விசாரித்த போது…
அவர் ஊரடங்கில் எங்கும் சென்றதாக தெரியவில்லை. ஆனால் கொரோனா தொற்று எப்படி வந்தது? என்பது எங்களுக்கே தெரியவில்லை. விவரங்கள் தெரிந்தால் தெரிவிக்கிறேன்” என சொன்னார்.
First Corona Virus positive case in Karaikal