தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் விஜய்சேதுபதி நடித்து வரும் புதிய படப்பிடிப்பு பழனி அருகே காரமடை தோட்டம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
இதனையறிந்த ஏராளமான பொதுமக்கள் விஜய்சேதுபதியை காண அங்கே குவிந்தனர்.
அப்போது நடிகர் மற்றும் ஊழியர்கள் சமூக இடைவேளை பின்பற்றவில்லை எனவும் முகக்கவசம் அணியவில்லை எனவும் சுகாதாரத்துறை தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்பொழுது படப்பிடிப்புத் தளத்தில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என ரூபாய் 1500 அபராதம் விதித்து உள்ளனர்.
இதே படக்குழுவினர் தான் சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்டில் சூட்டிங் நடத்தியபோது அபராதம் கட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Fine for not wearing face shield in the shooting of Vijay Sethupathi’s movie