தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கலைவாணர் என்எஸ்கே கால சினிமாவில் ஒருவருக்கு பல திறமைகள் இருந்தால் மட்டுமே சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன. அதாவது நடிக்க தெரியனும்.. பாட தெரியனும்.. வீர பயிற்சிகள் தெரிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட தகுதிகள் தேவைப்பட்டன.
மேலும் சிகப்பாக இருக்க வேண்டும். நல்ல அழகாக இருக்க வேண்டும் எனவும் எழுதப்படாத விதிமுறைகள் இருந்தன.
பின்னர் எம்ஜிஆர் சிவாஜி கால சினிமாக்களிலும் இது தொடர்ந்து கொண்டே இருந்தன.
பின்னர் நாளடையில் அதாவது 1960களில் பாடகர்கள் அறிமுகமாகினர். நடிகர்கள் பாட்டுக்கு வாய் அசைத்தால் போதும் என்ற நிலை உருவானது. இதனால் நடிகர்களுக்கு லேசான பணிச்சுமை குறைந்தன.
அதன்பின்னர் 1970 மற்றும் 1980களில் பிற மொழி நடிகர் நடிகைகள் மற்ற மொழி படங்களில் நடித்தாலும் அவர்களுக்கு மொழி தெரியாவிட்டாலும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டிகள் அதிகளவில் வரத் தொடங்கினர்.
மேலும் ஸ்டண்ட் கலைஞர்கள் டூப் போட தொடங்கினர். இதனால் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் கூடுதலாக பணிச்சுமை குறைந்தன.
ரஜினிகாந்த் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு வரை சிகப்பு தோல் நடிகர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தன. அதனை ரஜினி முறியடித்தார். கருப்பு நிற மனிதர்களாலும் சாதிக்க முடியும் என நிரூபித்தார்.
இதனால் விஜயகாந்த் சரவணன் பார்த்திபன் உள்ளிட்ட பல திறமையானவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. ராதிகா, மாதவி உள்ளிட்ட மாநிற நடிகைகளுக்கும் வாய்ப்புகள் வந்தன.
இப்படியாக சினிமாவிற்கான தகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கின.
1990களில் சினிமாவின் வாரிசுகள் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்தன. ஒரு பிரபலத்தின் வாரிசு என்ற அடையாளமே போதுமானதாக கருதப்பட்டது.
2000 கால கட்டங்களில் பணம் இருந்தால் படம் எடுக்கலாம். அந்த நபரே நாயகனாக நாயகியாக நடிக்கலாம் எனவும் தமிழ் சினிமா மாறியது.
இதனிடையில் திறமைக்கான மதிப்புகள் குறைந்து நடிகைகளின் அட்ஜஸ்ட்மெண்ட்களும் அதிகரிக்க ஆரம்பித்தன.
2010 கால கட்டங்களில் மொழி தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு வகையில் அவர் மக்களிடையே பிரபலமாக இருந்தால் போதும் சினிமாவில் வாய்ப்புகள் வரத்தொடங்கியது.
மேலும் சின்னத்திரை நடிகர்களுக்கும் சினிமாவில் வாய்ப்புகள் பெருக ஆரம்பித்தன.
தற்போது 2020 ஆண்டை கடந்துவிட்டோம். சோஷியல் மீடியாக்களின் ஆதிக்கம் உச்சத்தில் உள்ளன.
யூடிப் பிரபலம்… டிக்டாக் பிரபலம்.. ட்விட்டர் பிரபலம்.. பேஸ்புக் பிரபலம்… இன்ஸ்ட்ரா பிரபலம் உள்ளிட்டோருக்கு சினிமாவில் வாய்ப்புகள் பெருக தொடங்கியுள்ளது..
அண்மையில் ஒரு திறமையான இளம் நடிகை இயக்குனரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார். அதற்கு உனக்கு இன்ஸ்ட்டாகிராமில் எவ்வளவு பாஃலோயர்ஸ் இருக்காங்க? என கேட்டுள்ளார். அதற்கு அவரோ 20,000க்கும் குறைவாகவே உள்ளது என சொல்லியுள்ளார்.
அது போதுமானதாக இல்லை. இன்ஸ்ட்டாவில் 50000 பாலேஃயர்ஸ் இருந்தால் சினிமா சான்ஸ் ரெடியாக இருக்கு என்றாராம்.
அட்ட்ட்டா… இதுவல்லவோ தமிழ் சினிமாவிற்கான தகுதி… தயாரிப்பாளர்களே… இயக்குனர்களே… தமிழ் சினிமாவை வாழ விடுங்க.. தகுதியற்ற சினிமாவாக கோலிவுட்டை மாற்றிவிடாதீர்கள்.
சோஷியல் மீடியாக்கள் மூலம் பிரபலமாகி சில திறமையானவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவது தவறில்லை. ஆனால் இங்கே பாஃலோயர்ஸ் மட்டுமே ஒரு சினிமாவிற்கான தகுதியாக மாறிவிடுமா என்ன? அதுவும் பாஃலோயர்ஸ் ஏற்ற பணம் கொடுத்து பெறுபவர்களும் இங்கே அதிகளவில் உள்ளனர்.
எனவே சிந்திப்பீர்.. சிறப்பான தமிழ் சினிமா வளர வழி கொடுப்பீர்.
கூடுதல் தகவல்…
பிரபலமான நடிகைகளின் இன்ஸ்டாகிராமில் பாஃலோயர்கள் பற்றிய தகவல்…
இந்திய அளவில் நடிகைகளில் பிரியங்கா சோப்ரா 69.6 மில்லியன் பாஃலோயர்ஸ்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
ராஷ்மிகா மந்தனா. – 23 மில்லியன் பாஃலோயர்ஸ்
காஜல் அகர்வால். – 20 மில்லியன் பாஃலோயர்ஸ்
சமந்தா – 19.2 மில்லியன் பாஃலோயர்ஸ்
ஸ்ருதிஹாசன் மற்றும் டாப்ஸீ – 18 மில்லியன் பாஃலோயர்ஸ்
filmi street exclusive warning for Tamil Cinema