தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.
சிறிது நேரத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், சங்கத்தின் செயல்பாடுகள் சரியில்லை என்றும், ஊழல் நடந்திருப்பதாகவும் சேரன் தலைமையிலான தயாரிப்பாளர்கள் குழு புகார் தெரிவித்தது.
இதன் காரணமாக விஷால் சங்கத்தின் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று சில உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
இதனையடுத்து விஷால் மற்றும் சேரன் தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் எல்லை மீறியதால் இந்த பொதுக்குழு கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தேசிய கீதம் மட்டுமே ஒலிக்கப்பட்டது. அதன்பின்னர் நடந்த பிரச்சினையால் விஷால் வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.