பஞ்சாப் சர்வதேச படவிழாவில் விருது பெற்ற *பென்டாஸ்டிக் பிரைடே*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பென்டாஸ்டிக் பிரைடே'( Fantastic Friday) என்ற தமிழ் குறும்படம் சமீபத்தில் அம்ரிட்சர், பஞ்சாபில் நடந்த குளோபல் சர்வதேசத் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு, சிறப்புப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றது.

இந்தப்படத்தின் இயக்குனர் மணிமேகலை தமிழ்நாட்டைச் சார்ந்தவர். இந்தத் திரைப்படவிழாவில் பஞ்சாப் திரைத்துரையினரும், தேசிய விருதுபெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இயக்குனர் மணிமேகலையின் கதைத்தேர்வு, மற்றும் அவர் அதைக் கையாண்டு இயக்கியவிதத்திற்காக இவ்விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நம் சமுதாயத்தில் மூடநம்பிக்கைகள் எப்படி ஆழமாக வேரூன்றி இருக்கின்றன மற்றும் அவை எவ்வாறு நம் அன்றாட வாழ்வில் குறுக்கிட்டு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பவற்றை மெல்லியதாக விளக்குவதாக இப்படம் அமைந்துள்ளது.

இப்படத்தின் இயக்குனர் நம் எண்ணங்களே நம் செயல்களாக மாறுகின்றன என்ற கருத்தினை ஆழமாக முன் வைக்கிறார்.

மணிமேகலை மானிடவியல் பயின்றவர். நியூயார்க் பிலிம் அகாடமியில் இயக்குனர் பயிற்சி பெற்றவர். இவர் தற்பொழுது முழுநீளப் படத்திற்கான திரைக்கதை எழுதுவதில் ஈடுபட்டுள்ளார்.

பாசத்தமிழன் ஆர்.கே.சுரேஷ் பெயரில் திருத்தம் சொன்ன சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வில்லன் நடிகரும் பிரபல தயாரிப்பாளரான ஆர்.கே. சுரேஷ் அவர்கள் பில்லா பாண்டி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.

மேலும் இவரது நடிப்பில் வேட்டை நாய் என்ற படமும் உருவாகிவருகிறது.

இந்நிலையில் பில்லா பாண்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சீமான் கலந்துக் கொண்ட போது….

தமிழர்கள் மட்டும்தான் தன் பெயருக்கு முன்னால் ஆங்கிலத்தில் இன்சியல் போடுகிறார்கள். அதையும் தமிழில்தான் போட வேண்டும்.

சுரேஷ் களஞ்சிய தேவரின் மகன். எனவே அவர் ஆர்.கே. சுரேஷ் என ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தினார்.

பில்லா பாண்டி பட போஸ்டர்களில் பாசத்தமிழன் ஆர்.கே.சுரேஷ் என்ற டைட்டில் கார்டு போடப்படுகிறது.

RK Suresh must make some corrections in his name says Seeman

மலையாளத்திலும் ஹீரோவாக அறிமுகமாகிறார் ஆர்.கே. சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர், வில்லன் நடிகர் என வலம் வந்த ஆர்கே சுரேஷ் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.

இவர் நாயகனாக அறிமுகமாகும் பில்லா பாண்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிலேயே மலையாள சினிமாவில் இவர் நாயகனாக அறிமுகமாகும் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது.

இப்படத்திற்கு கொச்சின் ஷாதி அட் சென்னை 03 (Cochin Shaadhi at Chennai 03) என்று பெயரிட்டுள்ளனர்.

ஆர்.கே. சுரேஷ் இதற்கு முன்பே ஓரிரு மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RK Suresh Hero debut movie in Malayalam titled Cochin Shadhi at Chennai 03

ஆலுமா டோலுமா பாணியில் ரஜினிக்கு ட்யூன் போட்ட அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பேட்ட படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் பிரபல இயக்குனர் மகேந்திரன், சசிகுமார், விஜய்சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடலை செம குத்து பாடலாக ட்யூன் போட்டுள்ளாராம் அனிருத்.

இந்த பாடல் அஜித்தின் வேதாளம் படப்பாடலான ஆலுமா டோலுமா பாடல் பாணியில் இருக்கும் என பேட்ட படத்தில் பங்கு பெற்ற ஒரு நடிகர் கூறியுள்ளார்.

Anirudh composed music for Rajini in Aaluma Doluma style

முழு ஸ்கிரிப்டும் படிச்சிட்டதால ஈசியா இருந்துச்சி…; *பரியேறும் பெருமாள்* எடிட்டர் செல்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பா.இரஞ்சித்தினுடைய “நீலம் புரொடக்‌ஷன்ஸ்” நிறுவனத்தின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் இமாலய வெற்றியடைந்து, சமூகத்தில் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் “பரியேறும் பெருமாள்”.

கதை மாந்தர்கள், கதைக் களம், கதை சொல்லும் பாங்கு, கதை கூறும் கருத்து என அத்தனையும் சேர்ந்து பார்வையாளர்களுக்கான முழு சினிமாவாக பரியேறும் பெருமாள் உருவாக திரைக்குப் பின்னால் உழைத்தவர்கள் பலபேர். இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீஈதர், கலை இயக்குநர் ராமு, எடிட்டர் செல்வா ஆர்.கே ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது.

இவர்களில் குறிப்பாக படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே -வுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை பரியேறும் பெருமாள் திரைப்படம் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

அடிப்படையில் விசுவல் கம்யூனிகேசன் படித்தவரான செல்வா, பிரபல படத் தொகுப்பாளர் பிரவீன் கே.எல் இடம் ” மங்காத்தா” உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட படங்களில் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார்.

பிறகு பா.இரஞ்சித் இயக்கிய “மெட்ராஸ்” திரைப்படத்தில் அசோசியேட் எடிட்டராக பணிபுரிந்திருக்கிறார்.
பின்னர் ஜெயம் ரவி நடித்த “அப்பாடக்கர்” படத்தின் மூலம் எடிட்டராக அறிமுகமானவர் “ராஜா மந்திரி”, காலக்கூத்து ” கத்திச் சண்ட”, “இவன் தந்திரன்” படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

இப்படி சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தவரை “பரியேறும் பெருமாள்” ஜெட் வேகத்தில் பறக்கச் செய்திருக்கிறது.

இந்த உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், “இரஞ்சித் அண்ணா என்னைக் கூப்பிட்டு, ” நீலம் புரடொக்சன்ஸ்” முதல் படம் பண்ண போறோம், இதுதான் ஸ்கிரிப்ட், ரொம்ப எமோசனலான ஸ்கிரிப்ட், முழுசா படிச்சிட்டு சொல்லு.. அப்படின்னு சொன்னார்.

இயக்குனர் மாரிசெல்வராஜிடம் ஸ்கிரிப்ட் வாங்கி படிச்சிட்டு போய், யார் அந்த அப்பா கேரக்டர் பண்ண போறாங்கன்னு கேட்டேன். மேலும், முழு ஸ்கிரிப்டும் படிச்சிட்டதால என்னால ஈசியா கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சது.

இயக்குனர் மாரி செல்வராஜிடம் பேசிய பிறகு இப்படிப்பட்ட கதைக்காகத்தான் நான் காத்திருந்தேன் அதனால் எளிதாக ஆர்வத்துடன் வேலைசெய்ய ஆரம்பித்தோம்.

அதனால விசுவலா படம் எடிட்டிங் டேபிளுக்கு வரும் போது என்னால புரிஞ்சிகிட்டு வேலை பார்க்க முடிஞ்சது.

இயக்குநர் மாரி செல்வராஜ் எடிட்டிங்கிற்கு உட்காரும் போதே, அந்த காட்சியின் பிண்ணனியைக் குறித்தும், அதன் எமோஷன் குறித்தும் விளக்கி விடுவார். அது இன்னமும் எனக்கு வேலை செய்ய சுலபமாய் அமைந்தது.

இந்த வெற்றி எனக்கு பெரிய திருப்புனையையும், நம்பிக்கையையும் தந்திருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த ரஞ்சித் அண்ணாவிற்கும், மாரி செல்வராஜுக்கும் எனது நன்றிகள்” என்கிறார் படபடவென்று…

Editor Selva interview about Pariyerum Perumal Success

நோட்டா தோல்வி. விமர்சனங்களை ஏற்ற விஜய் தேவரகொண்டா விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து கடந்த வாரம் வெளியான படம் நோட்டா.

ஆனந்த் சங்கர் இயக்கிய இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார்.

நோட்டா என்ற அரசியல் ஆயுதம் இருந்ததால் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் படு தோல்வியை தழுவியது.

இந்த விமர்சனங்களை பார்த்த விஜய் தேவரகொண்டா தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

‘நோட்டா’ படத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு நன்றி.

நோட்டா படத்தில் மனதில் பட்டதைச் சொல்லியிருக்கிறேன். பட விமர்சனங்கள் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அனைத்து விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன்.

அடுத்தடுத்த படங்களில் அந்த குறைகளை சரி செய்வேன்.” என பதிவிட்டுள்ளார்.

More Articles
Follows