தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சிக்கு வழக்கம்போல ரோடு முழுவதும் ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
அப்போது சாலை வழியே சென்றுக் கொண்டிருந்த 23வயது சுபஸ்ரீ மீது ஒரு பேனர் விழ, அவர் தன் டூவிலரில் இருந்து கீழே விழுந்தார்.
அந்த சமயம் பார்த்து ஒரு தண்ணீர் லாரி அவர் மீது ஏறிவிட அந்த நிமிடமே அவரின் உயிர் பறி போனது. இந்த சம்பவம் தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இதனையடுத்து பேனரை பிரிண்ட் செய்தவர், லாரியை ஓட்டியவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் சம்பந்தபட்ட அதிமுக பிரமுகர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சில அரசியல் கட்சிகள் இனி தங்கள் விழாக்களில் பேனர்களை வைக்கக் கூடாது என தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
சினிமா உலகிலும் இது தொடர்பான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பேசும்போது.. நான் 30 வருடங்களுக்கு முன்பே கட் அவுட் பேனர்களை வைக்க கூடாது என என் ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
அதுபோல் பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் பேனர்கள் வைக்க கூடாது என விஜய்யும் தெரிவித்துள்ளார்.
காப்பான் பட பிரஸ் மீட்டில் கலந்துக் கொண்ட நடிகர் சூர்யாவும் ரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கு மாறாக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Fans must ban flex banners says Kamal Vijay Suriya