ரஜினியின் வாழ்க்கையை மணல் ஓவியமாக வரைந்த ரசிகர் (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த்.. 140க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் தமிழகத்தையும் மீறியும் மற்ற மாநிலங்களிலும் இவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ரஜினி ரசிகர் ராகுல் ஆர்யா என்பவர் ரஜினியின் மணல் ஓவியத்தை வரைந்துள்ளார்.

ரஜினியின் ஆரம்ப கால வாழ்க்கை முதல், மணல் ஓவியமாக வரைந்து அதை வீடியோவாக ரெக்கார்டு செய்து இணையத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ 200 நொடிகள் ஓடக்கூடியது. (3.20 நிமிடம்)

அந்த வீடியோவை இணைத்துள்ளோம் பாருங்கள்….

கமல் – விஜய் – அஜித்…. ஆளுக்கொரு பண்டிகை…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வருடம் தன் ரசிகர்களுக்காக மூன்று படங்களை கொடுத்தார் கமல்.

இவ்வருடம் விஸ்வரூபம் மற்றும் சபாஷ் நாயுடு ஆகிய இரண்டு படங்களை கொடுக்கவிருக்கிறார்.

இதில் விஸ்வரூபம் படத்தை தீபாவளி வெளியீடாக கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் கம்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் மட்டும் மீதமுள்ளதால், விரைவில் அதை முடித்துவிடுவோம் என ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்திருக்கிறாராம்.

இதனை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி-60’ படத்தை அடுத்த வருடம் 2017 பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் பின்னணி நெல்லை மாவட்டம் என்பதால் அங்கே சூட்டிங் நடத்தவிருந்தனர்.

தினமும் விஜய் ரசிகர்களின் கட்டுங்கடங்காத கூட்டம் கூடியதால், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அதே போன்று செட் போட்டு நடத்தி வருகிறார்களாம்.

இதனையடுத்து சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள தல 57 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

பெரும்பாலும் இதன் படப்பிடிப்பை ஜார்ஜியா, பல்கேரியா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலேயே நடத்த இருக்கிறார் இயக்குனர்.

திரில்லர் படமாக உருவாகவுள்ள இப்படத்தில் இந்திய உளவாளியாக நடிக்கிறார் அஜித்.

நாயகிகளாக அனுஷ்கா மற்றும் ‘இறுதிச்சுற்று” ரித்திகா சிங் நடிக்கிறார்கள். ரித்திகாவுக்கு போலீஸ் அதிகாரி வேடம் என கூறப்படுகிறது.

இப்படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் 14-ம் தேதி (தமிழ்ப் புத்தாண்டு) அன்று திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மணிரத்னம் படத்தில் ஆர்.ஜே. பாலாஜி.. கபாலியுடன் எப்படி கம்பேர்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வானொலி (அட அதாங்க ரேடியோ) என்றாலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் ஆர்ஜே பாலாஜி.

இவர் தற்போது சினிமாவில் காமெடி செய்து கலக்கி வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற சைமா விருது விழாவில் சிறந்த காமெடியன் விருதை நானும் ரௌடிதான் படத்திற்காக பெற்றார்.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ஆர்ஜே. பாலாஜி.

இதுகுறித்து அவர் கூறியதாவது…

“முதலில் இதற்கான வாய்ப்பு வந்தபோது நான் நிஜம் என நினைக்கவில்லை. பின்பு சென்னை வந்தபின் மணிரத்னம் சாரை சந்தித்தேன்.

அவர் என்னிடம் அரை மணி நேரம் கதை சொன்னார். பின்பு அவருடன் செல்ஃபி எடுத்துகொண்டேன்.

நாயகன், தளபதி, அஞ்சலி உள்ளிட்ட மணிரத்னம் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். இன்று அவர் படத்தில் நான் நடிக்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

இது எப்படி இருக்கிறது என்றால் நாம் கபாலி படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு போக நினைக்கலாம். ஆனால் கபாலியாக மாற நினைக்க முடியாது.

என்னைப் போன்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவனுக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைத்தது அப்படிதான் உள்ளது.

இது கனவு நிஜமானதாக நினைக்கவில்லை. அதுக்கும் மேல இது.” என்றார்.

தம்பி கார்த்திக்காக சிங்கத்திற்கு தடை போட்ட சூர்யா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் காஷ்மோரா.

சமீபத்தில் இதன் சூட்டிங் நிறைவுபெற்றது.

எனவே நேற்று முதல் பூஜையுடன் இப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளனர்.

மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சிங்கம்-3’ படத்தையும் தீபாவளிக்கு வெளியிட இருந்தனர்.

ஆனால் தன் தம்பி கார்த்தியின் படமும் தன் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால், லாபம் பாதிக்ககப்படும் என்பதால் ‘சிங்கம்-3’ படத்துக்கு தடை போட்டு விட்டாராம் சூர்யா.

அண்ணன்டா…

‘முதன் முறையாக நட்சத்திரத்தை இயக்குகிறேன்…’ – கமல்ஹாசன்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா நிறுவனத்துடன் இணைந்து கமல் தயாரித்து வரும் படம் ‘சபாஷ் நாயுடு’.

ராஜீவ் குமார் இயக்கிவந்த இப்படத்தை கமலே தற்போது இயக்கி நடித்தும் முடித்துள்ளார்.

இவருடன் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் தன் மகள் ஸ்ருதியை இயக்கிய அனுபவம் பற்றி சமீபத்திய பேட்டியில் கமல் கூறியதாவது…

”இதற்கு முன் நான் நடிகர்களை மட்டுமே இயக்கியுள்ளேன்.

ஒரு நட்சத்திரத்தை நான் இயக்கியதில்லை. ஸ்ருதி ஒரு நடிகை மட்டுமின்றி நட்சத்திரமும் ஆவார். எனவே எனக்கு இது புதிய அனுபவம்தான்.

‘தசாவதாரம்’ படத்தில் நடித்த போது அதில் பேசிய அமெரிக்க உச்சரிப்புகளுக்கு ஸ்ருதிதான் காரணம்” என்றார்.

‘ரஜினி – நயன்தாரா தான் என் பேவரைட்டு…’ ‘அட்ரா மச்சான் விசிலு’ நைனா சர்வார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைவண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அட்ரா மச்சான் விசிலு. சிவா, நைனா சர்வார், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் ஜூலை 7-ம் தேதி வெளியாகிறது.
கன்னடத்தில் பிரபலமான நைனா சர்வாருக்கு இதுதான் முதல் தமிழ் படம்.

இந்நிலையில், தனது சினிமா அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்ட போது கூறியதாவது… “நான் பி காம் ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருக்கிறேன். சொந்த ஊரு பெங்களூரு.

இப்படத்தில் எனக்கு நகைச்சுவையுடன் கூடிய பப்ளியான கேரக்டர். உடனே ஒப்புக் கொண்டேன். ஹீரோ சிவாவுடன் நடிக்கும்போது கன்வீனியன்டாக இருந்தது. தமிழைப் புரிந்து கொள்வேன். ஆனால் பேச தெரியாது.

நானும் இயக்குனரும் சிவா மூலம்தான் பேசிக் கொள்வோம். இப்படத்தில் பவர் ஸ்டாருடன் எனக்கு காட்சிகள் கிடையாது. அவருடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தால் தயக்கம் இல்லாமல் நடிப்பேன்.

என் பேவரைட் ஹீரோ எவர்கிரீன் ஒன் அன்ட் ஒன்லி ரஜினி சார்தான். ஹீரோயின் நயன்தாராதான்” என்றார்.

More Articles
Follows