ரஜினியை ஹிந்தியில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் மீண்டும் தமிழுக்கு வருகிறார்

ரஜினியை ஹிந்தியில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் மீண்டும் தமிழுக்கு வருகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தி பிரபல டைரக்டர் , தயாரிப்பாளர் K.C. பொக்காடியா ( K.C.Pokadia ) மீண்டும் தமிழுக்கு வருகிறார். BMB புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இவர் பல பிரமாண்ட படங்களை இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரித்தார்.

சென்னையில் வளர்ந்த இவர், இந்தியில்
மட்டும் 59 படங்களை தயாரித்துள்ளார்.

அதில் 11 படங்களில் அமிதாப்பச்சனும், 5 படங்களில் ரஜினிகாந்தும்,18 படங்களில் சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் இந்த மூன்று கான்களும் நடித்தார்கள்.

மேலும் 5 படங்களில் அட்சயகுமாரும் மற்ற படங்களில் பிரபல நடிகர்கள் நடிகைகள் பலரும் நடித்துள்ளனர்.

ரஜினிகாந்தை இந்தியில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

இவர் இந்தியில் மட்டும் 38 படங்களை இயக்கியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாகதென்னிந்திய மொழி இயக்குனர்கள் பலரை இந்தியில் அறிமுகப்பபடுத்தியுள்ளார்.

இவர் இப்பொழுது தமிழிலும் தெலுங்கிலும் படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த B.M.B. புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் 25 வருடங்களாக ஒரு அங்கமாக இருக்கும் தமிழ் தயாரிப்பாளர், நடிகர் தமிழ்மணியின் வீட்டுக்கு இன்று திடீரென்று சென்றார் கே.சி.பொக்காடியா.

அவரிடம், தமிழில் பல படங்களை தயாரிப்பதாக உறுதியளித்துள்ளார்.

எனவே விரைவில் புதுப்பட அறிவிப்புகளை எதிர்ப்பார்க்கலாம்.

Famous producer KC Pokadia to produce films in Tamil again

விஷாலுக்கு எதிராக லைகா வழக்கு.; ரூ 5 லட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்த கோர்ட்

விஷாலுக்கு எதிராக லைகா வழக்கு.; ரூ 5 லட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்த கோர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016ல் நடிகர் விஷால் ‘மருது’ திரைப்பட தயாரிப்புக்காக கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியனிடம் 21 கோடியே 29 லட்சம் கடன் பெற்று இருந்தாராம்.

அதனை திருப்பி செலுத்த முடியாததால் தயாரிப்பு நிறுவனமான லைகாவை அணுகி தன் கடனை அன்பு செழியனுக்கு செட்டில் செய்யுமாறு கோரியுள்ளார்.

அதன்படி, லைகா நிறுவனமும் விஷாலின் கடனை அடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனவே கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லைகா உடன் நடிகர் விஷால் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, லைகா நிறுவனம் தன்னுடைய கடனை செலுத்திய தொகைக்கு 30% வட்டியுடன் தவணை முறையில் செலுத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, துப்பறிவாளன் 2 திரைப்படம் வெளியான பின் 2020 மார்ச் மாதத்தில் 7 கோடியும், மீதத் தொகையை 2020 டிசம்பருக்குள் செலுத்தி விடுவதென அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாக கூறப்படுகிறது

இந்த நிலையில், பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் விஷால் தரப்பில் பதில் அளிக்கவில்லை எனவும், மொத்தமாக 30,05,68,137 ரூபாயை வழங்க விஷாலுக்கு உத்தரவிட கோரியும் லைகா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் என்பவர் ‘துப்பறிவாளன் 2’ படம் வெளியாகும் சமயத்தில் விஷால் வாங்கிய கடன் தொகையை திருப்பி வாங்குவதாக லைகா ஒப்பு கொண்டுவிட்டு, தற்போது முழு தொகையையும் கோரி படத்தின் வெளியீட்டிற்கு முன்பே வழக்கு தொடர்ந்துள்ளது பொருந்தாது என தெரிவித்து, லைகாவின் மனுவை 5 லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

High Court fines Lyca Productions for filing case against Vishal

உடையும் ‘வலிமை’ கூட்டணி..; வினோத் இயக்கும் அஜித் 61 படத்திற்கு யுவனுக்கு பதிலாக இவரா.?

உடையும் ‘வலிமை’ கூட்டணி..; வினோத் இயக்கும் அஜித் 61 படத்திற்கு யுவனுக்கு பதிலாக இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’.

ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’வாக நடித்த ஹூமா குரேஷி நாயகியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இப்பட முதல் சிங்கிள் ‘நாங்க வேற மாறி’ பாடல் சமீபத்தில் வெளியாகி ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று யூடிப்பில் சாதனை படைத்து வருகிறது.

‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் இணைந்த இந்த கூட்டணி தற்போது ‘வலிமை’ படத்தில் இணைந்துள்ளதை அடுத்து மீண்டும் தல 61 படத்திற்காக இணையவுள்ளது.

அஜித்தின் 61-வது படத்தையும் ‘வலிமை’ இயக்குநர் வினோத்தே இயக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்திற்கு யுவன் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்துக்கான ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் மாதம் ஆரம்பிக்க உள்ளனர்.

Ghibran to compose music for Ajith’s next ?

சிவகார்த்திகேயனின் ‘சிங்க பாதை’-க்கு இசை தடம் போடுவது இவரா?

சிவகார்த்திகேயனின் ‘சிங்க பாதை’-க்கு இசை தடம் போடுவது இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருடத்திற்கு இரண்டு படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் தற்போது வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கால் இவரது படங்கள் ரிலீசுக்கு வரிசைக் கட்டி நிற்கின்றன.

சூர்யா தனுஷ் விஜய்சேதுபதி ஆகிய முன்னணி் நடிகர்கள் தங்கள் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்தாலும் தான் நடித்த படத்தை ஓடிடியில் விற்காமல் நிற்கிறார் சிவகார்த்திகேயன்.

அண்மையில் சிவகார்த்திகேயன் தயாரித்த ‘வாழ்’ திரைப்படம் ஓடிடி-யில் ரிலீசானது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அயலான்’ மற்றும் ‘டான்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி வருகின்றன.

மற்றொரு படமான ‘டாக்டர்’ படம் ரிலீஸுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகிவிட்டது.

இந்த படங்களை அடுத்து அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அசோக் என்பவரின் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்
சிவகார்த்திகேயன்.

இப்படத்துக்கு ரஜினியின் பன்ச் டயலாக்கான ‘சிங்கப்பாதை’ என்பதை டைட்டிலாக வைக்கவுள்ளனர் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

தற்போது ‘சிங்கப்பாதை’ படத்துக்கு இமான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Imman to score music for Sivakarthikeyan’s next

‘சார்பட்டா பரம்பரை’ கலைஞர்கள் இணைந்துள்ள ‘4 SORRY’ படத்துக்கு சென்சாரில் பாராட்டு

‘சார்பட்டா பரம்பரை’ கலைஞர்கள் இணைந்துள்ள ‘4 SORRY’ படத்துக்கு சென்சாரில் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சார்பட்டா பரம்பரை’ – ‘டாடி’ ஜான் விஜய், ‘கோனி’ காளி வெங்கட் ரித்விகா, சாக்‌ஷி அகர்வால் நடித்துள்ள ‘4sorry’ படத்துக்கு சென்சாரில் UA சான்றிதழ் கிடைத்துள்ளது.

மேலும் சென்சார் குழுவினர் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

சக்திவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘4 sorry’.

இதில் காளி வெங்கட் , பிக் பாஸ் டேனியல், கார்த்திக் அசோகன், ரித்விகா, சாக்‌ஷி அகர்வால், சஹானா செட்டி, ஜான் விஜய், முத்துக்குமார், ஆர்.எம்.ஆர். மனோகர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை சேஃப்டி ட்ரீம் ப்ரொடக்ஷன் ரூல் பிரேக்கர்ஸ் புரோடக்சன் மேஜிக் லேன்டர்ன் புரோடக்சன் தியா சினி கிரியேஷன்ஸ் ஆகிய நான்கு தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பில் என். செந்தில் பிரபு, சக்தி வேல், ஜெகன் நாராயணன், கார்த்திக் அசோக் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்தப் படம் சமுதாயத்தில் வாழும் சாதாரண மனிதர்கள் தங்களின் தவறை உணரும்போது கேட்கும் முதல் வார்த்தையான மன்னிப்பை சார்ந்து உருவாகியிருப்பதால் படத்துக்கு 4sorry என பெயரிடப்பட்டுள்ளது.

நான்கு சாதாரண மனிதர்களின் வாழ்க்கை இயல்புகளை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லப்பட்டுள்ளது. இது ஆன்தாலஜி படமாக வெளிவர உள்ளது.

சமீபத்தில் இந்தப் படத்துக்கு சென்சார் குழுவுக்கு திரையிட்டது படக்குழு. ஆந்தலாஜி ஜானர்ல வித்தியாசமான படமாக இருக்கிறது என்று சென்சார் குழு படக் குழுவை வெகுவாக பாராடியதாம்.

திரையுலகில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

தொழில் நுட்ப கலைஞர்கள்:
நடிகர்கள்: காளி வெங்கட் , பிக் பாஸ் டேனியல், கார்த்திக் அசோகன், ரித்விகா, சாக்‌ஷி அகர்வால், சஹானா செட்டி, ஜான் விஜய், முத்துக்குமார், ஆர்.எம்.ஆர். மனோகர்.

ஒளிப்பதிவு: வெங்கடேஷ் பிரசாத்

இசை: பிரசன்னா சிவராமன்

நடிகர்கள்:

எடிட்டிங்: p.k

கலை: ஞானம்

லைன் புரொடுயுசர்: சிவக்குமார்

இயக்கம்: சக்திவேல்

தயாரிப்பு: என்.செந்தில் பிரபு, சக்தி வேல், ஜெகன் நாராயணன், கார்த்திக் அசோக்

மக்கள் தொடர்பு : பிரியா

4 sorry movie team got appreciation from censor board

சிகப்பழகானவர்களுக்கான சினிமா என்பதை மாற்றியவர்.. கோடிகளை கொட்டினாலும் விளம்பரங்களில் நடிக்காதவர்.. முதல்வர் பதவி ஆசையில்லாதவர்..; ரஜினி 46 வருடங்கள் ஒரு பார்வை

சிகப்பழகானவர்களுக்கான சினிமா என்பதை மாற்றியவர்.. கோடிகளை கொட்டினாலும் விளம்பரங்களில் நடிக்காதவர்.. முதல்வர் பதவி ஆசையில்லாதவர்..; ரஜினி 46 வருடங்கள் ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

46 வருடங்களுக்கு முன் 1975 ஆகஸ்ட் 18ல் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரஜினிகாந்த்.

கே பாலசந்தர் இயக்கிய இந்த படத்தில் கமல் ஸ்ரீவித்யா இருவரும் ஜோடியாக நடிக்க கெஸ்ட் ரோலில் நடித்தவர் தான் ரஜினிகாந்த், ரஜினி ரசிகர்கள்

இன்று 46 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் 46YEARSOFRAJINISM என கடந்த ஒரு வாரமாகவே ட்ரெண்டிங் செய்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

ரஜினியை பற்றி சொல்ல வேண்டுமானால் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

எனவே அவரைப் பற்றிய சிறு தொகுப்பு இது..

*1977 -1978 காலகட்டத்தில் வருடத்துக்கு
20 படங்களில் நடித்தவர் இவர்தான்.

*10 வருடங்களில் 100 படங்களில்
நடித்துக் கொடுத்தவர் அவர்தான்.

சிகப்பாக இருப்பவர்களுக்கு மட்டுமே சினிமா சான்ஸ் என்பதை மாற்றிய கறுப்பழகர் இவர்தான்.

*ஐந்தே வருடங்களில் எம்.ஜி.ஆரை விட
அதிக சம்பளம் பெற்றவர் இவர்தான்.

கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்க பலர் ரெடியாக இருந்தாலும் வர்த்தக ரீதியான விளம்பரங்களில் நடிக்காதவர் இவர்தான்.

எந்த சூழ்நிலையிலும் யாரையும் புறம் பேசாத நல்ல மனிதர் இவர்தான்.

ஜப்பான் வரைக்கும் தமிழைக்
கொண்டு சேர்த்தவர் இவர்தான்.

தன் சொந்தப் படத்தில் ஏற்பட்ட
நஷ்டத்தை திரும்ப கொடுத்தவர்
இவர்தான்.

இவரைப் பின்பற்றி சினிமாவுக்கு வந்தவர்கள் பலர். ஆனால் யாரையும் பின்பற்றாதவர் இவர்தான்.

வில்லனாக நடித்து பின்னர் ஹீரோவாகி 40 வருடங்களாக நம்பர் 1 இடத்தை
பிடித்தவர் இவர்தான்.

இன்றைய தலைமுறை நடிகர்களுக்கும் இவரது நம்பர் 1 இடத்தை தொட முடியாத இடத்தில் வைத்தவரும் இவர்தான்.

நூறாவது படம் ஒரு மாஸ் படமாக
அல்லது ஒரு குடும்ப படமாக
கமர்சியல் படம் நடிக்க வேண்டும்
என்று நினைக்கும் நடிகர்களுக்கு
மத்தியில் தனது ஸ்ரீராகவேந்திரரை
தனது 100வது படமாக தேர்வு செயத துணிச்சலானவர் இவர்தான்.

பாபா படம் சரியாக போகவில்லை
என்று தெரிந்ததும் அதற்கான
நஷ்ட ஈட்டை விநியோகஸ்தர்களுக்கு
திருப்பி தந்தவரும் இவர்தான்.

சந்திரமுகி படத்தில் ஜோதிகாவை
மிக முக்கியமான கதாபாத்திரத்தில்
நடிக்க வைததிருந்தலும, சந்திரமுகி
படத்தை இது ரஜினி படம் என்று சொல்ல வைத்தவர் இவர்தான்.

ஒரு வருடம் இரண்டு வருடம் இடைவெளி
ஏற்ப்ப்ட்டு விட்டாலே நடிகர்களுக்கு மார்க்கெட் குறைந்துவிட்டது என்று சொல்வார்கள். ஆனால் 4 வருடம் இடைவெளிக்குப்பிறகு தனக்கான
இடத்தை கொஞ்சமும் கூட குறையாமல்
தக்க வைத்தவர் இவர்தான்

இந்தியாவிலுள்ள மிகப் பெரிய அரசியல்வாதிகள் எல்லோரிடம்
நட்பு கொண்டிருந்தவர் இவர்தான்.

தன்னை விமர்சித்தவர்களை கூட
நண்பர்கள் என்று அழைப்பவர் இவர்தான்.

இவரின் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்து மலேசியா பிரதமர் இவரிடம் செல்பி எடுத்துக் கொண்டார். இன்னொரு நாட்டின் பிரதமர் செல்பி எடுத்துக் கொண்டவர் இவர்தான்.

95 கால கட்டத்தில் அப்போது பிரதமராக இருந்தவர் நரசிம்மராவ். கட்சியின் தமிழக தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். முதலமைச்சர் வேட்பாளராக நீங்கள் இருக்க வேண்டும் என்று சொல்லும்போது எனக்கு வேண்டாம் என்று சொன்னவர் இவர்தான்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியே ரஜினிதான் என மூப்பனாரையே சொல்ல வைத்தவர் இவர்தான்.

அரசியல் கட்சி ஆரம்பிக்கு உள்ளதாக சொன்ன காலத்திலும் முதல்வர் பதவி ஆசையில்லை என்று சொன்னவரும் இவர்தான்.

தன் உடல்நிலையால் கட்சி ஆரம்பிக்க முடியாமல் போன போதும் தன் இமேஜ் பற்றி கவலைப்படாமல் தன்னை நம்பியவர்களை கொரோனா வைரசுக்கு பலிகடா ஆக்க மாட்டேன் என்ற உண்மையை பேசியவரும் இவர்தான்.

அரசியல்வாதிகளே அழகுக்காக அரிதாரம் பூசும் போதும் பொதுவெளியில் வழுக்கை தலை தாடியுடன் வலம் வரும் நடிகரும் இவர்தான்.

இந்திய நாட்டின் பிரதமரே #தலைவா
என்று அழைக்கப்பட்டவரும் இவர்தான்.

#46YEARSOFRAJINISM

தலைவருக்கு வாழ்த்துக்கள்…

#46YEARSOFRAJINISM – A tribute of Super Star Rajinikanth

More Articles
Follows