தமிழ் கற்றதால் தலை கணத்தோடு இருக்கிறோம்; தமிழிசை முன்னிலையில் சீறிய சினேகன்

தமிழ் கற்றதால் தலை கணத்தோடு இருக்கிறோம்; தமிழிசை முன்னிலையில் சீறிய சினேகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ezhuvai Thamizha Music Album Launch news updatesநேற்று மாலை ‘எழுவாய் தமிழா’ என்ற தமிழ் மொழி போற்றும் ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழிசை சௌந்தர்ராஜன், அமெரிக்கை நாராயணன், தமிழ் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு, நடிகர் ராதாரவி, கவிஞர் பிறைசூடன், கவிஞர் சினேகன், டி.பி.கஜேந்திரன், வ. உ.சி பேரன் முத்து குமாரசாமி, செம்மொழி சேலை நெய்து தேசிய விருது பெற்ற ஏ.ஜி.மனோகரன் ஆகியோரும், ஆல்பத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் நவின்சங்கர், ஒளிப்பதிவாளர் சௌ.பாண்டிகுமார், நடனம் சந்தோஷ், பாடலாசிரியர் ரேஷ்மன் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

அதே நேரத்தில் எம்.ஜி.ஆர் உருவ சிலை திறக்க எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டிக்கு ரஜினி சென்றிருந்தார்.

அந்த விழாவில் அவர் பேசும்போது உயர்நிலை பள்ளிவரை 98% மதிப்பெண் எடுத்த நான் மேல்நிலைப் பள்ளி படிப்பை திடீரென ஆங்கில வழி கல்வி பள்ளியில் சேர்ந்ததால் ஆங்கிலம் தெரியாமல் 17%, 18% மதிப்பெண் மட்டுமே பெற்றேன்.

எனவே மாணவர்கள் அனைவரும் பள்ளி முடிந்து கல்லூரி வரும்போது ஆங்கிலம் அவசியம் என்றார்.

அதே நேரம் இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிறைசூடன், “நான் தமிழை தவிர வேறு யாருக்கும் தலைவணங்கியதில்லை.

அதனால் தான் அதிகம் சம்பாதிக்கவில்லை பிற மொழிகள் தமிழர்களை வாழவைக்கலாம். ஆனால் தமிழ் மட்டும் தான் தமிழர்களை ஆளவைக்கும்” என்றார்.

அடுத்து பேசிய சினேகன், “தமிழ் கற்றதால் நீங்கள் (பிறைசூடன்) தமிழன் என்ற தலைகணத்தோடு இருக்கிறீர்கள், இல்லை என்றால் இரண்டு வீடுகள் வேண்டுமானால் அதிகமாக சம்பாதித்து இருக்கலாம்.

ஆனால் தமிழை முழுமையாக கற்ற தன்னிறைவு இருக்காது. ஆகவே தமிழனாக நாம் தலைகணம் கொள்வோம் என்றவர் இப்படி தமிழகத்தில் நேர்மையாக இருப்பவர்கள் தான் விமர்சனங்களை அதிகம் எதிர்கொள்கிறார்கள்” என்றார்.

எம்ஜிஆர் கல்லூரியில் ரஜினி அவர்கள் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கும் அதே நேரத்தில் ‘எழுவாய் தமிழா’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய தமிழிசை அவர்கள், “வீட்டில் குழந்தைகள் பெற்றோர்களை டாடி மம்மி என்று அழைக்கும் ஆங்கில கலாச்சாரத்தை விட்டொழிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

மேலும் தனது பெற்றோர்கள் தமிழ் மீது கொண்ட பாசத்தால் தனக்கு தமிழிசை என்று பெயர் வைத்தார்கள்.

அப்போது என் பெயரை கேட்ட அனைவரும் திமுககாரர்களா நீங்கள் என்று கேட்டார்கள் என்றவர், தேசிய கட்சி என்பதாலேயே பாஜக தமிழுக்கு எதிரானவர்கள் அல்ல.

தமிழை நேசிப்பதால் தான் நான் தமிழக பாரதிய ஜனதாவின் தலைவராகயிருக்கிறேனே ஒழிய வேறு மொழிகளை நேசித்திருந்தால் வேறு மாநில நிர்வாகியாக இருந்திருப்பேன்.

எங்கள் பாஜகவின் ஆட்சி தமிழகத்தில் வந்தால், நாங்கள் தமிழைதான் ஆதரிப்போம். வேறு மொழியை ஆட்சி மொழியாக கொண்டு வர மாட்டோம் என்றார். மேலும் நானும் ஒரு தமிழ் பெண், மருத்துவம் படித்தாலும் பாரதியின் நூல் படித்து தமிழ் கற்றவள்” என்றார்.

விழாவில் பேசிய ஒரிசா பாலு, “இந்தியாவை தவித்து 48 நாட்டின் பாஸ்போர்ட்டில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது.

எனவே தமிழ் மொழி அனைத்து நாடுகளும் மதிக்கும் இடத்தில் தான் உள்ளது நாம்தான் மறந்து விட்டோம் என்றார்” ஆதங்கமாக.

தமிழ் மொழிக்காக இப்படி ஒரு ஆல்பம் தயாரித்ததற்காக ‘முகவை பிலிம்ஸ்’ அங்கயற்கண்ணன் அவர்களை அனைவரும் பாராட்டினர்.

“தமிழுக்காக செலவு செய்வது என் பொற்றோருக்கு நான் செய்யும் கடமை போன்ற உணர்வு” என்றார் தயாரிப்பாளர் அங்கையற்கண்ணன்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் இயக்குனர் காளிங்கன்.

Ezhuvai Thamizha Music Album Launch news updates

Ezhuvai Thamizha Music Album Launch news updates

 

காதல்+பாசம்+ஹாரர் ஆகியவற்றை சொல்ல வரும் வெற்றிமாறன்

காதல்+பாசம்+ஹாரர் ஆகியவற்றை சொல்ல வரும் வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Abi Saravanan starrer horror movie titled Vetrimaaranலுலு கிரியேஷன்ஸ் சார்பில் எம். எஸ்.சுல்பிகர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெற்றிமாறன்’.

அபிசரவணன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் வினோலியா அறிமுகமாகிறார். மனோ என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜெயமணி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

குணசேகரன் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு டேவிட் கிறிஸ்டோபர் என்பவர் இசையமைத்துள்ளார்.

இறைவனின் படைப்பில் அனைத்து உயிரினங்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையை வாழ்கின்றன.

ஆனால் மனிதன் மட்டும் தான் தனது இயல்பு வாழ்க்கைக்கு முரணாக வாழ விரும்புகிறான். அதனால் தான் காதல் என்கிற இயல்பான ஒரு விஷயத்தை அவனால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாமல் அதை தடுக்க பல வழிகளில் முயற்சிக்கிறான்.

இயற்கையின் படைப்பில் காதல் இயல்பான ஒன்று. ஆனால் எப்போதுமே சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் ஆகிவிட்டது.

இதனால் பலர் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சிலர் பலியாகவும் செய்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒருவர் உயிர் தப்பி, தனது நிலைக்கு காரணமானவர்களை பழிவாங்க கிளம்பினால்..? அதுதான் இந்தப்படத்தின் கதை.

இதை கொஞ்சம் ஹாரர் கலந்து வித்தியாசமான முறையில் உருவாக்கியுள்ளார் இயக்குனர் மனோ.

குறிப்பாக பழிவாங்கும் முறையில் நிறைய உத்திகளை கையாண்டுள்ளார்.. அவை படத்தின் ஹைலைட்டான அம்சமாக இருக்கும்.

அதுமட்டுமல்ல இந்த பழிவாங்கும் விஷயத்தில் தந்தை மகன் பாசப்போராட்டமும் அடங்குகிறதாம்..

இந்தப்படத்தின் கதையை போனிலேயே கேட்ட நடிகர் அபிசரவணன், கதையால் ஈர்க்கப்பட்டு உடனே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

தற்போது இந்தப்படம் விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. விரைவில் இசை மற்றும் பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

தொழில்நுட்ப குழு விபரம்

இசை: டேவிட் கிறிஸ்டோபர்
ஒளிப்பதிவு: குணசேகரன்
டைரக்சன்: மனோ
தயாரிப்பு: எம். எஸ். சுல்பிகர் / லுலு கிரியேஷன்ஸ்

Abi Saravanan starrer horror movie titled Vetrimaaran

abi saravanan new movie vetrimaaran

நயன்தாராவின் கோலமாவு கோகிலா பர்ஸ்ட் புள்ளி வெளியானது

நயன்தாராவின் கோலமாவு கோகிலா பர்ஸ்ட் புள்ளி வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara Kolamavu Kokila aka COCO first look released‘டோரா’, ‘அறம்’ படங்களை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோலமாவு கோகிலா’, சுருக்கமாக ‘கோகோ’.

நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, ‘விஜய்டிவி புகழ் ஜாக்குலின் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘எதுவரையோ’ பாடல் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தில் ரிலீஸாகவுள்ளது.

Nayanthara Kolamavu Kokila aka COCO first look released

இதுதானா புதிய அரசியல் மாற்றம்.? ரஜினிக்கு டிராபிக் ராமசாமி கேள்வி

இதுதானா புதிய அரசியல் மாற்றம்.? ரஜினிக்கு டிராபிக் ராமசாமி கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini fans banners disturb issue Traffic Ramasamy raises questionசென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலையை ரஜினிகாந்த் திறந்து வைக்க வந்தார்.

சிலைத் திறப்புக்குப் பின், நடிகர் ரஜினிகாந்த் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற ஏற்பாடு செய்திருந்தனர்.

அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினிகாந்த் அறிவித்த பின், அவர் பங்கேற்கும் முதல் பொதுக் கூட்டம் இது என்பதால் அவரை வரவேற்கும் வகையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர உள்ளதாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி கூறியுள்ளார்.

ஆரம்ப நிலையிலேயே இப்படி பேனர்கள் வைப்பவர்கள் எப்படி அரசியலில் நல்ல மாற்றத்தை கொண்டுவர முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை காவல்துறையும் கைகட்டி வேடிக்கைப் பார்ப்பது சரியல்ல.

அரசியலில் மாற்றத்தை உருவாக்குவோம் என்று கூறி வரும் நடிகர்கள் வழக்கமான அரசியல்வாதிகள் போல் நடந்துகொள்வது வேதனை அளிப்பதாகவும் டிராஃபிக் ராமசாமி கூறினார்.

இது தொடர்பான விழாவில் ரஜினி பேசும்போது… இனி ரசிகர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்க கூடாது அப்படி நடந்துக் கொள்ள கூடாது என்றார்.

மேலும் இதற்காக மக்களிடம் தான் மன்னிப்பு கேட்பதாக அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini fans banners disturb issue Traffic Ramasamy raises question

ரஜினி இனி சூப்பர் ஸ்டார் இல்லை; பட்டம் கொடுத்த தாணு ஏன் இப்படி சொன்னார்.?

ரஜினி இனி சூப்பர் ஸ்டார் இல்லை; பட்டம் கொடுத்த தாணு ஏன் இப்படி சொன்னார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hereafter Rajini is not Super Star He is Peoples Leader says Producer Thanuநடிகர் ரஜினிகாந்தை தமிழக மக்கள் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது வழக்கம்.

இவருக்கு முதன்முதலில் சூப்பர் ஸ்டார் என பட்டம் கொடுத்தவர் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

ரஜினி முதன்முதலில் நாயகனாக நடித்த பைரவி படத்தை கலைப்புலி தாணு விநியோகம் செய்யும்போது ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுத்து போஸ்டர்கள் அடித்து ஒட்டியிருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஒரு கல்லூரி விழாவில் ரஜினியும் கலைப்புலி தாணுவும் கலந்துக் கொண்டனர்.

அப்போது தாணு பேசும்போது… இனி ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் அல்ல. அவர் மக்களின் தலைவர்.

நாட்டையும் ஆள்வார் காட்டையும் ஆள்வார் அவருக்கு போட்டி யாரும் இல்லை” என பேசினார்.

Hereafter Rajini is not Super Star He is Peoples Leader says Producer Thanu

சே குவாரா கெட்டப்பில் சூர்யா; சர்ச்சையை கிளப்பும் செல்வராகவன்.?

சே குவாரா கெட்டப்பில் சூர்யா; சர்ச்சையை கிளப்பும் செல்வராகவன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

In NGK first look Suriya get up reflects Che Guevaraசெல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இது சூர்யாவின் 36வது படமாக உருவாகி வருகிறது.

செல்வராகவன் பிறந்தநாள் என்பதால் பரிசாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு என்.ஜி.கே. எனப் பெயரிட்டுள்ளனர்.

அந்த போஸ்டரில் ‘சேகுவேரா’வின் கெட் அப்பில் சூர்யா உள்ளார்.

மேலும் என்ஜிகே என்றால் என்ன? என்பதால் ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் உள்ளனர். எனவே இது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இப்படத்தில் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி நடிக்க, ஜெகபதி பாபு வில்லனாக நடித்து வருகிறார்.

இப்படம் இந்தாண்டு 2018 தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.

In NGK first look Suriya get up reflects Che Guevara

More Articles
Follows