தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’, அஜித் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’ மற்றும் ‘ராஜா’ ஆகிய படங்களை இயக்கியவர் எழில்.
இந்த படங்கள் விஜய்-அஜித்துக்கு சினிமாவில் நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
இந்நிலையில் எழில் இயக்கியுள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் மே 12ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இப்படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சியில் எழில் கலந்துக் கொண்டபோது மீண்டும் அஜித்-விஜய் இணைவீர்களா? என்று கேட்டதற்கு…
“அஜித், விஜய் இருவருக்கும் இன்று மார்கெட் உச்சத்தில் உள்ளது.
அவர்களின் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கதை எழுத வேண்டுமென்றால் ஒரு வருடம் எனக்கு தேவைப்படும்.
ஆனால் அவர்களுடன் மீண்டும் பணிபுரிய ஆசை உள்ளது” என்று தெரிவித்தார் எழில்.
விரைவில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் எழில் என்பது குறிப்பிடத்தக்கது.
Ezhil wish to direct again Vijay and Ajith movies