தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த நான்கு நாட்களாக 15 மாவட்டங்களில் உள்ள தன் ரசிகர் மன்ற உறுப்பினர்களை சென்னைக்கு வரவழைத்து சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த்.
அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார் ரஜினிகாந்த் என்பதை பார்த்தோம்.
இதனிடையே தன் அரசியல் பிரவேசம் பற்றியும், ரசிகர்கள் தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று சந்திப்பு நிறைவுநாளாக இருப்பதால், தன் ட்விட்டரில் இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில்…
“ரசிகர்களை சந்தித்த பிறகு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்றும் மறக்க முடியாது.” என பதிவிட்டுள்ளார்.
RajinikanthVerified account @superstarrajini
Extremely happy after meeting my fans #Memorable #Unforgettable