தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 25 வருடங்களாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன் பேசிய ரஜினியோ, தான் அரசியலுக்கு வர விருப்பம் உள்ளதை போல மறைமுகமாக தெரிவித்திருந்தார்.
இதனால் பலரும் பலவிதமாக பேசி வருகின்றனர்.
ஒரு சிலர் ரஜினியின் அரசியல் வருகையை ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் பேசி வருகின்றனர்.
இதுகுறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மார்க்கண்டேய கட்ஜுவின் முகநூல் பதிவில் அவர் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
அதில்…
‘தென்னிந்தியர்கள் மீது எனக்கு மதிப்பு அதிகம். ஆனால், அவர்கள் நடிகை, நடிகர்கள் மீது முட்டாள்தனமான பக்தி வைத்திருப்பதுதான் எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
ஏன் இப்படி சினிமா நட்சத்திரங்களை மிகைப்படுத்துகிறார்கள்?
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது, தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து சிவாஜி கணேசனின் படம் ஒன்றைப் பார்க்கச் சென்றேன்.
படத்தின் துவக்கத்தில், சிவாஜி கணேசனின் காலை மட்டும்தான் காட்டினார்கள். அதற்கே ரசிகர்கள் அரங்கையே அதிரவைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ரஜினிகாந்த் ரசிகர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் ஏன் முதல்வர் ஆக வேண்டும்… அவர் ஏன் ஜனாதிபதி ஆக வேண்டும்?
வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, பசி, பட்டினி. இதற்கெல்லாம் ரஜினியிடம் தீர்வு உள்ளதா? ரஜினியிடம் ஒன்றுக்கும் தீர்வு இல்லை என்று நினைக்கிறேன்.
அமிதாப்பச்சன் போன்று ரஜினி தலையிலும் ஒன்றும் இல்லை’ என்று பதிவிட்டுள்ளார்.
Ex Supreme Court Judge Markandey Katju oppose Rajinis entry in politics