உலகிலேயே மிகச்சிறந்த CM விஜய்தான்… பார்த்திபன் பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட பார்த்திபன் பேசியதாவது…

”பொடி மாஸ் பண்ண முட்டை வேனும். அதுபோல் மாஸ் படம் பண்ண விஜய் வேனும்.

பன்ச டயலாக் எல்லாருக்கும் எழுதாலாம். விஜய்க்கு பொருத்தமாக இருக்கும்.

விஜய் எந்த மொழி படத்தில் நடித்தாலும் அவரின் பிரம்மாண்டம் ரசிகர்கள்தான்.

விஜய் மற்றும் ரசிகர்கள்தான் இணைந்தால் அது 100 கோடி வசூலிக்கும். விஜய் ஏஆர். ரஹ்மான் இணைந்தால் 200 கோடியும், அத்துடன் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இணைந்தால் 300 கோடியும் வசூலிக்கும்.

ராமநாராயணன் சின்ன பட்ஜெட் படங்களை எடுப்பவர். ஆனால் அவரது மகன் முரளி மிகப்பிரம்மாண்டமாக மெர்சல் படத்தை எடுத்துள்ளார்.

பொதுவாக 25 + 25 சேர்ந்தால் 50தான் வரும். ஆனால் விஜய் 25 + ஏஆர்.ரஹ்மான் 25 சேர்ந்துவிட்டதால் இது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 ஆகிவிட்டது.

ட்விட்டரில் எந்த தமிழ் படத்திற்கும் எமோஜி உருவாக்கப்படவில்லை. அது மெர்சலுக்கு கிடைத்துள்ளது.

விஜய்யின் அடுத்த படத்திற்கு அமெரிக்க அதிபர் வாழ்த்துவார். அவர் உலகின் மிகச்சிறந்த CM விஜய்தான் சொல்லுவார்.

CM என்றால் Collection Mannan என்று பொருள்.

தமிழ்நாட்டை நல்லவர்கள் ஆளட்டும். விவசாயிகளை வாழ வைக்கட்டும் என்று பேசினார் பார்த்திபன்.

Even America President will day Vijay is Best CM says Parthiban

விஜய்யின் அரசியல் ஆசையை ஓபன் செய்த சுந்தர் சி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், அட்லி, ஏஆர். ரஹ்மான் இணைந்துள்ள மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் சுந்தர் சி கலந்துக் கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசும்போது…

தளபதி ரசிகர்களுக்கு வணக்கம். இங்க வந்துருங்க ரசிகர்கள்ல எத்தனை எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் இருக்கீங்க தெரியல என்றார்.

இதன் மூலம் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பிப்பார் என்ற தகவலை மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

நான் இயக்கவுள்ள சங்கமித்ரா படத்தின் கதையை விஜய்யிடம் சொன்னேன். அவருக்கு அது ரொம்ப பிடித்திருந்தது” என்று பேசினார் சுந்தர். சி.

Director Sundar C open talk about Vijays Political desire

அமைதியின் சக்தியை விஜய்யிடம் தெரிந்துக் கொண்டேன்…. தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் 3 வேடங்களில் நடித்துள்ள மெர்சல் படத்தை அட்லி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் நடிகர் தனுஷ் கலந்துக் கொண்டு பேசினார்.

நான் இங்கு விஜய் சாரின் நண்பனாக வந்துள்ளேன். விஜய் சாரின் அன்பினால் ஈர்க்கப்பட்டேன்.

அவர் கத்தியாக இருந்தாலும் ரொம்ப அமைதியாக இருப்பார்.

அமைதியின் சக்தியை அவரிடம் இருந்து தெரிந்துக் கொண்டேன். அவர் எனக்கொரு முன் மாதிரி.

மெர்சல் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன்.” என்றார் தனுஷ்.

I learned power of Silence from Vijay says Dhanush at Mersal audio launch

கீர்த்தி சுரேஷ்-சமந்தாவுடன் இணையும் பிரகாஷ் ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படம் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கிலும் உருவாகி வருகிறது.

‘வைஜெயந்தி மூவீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘ஸ்வப்ன சினிமா’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதனை நாக் அஷ்வின் இயக்குகிறார்.

இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷும், ரிப்போர்டராக சமந்தாவும் நடிக்கின்றனர்.

‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார்.

சமந்தாவுக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா என்ற தெலுங்கு நடிகர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், விஜயா வாகினி சக்ரபாணியாக பிரகாஷ்ராஜ் நடிக்கவிருக்கிறாராம்.

இவர் நாளை முதல் ஹைதரபாத்தில் நடைபெறவுள்ள இப்பட சூட்டிங்கில் கலந்துக் கொள்கிறார்.

Prakash Raj teams up with Keerthy Suresh and Samantha for Savithiri biopic

மெர்சல் படத்தின் 4வது பாடல் போஸ்டரும் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள மெர்சல் படத்தின் பாடல்கள் நாளை வெளியாகவுள்ளது.

அட்லி இயக்கியுள்ள இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன் 100வது படைப்பாக உருவாக்கியுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளதால் இப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எனவே படத்தின் பாடல்கள் குறித்த போஸ்டரை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர்.

முதலில் ஆளப்போறான் தமிழன் பாடல், அதனையடுத்து நீதானே என்ற பாடல், பின்னர் மெர்சல் அரசன் என்ற பாடல் போஸ்டர்கள் வெளியானது.

தற்போது 4வது பாடலான மசோ என்ற பாடல் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இப்பாடல் விஜய் மற்றும் காஜல் அகர்வாலுக்கான டூயட் பாடல் எனவும் இவர்கள் இருவரும் இதில் டாக்டர்களாக நடித்துள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளது.

இப்பாடல் ஐரோப்பாவில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Mersal movie 4th song Macho poster released

ஒரே கல்லில் மூனு மாங்காய்; இது விஷாலின் விவேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சங்கத்தில் பொறுப்புக்கு வந்தவுடனே அங்கு பல அதிரடியான திட்டங்களை அறிவித்தார் விஷால்.

அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அங்கும் பல விவேகமான முடிவுகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் சினிமா டிக்கெட்டுக்கு ஆன்லைனில் புக்கிங் செய்ய தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஓர் இணையதளத்தை தொடங்கவிருக்கிறாராம்.

இதன் மூலமாக புக்கிங் செய்தால் அதற்கான கட்டணம் வெறும் 10 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுமாம்.

அந்த 10 ரூபாய்யும் 3 பாதியாக பிரிக்கப்பட்டு,

1. டிக்கெட் ஆன்லைன் இணையதளத்தின் பராமரிப்பு
2. தயாரிப்பாளர்கள் சங்க நன்மைக்கு
3. விவசாயிகளின் நன்மைக்கு என உதவிட திட்டமிட்டுள்ளராம்.

Vishal decided to create website for Online booking and profit should be given to farmers and movie producers

More Articles
Follows