500 தியேட்டர்களில் விமல் படம்.; இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு-ய்யா

500 தியேட்டர்களில் விமல் படம்.; இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு-ய்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Evanukku Engeyo Matcham Irukku movie will release in 500 theatres Worldwideவிமல் ஆஷ்னா ஜவேரி நடிக்க சர்மிளா மாண்ட் ரே தயாரிக்க AR.முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் இம்மாதம் 7 ம் தேதி வெளியாகிறது.

இதற்கு முன்பு விமல் நடித்த எந்த படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானதில்லை.

கேரளாவில் மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் கூட 100 தியேட்டர்களுக்குள் தான் வெளியாகும்..ஆனால் இந்த படம் கேரளாவில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

முதன் முறையாக உலகம் முழுவதும் 500 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

இந்த விஷயம் திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்
இசை – நடராஜன் சங்கரன்
பாடல்கள் – விவேகா
கலை – வைரபாலன்
நடனம் – கந்தாஸ்
ஸ்டண்ட் – ரமேஷ்.
எடிட்டிங் – தினேஷ்
தயாரிப்பு மேற்பார்வை – சுப்ரமணி
தயாரிப்பு நிர்வாகம் – பி.ஆர்.ஜெயராமன்
தயாரிப்பு – சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண்
திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் AR.முகேஷ்

Evanukku Engeyo Matcham Irukku movie will release in 500 theatres Worldwide

ஊர்காரர்கள் எச்சரித்தும் ஷில்பாவுடன் மலையேறிய ஹரிஷ் கல்யாண்

ஊர்காரர்கள் எச்சரித்தும் ஷில்பாவுடன் மலையேறிய ஹரிஷ் கல்யாண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Harish Kalyan talks about his Ispade Rajavum Idhaya Raniyum movieரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து வருகிறார் ஹரிஷ் கல்யாண்.

ஷில்பா மஞ்சுநாத் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில் லடாக்கில் நடந்து முடிந்த படப்பிடிப்பு அவருக்கு மறக்க முடியாத அனுபவங்களை வழங்கியிருக்கிறது.

“சில விஷயங்கள் நம் கண்களுக்கு சொர்க்கம் போல காட்சியளிக்கும். ஆனால் அத்தகைய இடங்களுக்கு செல்வது சில ஆபத்தான சவால்களை உள்ளடக்கியது.

நம் கற்பனைகளையும் தாண்டிய சவால்கள் அவை. லடாக்கில் படப்பிடிப்பு நடக்கும்போது இதுபோன்ற அனுபவங்கள் எங்களுக்கு இருந்தன” என்று லடாக் படப்பிடிப்பு அனுபவங்களை கூறுகிறார் ஹரிஷ் கல்யாண்.

மொத்த படக்குழுவும் லடாக்கின் அழகான இடங்களில் ஒரு சில காட்சிகளை படம் பிடிக்க வேண்டியிருந்தது. அவை மிகப்பெரிய சவால்களை கொண்டிருந்தது.

ஹரிஷ் கல்யாண் அந்த தருணங்களை நினைவு கூறும்போது, “ஒருமுறை, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகே சில காட்சிகளை படம்பிடித்து முடித்தோம்.

திடீரென்று, ஒரு உதவி இயக்குனரால் மூச்சுவிட முடியவில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தோம். அவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விட்டார் என்று தெரியும் வரை நாங்கள் அதிர்ச்சியில் இருந்தோம்.

வழக்கமாக, உயரமான பகுதிகளில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும். அவர் சரியான கம்பளி ஆடைகளை அணியவில்லை, மேலும் அவரது காதுகளையும் மூடிவிடவில்லை, அது இறுதியில் அவரது நுரையீரலை பாதித்திருக்கிறது” என்றார்.

இன்னொரு சவாலான சம்பவத்தை பற்றி கூறும்போது, “இன்னொரு கடினமான சூழ்நிலையாக இருந்தது உயரமான பகுதிகளில் மலையேற்றம். நான் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் ரோஹ்தாங் பாஸின் பின்னணியில் படம்பிடிக்கப்பட வேண்டியிருந்தது.

அது, உயரமான இடத்தில் இருந்தது. உள்ளூர்வாசிகள் யாரும் எங்களுடன் வர விரும்பவில்லை, எங்களையும் கூட எச்சரித்தனர். இருப்பினும், ரஞ்சித் ஜெயக்கொடி மற்றும் ஒளிப்பதிவாளர் கவின் ஏற்கனவே அந்த இடங்களுக்கு வந்திருந்தனர். காட்சிக்கு ஏற்ற அற்புதமான அழகிய பின்னணியை கொண்டிருப்பதாக உறுதியளித்தனர்.

ஆரம்பத்தில், உள்ளூர்வாசிகள் எச்சரிக்கையை பற்றி கண்டு கொள்ளவில்லை. ரஞ்சித் பயணத்தைத் தொடர என்னை ஊக்குவித்தார், கிட்டத்தட்ட 2 மணிநேரம் மலையேறினோம். இறுதியாக, அங்கு முதல் ஆளாக நான் சென்று சேர்ந்தேன். அந்த இடம் அவ்வளவு அழகாக இருந்தது, மொத்த குழுவுமே அந்த இடத்தின் அழகால் மெய் மறந்து, பட்ட கஷ்டங்களை மறந்து விட்டனர்” என்றார் ஹரீஷ் கல்யாண்.

Harish Kalyan talks about his Ispade Rajavum Idhaya Raniyum movie

3 தோற்றங்களில் அதர்வா நடித்துள்ள *பூமராங்* படம் டிசம்பர் 28ல் ரிலீஸ்

3 தோற்றங்களில் அதர்வா நடித்துள்ள *பூமராங்* படம் டிசம்பர் 28ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Atharva and Megha Akash starrer Boomerang release on 28th Dec 2018இயக்குனர் கண்ணன் மற்றும் அவரது ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் ‘பூமராங்’ படம் டிசம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்ற அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்துதல் தான் மொத்த குழுவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இயக்குனர் கண்ணன் கூறுகையில், “டிசம்பர் 28ஆம் தேதி பூமராங் படம் வெளியாக இருப்பதால் ஒட்டு மொத்த குழுவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். கடந்த ஒரு ஆண்டாகவே குழுவில் அனைவருக்கும் சவாலாக இருந்தது, குறிப்பாக இந்த படத்தில் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்க மிகவும் துல்லியமான முயற்சிகள் எடுத்த அதர்வா முரளிக்கு.

இந்த படம் மிகச்சிறப்பாக உருவாக எனக்கு மொத்த குழுவும் பக்க பலமாக இருந்தது ஒரு திரைப்பட தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

எங்கள் முடிவில்லாத கடின உழைப்புக்கு இது புத்தாண்டு பரிசாக இருக்கும் என்று நான் உறுதியாக இருக்கிறேன். மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா ஆகியோரின் உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும்” என்றார்.

மேலும், நடிகர்களை பற்றி அவர் கூறும்போது, “சிறந்த காட்சிகளை வழங்குவதில் உபென் படேல் சமரசமே செய்ய விரும்பவில்லை. வேறு ஒருவர் அவருக்கு டப்பிங் பேசினாலும், தமிழ் கற்றுக் கொள்ள அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார்.

படப்பிடிப்பின் போது அவரது குறைபாடற்ற பங்களிப்பை வழங்குவதற்கும் ஆர்வமாக இருந்தார். சுஹாசினி மணிரத்னம் மேடம் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தில், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சதீஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகிய இருவருக்குமே சமமான முக்கியத்துவம் இருக்கும். வெறும் காமெடி மட்டுமல்லாமல், கதையில் முக்கிய பங்காகவும் இருப்பார்கள்.

‘அர்ஜுன் ரெட்டி’ மூலம் புகழ் பெற்ற ரதன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குனர் கண்ணன் தனது மசாலா பிக்ஸ் மூலம் படத்தை தயாரித்திருக்கிறார்.

Atharva and Megha Akash starrer Boomerang release on 28th Dec 2018

சபாஷ் சரியான போட்டி; தனுஷ்-சிவகார்த்திகேயன் நேரடி மோதல்

சபாஷ் சரியான போட்டி; தனுஷ்-சிவகார்த்திகேயன் நேரடி மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and skநடிகராக ஜொலித்த தனுஷ் அண்மைக்காலமாக படங்களை தயாரித்தும் வருகிறார். இதில் சில படங்களில் அவரே நடித்தும் வருகிறார்.
அவர் தயாரித்து நடித்துள்ள மாரி2 படம் வருகிற டிசம்பர் 21ல் வெளியாகும் என இன்று காலை ஒரு போஸ்டரை வெளியிட்டார்.

இப்படத்தை பாலாஜி மோகன் இயக்க, சாய்பல்லவி மற்றும் வரலட்சுமி இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த போஸ்டர் வந்த சில மணி நேரங்களில் இன்று மாலை சிவகார்த்திகேயனும் தன் படம் வெளியீட்டை அதே நாளில் அறிவித்துள்ளார்.

கனா படம் டிசம்பர் 21ல் வெளியாகும் என அறிவித்துள்ளார். இந்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரித்து சின்ன வேடத்திலும் நடித்துள்ளார்.

இப்படத்தை அருண்ராஜா காமராஜா இயக்க, ஐஸ்வர்யா நாயகியாக நடித்துள்ளார்.

இவையில்லாமல் விஜய்சேதுபதியின் சீதக்காதி (டிசம்பர் 20), ஜெயம் ரவியின் அடங்கமறு, அதர்வாவின் பூமராங், விஷ்னு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களும் டிசம்பர் 21ல் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

ரஜினி படம் போல செம மாஸா இருக்கனும்..; அட்லிக்கு விஜய் கன்டிசன்.?

ரஜினி படம் போல செம மாஸா இருக்கனும்..; அட்லிக்கு விஜய் கன்டிசன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay condition to director Atlee in Thalapathy 63 movieவிஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியான மெர்சல் மற்றும் இந்த வருடம் வெளியான சர்கார் ஆகிய 2 படங்களும் அரசியல் பிரச்சினைக்கு உள்ளானது.

இதனால் விஜய் ரொம்பவே அப்செட் ஆகி விட்டாராம்.

அடுத்த படமும் அப்படியிருந்தால் இன்றைய நிலைமைக்கு சரிவராது என்பதால் அட்லி இயக்கவுள்ள தளபதி 63 படத்திற்கு விஜய் சில நிபந்தனைகள் விதித்துள்ளாராம்.

அரசியல் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் படம் ரஜினி பட பாணியில் செம கமர்சியல் மாஸாக இருக்க வேண்டும் என கன்டிசன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Vijay condition to director Atlee in Thalapathy 63 movie

மாரி 2 ரிலீஸ்; தனுஷ் செய்த பிரச்சினையால் அவசர கூட்டத்திற்கு விஷால் ஏற்பாடு

மாரி 2 ரிலீஸ்; தனுஷ் செய்த பிரச்சினையால் அவசர கூட்டத்திற்கு விஷால் ஏற்பாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush vishalகடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் என இரண்டு மாதங்கள் ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே போராட்டத்தில் ஈடுப்பட்டது.

அதனையடுத்து சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தயாரிப்பாளர்கள் சங்கம் ரிலீஸ் தேதிக்கான கடிதம் கொடுத்த பின்னரே அந்த தேதியில் படத்தை வெளியிட வேண்டும் என அறிவித்தனர்.

பெரும்பாலான தயாரிப்பாளர்கள் இந்த நடைமுறையை கடைப்பிடித்தாலும் சில தயாரிப்பாளர்கள் இதை பின்பற்றுவது இல்லை.

அண்மையில் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் மற்றும் விஜய்சேதுபதியின் சீதக்காதி ஆகிய படங்கள் தயாரிப்பாளர்கள் சங்க கடிதம் இல்லாலே படத்தின் வெளியிட்டு தேதியை அறிவித்தனர்.

இதில் சீதக்காதி படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனையடுத்து டிசம்பர் 21ல் ஜெயம் ரவி நடித்துள்ள “அடங்கமறு, அதர்வா நடித்துள்ள பூமராங், விஷ்னு விஷால் நடித்துள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய படங்கள் வெளிவரும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று வெளியான மாரி 2 போஸ்டரில் டிசம்பர் 21ல் படம் வெளியாகும் என அறிவித்துள்ளார் தனுஷ்.

சங்கம் அனுமதியில்லாமல் திடீரென தனுஷ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் இது குறித்து ஆலோசிக்க விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் நாளை சந்தித்து பேசவுள்ளனர்.

More Articles
Follows