உதவி வேண்டாம்.; ரஜினி அங்கிளை பார்க்கனும்…; நேர்மை சிறுவனின் ஆசை

உதவி வேண்டாம்.; ரஜினி அங்கிளை பார்க்கனும்…; நேர்மை சிறுவனின் ஆசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Erode boy 6 years Yaasin handed 50000 rupees wants to meet Rajinikanthஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் யாசின், அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான்.

கடந்த வாரம், பள்ளிக்குச் செல்லும் வழியில் அவனது கண்களில் தென்பட்டது ஒரு பை. சாலையோரத்தில் நாதியற்று கிடக்கும் அந்தப் பையை திறந்து பார்த்த சிறுவன் திகைத்து நிற்கும்படி கத்தை கத்தையாக பணம்.

மொத்த பணத்தையும் ஆசிரியரிடம் ஒப்படைக்க, ஆசிரியர் அவனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடந்ததைக் கூறினார்.

பணத்தைப் பார்த்து சிறுவனுக்கு வராத ஆசையைக் கண்டு வியந்த போலீசார், அவன் நேர்மைக்கு ஒரு சல்யூட் அடித்தனர்.

யாசினின் நேர்மையைப் பாராட்டி வாழ்த்துகளும் கூறினார்.

மேலும் பலரும் இவனுக்குத் தேவையான உதவிகள் செய்ய முன்வந்தபோது யாசினின் பெற்றோர்கள் அதனை மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் ஈரோடு ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் யாசின் மற்றும் அவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தனர். அப்போது யாசினுக்கு ஏதேனும் உதவிகள் தேவையென்றால் அதனைச் செய்ய தயாராக உள்ளதாகக் கூறினார்கள்.

“உதவிகள் எதுவும் வேண்டாம். ஆனால் ரஜினி ஆங்கிளை நேரில் பார்க்கணும், நான் அவருடைய ரசிகன். எனக்கு அவரை பார்க்கணும் ரொம்ப நாள் ஆசை” என்று கூறியுள்ளான்.

நேர்மையாக வாழ நினைக்கும் இந்தச் சிறுவனின் ஆசையை விரைவில் பூர்த்தி செய்வோம், ரஜினிகாந்தை சந்திக்க ஏற்பாடுகள் செய்வோம் என்று மக்கள் மன்றத்தினர் உறுதி அளித்துள்ளனர்.

Erode boy 6 years Yaasin handed 50000 rupees wants to meet Rajinikanthyaasin with rmm

ரஜினி படத்தில் பஹத் பாசில் நடிக்கிறாரா..? கார்த்திக் சுப்பராஜ் விளக்கம்

ரஜினி படத்தில் பஹத் பாசில் நடிக்கிறாரா..? கார்த்திக் சுப்பராஜ் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth and karthik subbarajகாலா படம் ரிலீஸ் ஆகும் முன்பே கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் ரஜினிகாந்த்.

ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசிலும் நடிப்பதாக செய்தி வெளியானது.

ஆனால் இந்த தகவலில் சிறிதும் உண்மையில்லை என்று மறுத்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

டபுள் ரோபோஸ்; சிங்கிள் லவ்… 2.0 பட ஸ்டோரி ஒன்லைன்

டபுள் ரோபோஸ்; சிங்கிள் லவ்… 2.0 பட ஸ்டோரி ஒன்லைன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 point 0 stillsஷங்கர்-ரஜினி-சன் பிக்சர்ஸ் ஆகியோரது கூட்டணியில் உருவான படம் எந்திரன்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த அப்படத்தில் சில பாடல்களை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியிருந்தார்.

தற்போது அது போன்ற ரோபோ கதை கொண்ட 2.0 படத்திலும் இவர் பாடல்களை எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது…

’எந்திரன்’ படத்தில் பாட்டு எழுதும்போது ஒருதலைக் காதல் பற்றி சொன்னேன்.

ஒரு பெண் மீது எந்திரத்துக்கு வரும் காதலை எழுதினேன்.

`2.0’ படத்துல இரண்டு எந்திரங்களுக்கு இடையேயான காதலை எழுதியிருக்கேன்’ என தெரிவித்துள்ளார்.

அநேகமாக இது ரஜினி மற்றும் எமி ஜாக்சன் ஆகிய இரு ரோபோக்களை பற்றிய காதலாக இருக்கும் என கூறப்படுகிறது.

நடிகை ஸ்ரீரெட்டி படுக்கை வரிசையில் ஸ்ரீகாந்த்-லாரன்ஸ்?; மிரட்டும் விஷால்

நடிகை ஸ்ரீரெட்டி படுக்கை வரிசையில் ஸ்ரீகாந்த்-லாரன்ஸ்?; மிரட்டும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sri reddyபிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தன்னுடன் படுக்கை பகிர்ந்த ஒவ்வொரு திரையுலகினரின் பெயர்களை வெளியிட்டு வருகிறார்.

தனக்கு சினிமா சான்ஸ் வாங்கி தருவதாக கூறி அவர்கள் என்னுடன் செக்ஸ் வைத்துக் கொண்டார்கள். ஆனால் எவரும் வாய்ப்பு தரவில்லை என குற்றம் சாட்டி வருகிறார்.

இதுநாள் வரை தெலுங்கு நட்சத்திரங்களை பற்றி கூறி வந்த இவர், தற்போது தமிழ் நட்சத்திரங்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு வருகிறார்.

முதலில் ஏஆர். முருகதாஸ் பெயரை கூறியிருந்தார். தற்போது அந்த வரிசையில் நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோரின் பெயரையும் சேர்த்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய சமூக வலைத்தள முகநூல் பக்கத்தில்…

விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், ஆனாலும் கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிடுவேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் நடிகர்கள் பற்றி நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். இது தென்னிந்திய திரையுலகிற்கே அவமானம்.

சில முக்கிய நபர்கள் உண்மையை மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள். இதோடு முடிந்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள்.

ஆனால் நியாயம் கிடைப்பதற்கான முயற்சிகளை எடுக்க அவர்கள் முன்வரவில்லை.” எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரே திரையில் ஒன்றாக தோன்றும் கமல்ஹாசன்-சல்மான்கான்

ஒரே திரையில் ஒன்றாக தோன்றும் கமல்ஹாசன்-சல்மான்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan and salman khanகமல் இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் ‘விஸ்வரூபம் 2’.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

இதன் ஹிந்தி உரிமையை இயக்குனர் ரோஹித் ஷெட்டி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளனர்.

எனவே இப்பட தொடர்பான புரமோஷன் பணிகளில் தற்போது இறங்கி இருக்கிறார் கமல்.

இதனையடுத்து சல்மான்கான் தொகுத்து வழங்கும் `தஸ் கா தம்’ என்ற டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் கமல்ஹாசன்.

ஒரே திரையில் இருவரும் ஒன்றாக தோன்ற இருப்பது இதுவே முதன் முறையாகும்.

நான் போலி பகுத்தறிவாளனா..? தமிழிசைக்கு ஆழ்வார்பேட்டை ஆண்டவர் பதிலடி

நான் போலி பகுத்தறிவாளனா..? தமிழிசைக்கு ஆழ்வார்பேட்டை ஆண்டவர் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal reaction to Tamilisai Soundararajans complaint on Duplicate atheistபா.ஜ.கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் நடிகர் கமல்ஹாசன் குறித்து கூறும்போது…

அமாவாசை நாளில் கட்சியை ஆரம்பித்தார் கமல். அமாவாசை நாளில் கொடியேற்றுகிறார்.

ஆனால் “மய்யம்” என்ற பெயரில் கட்சியையும் ஆரம்பித்து பகுத்தறிவு பேசுகிறார். அப்படி பேசி போலி வே‌ஷம் போடுவதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியதாவது…

லோக் ஆயுக்தா சட்டம் நீர்த்து போன நிலையில் உள்ளது. ஒரே நேரத்தில் சட்ட மன்ற, நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்தக் கூடாது.

என்னை போலி பகுத்தறிவாளன் என்று கூறுவதற்கு தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது. நான் பகுத்தறிவாளன் தான்.

ஏழ்மையையும், ஊழலையும் ஒழிக்கவே அரசியலுக்கு வந்தேன், மூட நம்பிக்கைகளை ஒழிக்க அல்ல. ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்பது ஒரு கூக்குரல். அது அவர்களாவே சொல்கிறார்கள்.

இனி என் தொண்டர்கள் அவ்வாறு அழைப்பதை நிறுத்த அறிவுறுத்துவேன்’ என்றார்.

நடிகர் கமல்ஹாசனின் வீடு முதலில் ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் இருந்தது.

மேலும் தான் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா என்ற பாடலில் பாடி ஆடினார்.

இதனையடுத்து கமல்ஹாசனை அவரது ரசிகர்கள் ஆழ்வார்பேட்டை ஆண்டவா என அழைப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal reaction to Tamilisai Soundararajans complaint on Duplicate atheist

More Articles
Follows