அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு.; ஏன்.?

அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு.; ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விளையாட்டு கலை இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர்.

அந்த வகையில் சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெக்டே ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இளையராஜா உள்ளிட்டவர்களை பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்திருந்தார்.

நேற்று ஜூலை 18 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் டெல்லியில் தொடங்கியது. அப்போது மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பதவி ஏற்க அழைக்கப்பட்டனர்.

அப்போது, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு இளையராஜாவை அழைத்தார். அனைவரும் கைத்தட்டி வரவேற்றாலும் இளையராஜா வரவில்லை.

ஏனென்றால் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்து இருந்தார் இறளையராஜா.

எனவே அவரால் பதவி ஏற்பு விழாவில் கலந்துக் கொள்ள முடியவில்லை. விரைவில் அவர் மாநிலங்களவை சென்று பதவி ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை இளையராஜா அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் அவர் சென்னை வந்தடைந்தார்.

எம்பி என அறிவிக்கப்பட்ட பின்னர் தற்போதுதான் முதன்முறையாக அவர் தமிழகத்திற்கு வருகிறார்.

எனவே அவருக்கு இசையமைப்பாளர்கள் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் பாஜகவை சேர்ந்த பல அரசியல் பிரபலங்களும் இந்த வரவேற்பு விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic welcome to Ilayaraja who came from America to Chennai.; Why?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மணிரத்னம் இப்போ எப்படி இருக்கிறார்.?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மணிரத்னம் இப்போ எப்படி இருக்கிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் படங்களை இந்தியளவில் கொண்டு சென்ற இயக்குனர்களில் மிக முக்கியமானவர் மணிரத்னம்.

இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் மிகப் பிரம்மாண்டமான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது.

லைக்கா தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, ஜெயராம், பார்த்திபன், விக்ரம் பிரபு உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

தற்போது இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் மணிரத்னம் உள்ளிட்ட பட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில் மணிரத்னம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு லேசான அறிகுறிகளே இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா ரிசல்ட் நெகட்டிவ் என தெரியவந்துள்ளது.

எனவே அவர் விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

How is Mani Ratnam, who is affected by Corona?

விவாகரத்து ஆன நடிகையை விஜய்க்கு வில்லியாக்கும் லோகேஷ்.?

விவாகரத்து ஆன நடிகையை விஜய்க்கு வில்லியாக்கும் லோகேஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கணவரும் நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர் சினிமாவில் பிஸியாகி விட்டார் நடிகை சமந்தா.

தற்போது சமந்தா கைவசம் குஷி, சாகுந்தலம், யசோதா உள்ளிட்ட படங்கள் உள்ளன.

தற்போது சகுந்தலம் பட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் விஜய்யுடன் ஒரு படத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

‘விக்ரம்’ படத்தை முடித்து விட்ட லோகேஷ் கனகராஜ் விரைவில் விஜய்யின் 67வது படத்தை இயக்கவிருக்கிறார் லோகேஷ்.

இந்த படத்தில் தான் நாயகியாக நடிக்க சமந்தாவிடத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

ஏற்கனவே கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படங்களில் விஜய் சமந்தா ரொமான்டிக் கெமிஸ்ட்ரி செமயாய் ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

ஆனால் இந்த படத்தில் விஜய்யுடன் டூயட் பாடாமல் விஜயை எதிர்க்கும் வில்லியாக நடிக்கவிருக்கிறார் சமந்தா என கூறப்படுகிறது.

Divorced actress to play opposite with Vijay in Thalapathy 67?

மீண்டும் ‘அஞ்சான்’ இயக்குனருடன் கூட்டணியா.? சூர்யா தரப்பு விளக்கம்

மீண்டும் ‘அஞ்சான்’ இயக்குனருடன் கூட்டணியா.? சூர்யா தரப்பு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஆனந்தம்’ என்ற ஒரு தமிழ் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் லிங்குசாமி.

இதன் பின்னர் இவர் இயக்கிய ரன்,சண்டக்கோழி,பையா உள்ளிட்ட அனைத்து படங்களும் பெரும் வெற்றி பெற்றது.

இவர் சூர்யாவை வைத்து முதன்முறையாக இயக்கிய ‘அஞ்சான்’ படம் தோல்வியை தழுவியது.

அதன் பின்னர் விஷாலை வைத்து ‘சண்டக்கோழி 2’ என்ற படத்தை இயக்கினார் லிங்குசாமி.

இந்த படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதன்பின்னர் தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார் லிங்குசாமி.

எனவே திடீரென தெலுங்கு நடிகர் ராம் அவர்களை வைத்து தி வாரியார் என்ற படத்தை இயக்கினார்.இந்த படத்தில் கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கடந்த வாரம் ஜூலை 14ஆம் தேதி வெளியானது.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ‘அஞ்சான்’ பட ஹீரோவுடன் லிங்குசாமி இணைய உள்ளதாக தகவல்கள் சில ஊடகங்களில் வந்தன.

ஆனால் தற்போது உள்ள கைவசம் உள்ள படங்களை சூர்யா முடிக்க காத்திருக்கிறார். எனவே லிங்குசாமியுடன் இப்போது இணைய வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Suriya joins with ‘Anjaan’ director again? Here’s the details

பாலிவுட் சூப்பர் கான்-களை மீண்டும் ஒரே படத்தில் இணைக்க முருகதாஸ் திட்டம்

பாலிவுட் சூப்பர் கான்-களை மீண்டும் ஒரே படத்தில் இணைக்க முருகதாஸ் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கத்தி – துப்பாக்கி – சர்க்கார்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களை விஜய்க்கு கொடுத்தவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.

ரஜினிக்கு ‘தர்பார்’ அஜித்துக்கு ‘தீனா’ உள்ளிட்ட படங்களையும் கொடுத்துள்ளார்.

ரஜினியின் ‘தர்பார்’ படத்திற்கு பிறகு ஏ ஆர் முருகதாஸுக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை.

இதன் பின்னர் விஜய்யை இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த படம் கைவிடப்பட்டது.

பிறகு தெலுங்கு சினிமாவில் முருகதாஸ் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வந்தன. ஆனால் அது பற்றி அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ஏ ஆர் முருகதாஸின் அடுத்த படம் எது? ஹீரோ யார்? என்ற சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் நடிகர்கள் சல்மான்கான் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரையும் இணைத்து ஒரு படத்தில் இயக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தற்போது இது ஆரம்ப கட்டப் பேச்சு வார்த்தையில் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே 1995ல் ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் ‘கரண் அர்ஜூன்’ படத்தில் ஷாருக்கான் சல்மான் கான் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

மேலும் ‘குச் குச் ஹோதா ஹை’, ‘ஹம் தும்ஹாரே ஹை சனம்’ ஆகிய படங்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர்.

கூடுதல் தகவல்கள்..

15 வருடங்களிக்கு முன்பு அமீர்கானை வைத்து தமிழில் சூப்பர் ஹிட்டான ‘கஜினி’ படத்தை ஹிந்தியில் இயக்கி இருந்தார் முருகதாஸ்.

தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகும் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான்.

அதுபோல பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். லான்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.

இந்த வரிசையில் பாலிவுட் நடிகர்கள் தமிழ் இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

AR Murugadoss plans to reunite Bollywood Super Khans in one film

சேரி மக்கள்.. கெட்ட வார்த்தைகள்.. சினிமாவுக்காக மாற்ற முடியாது.; பார்த்திபன்-பிரிகிடா மன்னிப்பு கேட்டனர்

சேரி மக்கள்.. கெட்ட வார்த்தைகள்.. சினிமாவுக்காக மாற்ற முடியாது.; பார்த்திபன்-பிரிகிடா மன்னிப்பு கேட்டனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த 15-ம் தேதி வெளியானது.

இது நான் லீனியர் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் பிரிகிடா, வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது. ஒரு நல்ல படைப்பை கொடுக்கும்போது அதில் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் தேவையா ? என்று நம் FILMISTREET விமர்சனத்தில் தெரிவித்திருந்தோம்.

ரிலீஸ் ஆன பின்னும் இந்த படத்தை பிரமோட் செய்யும் பணியில் பார்த்திபன் ப்ரீகிடா உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகரில் முக்கியமான வீதிகளில் தங்கள் கார்களில் நின்றபடியே இந்த படத்தை பற்றி இவர்கள் பேசும் வீடியோவும் வைரலாகி வருகின்றது.

இதனிடையில்ஒரு பேட்டியில் நடிகை பிரகிடா… ”இரவின் நிழல் படம் ஒரு தனிமனிதன் பற்றிய கதை.

நாயகனின் வாழ்க்கையில் வெறும் கெட்டது மட்டுமே நடந்துள்ளது. அதை ராவாகத்தான் சொல்ல முடியும்.

குடிசைவாழ் பகுதிக்குச் சென்றால், அந்த மாதிரியான கெட்ட வார்த்தைகளை மட்டும்தான் கேட்க முடியும். அவர்கள் அப்படிதான் பேசுவார்கள் அதை சினிமாவுக்காக “மாற்ற முடியாது” எனப் பேசியிருந்தார்.

பிரிகிடாவின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைத்தங்களில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதனையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்…

”நான் கூறிய வார்த்தைகளுக்கு இதயபூர்வமாக மன்னிப்புக் கேட்டுகொள்கிறேன்.

ஒரு இடத்தை பொறுத்து மொழி மாறுபடும் என்றுதான் கூற வந்தேன், ஆனால் அது இப்படி தவறாக மாறி புரிந்துக் கொள்ளப்பட்டது. என்னை மன்னித்து விடுங்கள்” என பதிவிட்டிருந்தார்.

My hearty sorry for telling those words!
I just tried to convey that… As the location changes, the language also changes in iravin nizhal film.I took a wrong example which I’m feeling so bad for saying that!
#acceptmyappologies.
Just a normal girl who’s trying to acheive infilm.

Brigida சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது.2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம்,கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால்.என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை hero ஆக்குவதே!

இவ்வாறு பார்த்திபனும் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Slum people.. Bad words.. Can’t be changed for cinema.; Parthiban-Brigida apologized

More Articles
Follows