தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விளையாட்டு கலை இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர்.
அந்த வகையில் சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெக்டே ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இளையராஜா உள்ளிட்டவர்களை பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்திருந்தார்.
நேற்று ஜூலை 18 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் டெல்லியில் தொடங்கியது. அப்போது மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பதவி ஏற்க அழைக்கப்பட்டனர்.
அப்போது, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு இளையராஜாவை அழைத்தார். அனைவரும் கைத்தட்டி வரவேற்றாலும் இளையராஜா வரவில்லை.
ஏனென்றால் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்து இருந்தார் இறளையராஜா.
எனவே அவரால் பதவி ஏற்பு விழாவில் கலந்துக் கொள்ள முடியவில்லை. விரைவில் அவர் மாநிலங்களவை சென்று பதவி ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை இளையராஜா அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் அவர் சென்னை வந்தடைந்தார்.
எம்பி என அறிவிக்கப்பட்ட பின்னர் தற்போதுதான் முதன்முறையாக அவர் தமிழகத்திற்கு வருகிறார்.
எனவே அவருக்கு இசையமைப்பாளர்கள் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் பாஜகவை சேர்ந்த பல அரசியல் பிரபலங்களும் இந்த வரவேற்பு விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Enthusiastic welcome to Ilayaraja who came from America to Chennai.; Why?