தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாகரன் நடித்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படம் ‘எந்திரன்’.
2010ல் ரிலீசான இப்படம் தமிழ் சினிமாவை உலகளவில் எடுத்து சென்றது என்று சொன்னால் அது மிகையல்ல.
இந்த படம் வெளியான சமயத்திலேயே இப்பட கதை தன்னுடைய ‘திக்திக் தீபிகா’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதாக எழுத்தாளர் ஆருர் தமிழ்நாடன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
எனவே விசாரணைக்குத் தடைகேட்டு உச்சநீதிமன்றம் வரை சென்றார் இயக்குநர் ஷங்கர்.
ஆனால், உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.
எனவே, மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்துக்கு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஆனால், இயக்குநர் ஷங்கரோ, அவர் தரப்பு வழக்கறிஞரோ யாரும் பதில் தராததால் கைது செய்ய தற்போது பிடிவாரன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஷங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரன்ட் பிறப்பிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Enthiran story theft case Court issues non bailable warrant against Shankar