தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த (ஏப்ரல்) 6ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் “கரூரில் வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற உத்தரவிடக்கோரி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் அதிமுக வேட்பாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அதில்…” இரண்டு அறைகளில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.
கொரோனா 2வது அலை பரவி வரும் நிலையில் 77 வேட்பாளர்களின் முகவர்களையும் (பூத் ஏஜண்ட்) வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கும் போது தனிமனித சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது.
கொரோனா நடைமுறைகளை பின்பற்ற முடியாத நிலை ஏற்படும்’ என அமைச்சர் தனது மனுவில் கூறியிருந்தார்.
மேலும் வாக்கு எண்ணிக்கையை மூன்று அறைகளில் நடத்த வேண்டும். குறைந்த எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க வேண்டும்.
அத்துடன் அவசர தேவைக்கு மருத்துவ குழுவை பணியமர்த்த வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது…
“கொரோனா பரவலுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரமே காரணம். அவர்கள் தங்கள் இஷ்டம்போல் பிரசாரம் செய்தனர்.
நீதிமன்றம் எவ்வளவு அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில் வாங்கவில்லை.
தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வேற்று கிரகத்தில் இருந்தார்களா?
கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்காக தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை.
மே 2 வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்க வேண்டும்.
ஒருவேளை கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும்” எனவும் உயர்நீதி நீதிபதிகள் தேர்தல் ஆணையத்தை எச்சரித்தனர்.
Election Commission should be put up on murder charges – Madras High Court