தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 4ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதற்கு முன்பு ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 5 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால் பகல் 12:00 மணி முதல் 4 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்வதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதனை கணக்கில் கொண்டு தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான ஏப்ரல் 4ஆம் தேதி கூடுதலாக 2 மணி நேரம் பிரசாரம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்யலாம் என தமிழக தலைமை தோதல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.
மேலும் திண்டுக்கல் லியோனியின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கூறினார்.
இத்துடன் திமுக எம்.பி.தயாநிதி மாறனின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக அதிமுக சார்பில் புகார் தரப்பட்டுள்ளதாகவும் தோதல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
Election commission extends timing for campaign on last day