BREAKING தமிழகம் புதுச்சேரி கேரளா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நாள் அறிவிப்பு.; வேட்பாளர் ரூ.38 லட்சம் வரை செலவு செய்ய அனுமதி

BREAKING தமிழகம் புதுச்சேரி கேரளா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நாள் அறிவிப்பு.; வேட்பாளர் ரூ.38 லட்சம் வரை செலவு செய்ய அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tn election 2021 (2)தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, மற்றும் அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரேதேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அறிவித்தனர்..

மேற்கு வங்கத்தில் 294 இடங்களுக்கும், தமிழ்நாட்டில் 234 இடங்களுக்கும், கேரளாவில் 140 இடங்களுக்கும், அசாமில் 126 இடங்களுக்கும், புதுச்சேரியில் 30 இடங்களுக்கும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

அஸ்ஸாம்- 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல். முதல் கட்ட வாக்குப் பதிவு மார்ச் 27. 2-ம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 1. 3-ம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 6.

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல்.

8 கட்டங்களாக மேற்கு வங்க சட்டசபை தேர்தல்: முதல் கட்ட வாக்குப் பதிவு- மார்ச் 27, 2-ம் கட்ட வாக்குப் பதிவு- ஏப்ரல் 1, 3-ம் கட்ட வாக்குப் பதிவு- ஏப்ரல் 6, 4-ம் கட்ட வாக்குப் பதிவு- ஏப்ரல் 10, 5-ம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 17, 6-ம் கட்ட வாக்குப் பதிவு- ஏப்ரல் 22, 7-ம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 26, 8-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 29.

கேரளாவில் மார்ச் 12-ல் வேட்பு மனு தாக்கல்; வேட்பு மனுக்கள் பரிசீலனை – மார்ச் 20; வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்க கடைசி நாள் – மார்ச் 22; வாக்குப் பதிவு நாள்- ஏப்ரல் 6; வாக்கு எண்ணிக்கை- மே 2.

புதுச்சேரியில் மார்ச் 12-ல் வேட்பு மனு தாக்கல்; வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் – மார்ச் 19; வேட்பு மனுக்கள் பரிசீலனை – மார்ச் 20; வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்க கடைசி நாள் – மார்ச் 22; வாக்குப் பதிவு நாள்- ஏப்ரல் 6; வாக்கு எண்ணிக்கை- மே 2.

புதுச்சேரியில் வேட்பாளர் செலவினம் அதிகபட்சம் ரூ. 22 லட்சம். புதுச்சேரி தவிர இதர மாநிலங்களில் வேட்பாளர்கள் அதிக பட்ச செலவு ரூ. 38 லட்சம்.

தமிழகத்தில் மார்ச் 12-ல் வேட்பு மனு தாக்கல்; வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் – மார்ச் 19; வேட்பு மனுக்கள் பரிசீலனை – மார்ச் 20; வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்க கடைசி நாள் – மார்ச் 22; வாக்குப் பதிவு நாள்- ஏப்ரல் 6; வாக்கு எண்ணிக்கை- மே 2.

தமிழகம்…:

*வேட்புமனு தாக்கல் தொடக்கம் – 10.03.21*

*வேட்புமனு தாக்கல் நிறைவு – 19.03.21*

*வேட்புமனு பரிசீலனை – 20.03.21*

*வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் – 22.03. 21*

*தேர்தல் நாள் : 06.04.21*

*வாக்கு எண்ணிக்கை : 02.05.21*

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு செலவின பார்வையாளர்களாக மதுமகாஜன் பாலகிருஷ்ணன் நியமனம்.

தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம்.

#TNAssemblyElection2021

Election Commission announces dates for Assembly polls for 5 states

ஆஸ்கர் பட்டியலில் 3 விருதுகளுக்கான பிரிவில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’

ஆஸ்கர் பட்டியலில் 3 விருதுகளுக்கான பிரிவில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா, மோகன் பாபு, ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்து ஓடிடியில் வெளியான படம் ‘சூரரைப் போற்று’.

இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

இதனை அடுத்து ஆஸ்கர் விருது பட்டியலுக்கு ‘சூரரைப் போற்று’ படம் அனுப்பப்பட்டது.

இதில் பொதுப்பிரிவில் சிறந்த திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட பல பிரிவுகளிலும் போட்டியிட்டது.

போட்டிக்கு அனுப்பப்பட்ட படங்களை பார்த்த பின்னர் இறுதிப்பட்டியலை ஆஸ்கர் தேர்வு குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஆக மொத்தம் 365 படங்கள் இதில் உள்ளன.

இந்தப் பட்டியலில் ‘சூரரைப் போற்று’ படமும் இடம் பெற்றுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய பிரிவுகளில் இடம் பிடித்துள்ளது.

இதில் இடம் பெற்றுள்ள படங்களை வாக்குப் பதிவின் மூலம் தேர்வு செய்வர்.

இதுவே எங்களுக்கு ஆஸ்கர் விருது… அதாவது அந்த பட்டியலில் படப்பெயர் இடம் பெற்றதே, பெரிய அங்கீகாரம் என ‘சூரரைப் போற்று’ படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஆஸ்கர் படங்களின் பட்டியல் இங்கே லிங்க் தரப்பட்டுள்ளது:

https://www.oscars.org/news/366-feature-films-contention-2020-best-picture-oscarr

Actor Suriya’s Soorarai Pottru joins OSCARS

ஜிவி பிரகாஷ் விஜய் ஆண்டனி ஹிப் ஹாப் ஆதியை தொடர்ந்து ஹீரோவாகும் இசையமைப்பாளர்

ஜிவி பிரகாஷ் விஜய் ஆண்டனி ஹிப் ஹாப் ஆதியை தொடர்ந்து ஹீரோவாகும் இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sam D Rajஹிப் ஹாப் ஆதி, ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து வந்தா மலை, ஏமாலி, நுங்கம்பாக்கம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்த ஷாம் டி ராஜ், கால் டாக்ஸி படத்தை இயக்கிய பா.பாண்டியனின் அடுத்த திரைப்படத்தில் இசையமைத்து கதாநாயகனாக நடிக்கிறார்.

கிரைம், சஸ்பென்ஸ் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்பட மாக உருவாகும் இத்திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

ஜிப்ஸி படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பாலா ரோசய்யா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை சரண் சண்முகம் மேற்கொள்கிறார்.

இவர் கிஷோர் மற்றும் லெனின் அவர்களிடம் உதவி எடிட்டராக பணிபுரிந்தவர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் சென்னையில் துவங்குகிறது ..

Music Director Sam D Raj turns hero

மறைந்த நடிகை சித்ராவின் கடைசிப் படம்..; இலவசமாக சினிமா பார்க்க அழைக்கும் ‘கால்ஸ்’

மறைந்த நடிகை சித்ராவின் கடைசிப் படம்..; இலவசமாக சினிமா பார்க்க அழைக்கும் ‘கால்ஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை சித்ரா அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ்.

இப்படத்தின் ட்ரெய்லர்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன.

இது வெளியான இரண்டு நாட்களில் இந்த ட்ரெய்லர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது அப்படத்தின் “காலங்கள் கரைகிறதே” எனும் பாடல் ஒன்றும் வெளியாகி உள்ளது.

அதுவும் வெளிவந்த இரண்டே தினங்களில் தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங் #4 ல் உள்ளது.

மக்கள் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தொடங்கி தற்போது வெளியிட்ட பாடல் வரை மகத்தான ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இப்படம் வரும் 26 ஆம் தேதியன்று இன்று திரைக்கு வருகிறது.

இப்படக்குழு மக்களிடம் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் என்றும் மறைந்த நடிகை சித்ராவிற்காகவும் இப்படத்தை பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் இப்படத்தின் இயக்குனர் திரு. சபரிஷ் அவர்கள் பேசுகையில்…

வி. ஜே சித்ராவின் மரணத்திற்கு பிறகும் மக்கள் அவர் மீதும் அவர் படத்தின் மீதும் அளவற்ற அன்பினை பொழிந்துள்ளனர்.

அனைவரும் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் மற்றும் இப்படத்திற்காக உழைத்த நடிகர்கள், தொழில் நுட்ப உதவியாளர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் வசிக்கும் பெண்கள் மட்டும் இந்த படத்தை இலவசமாக பார்க்கலாம் என ‘கால்ஸ்’ படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சென்னை தியேட்டர்களில் இலவசமாக பார்க்க… விபரங்களுக்கு….9176 38 2842

Free tickets for Chithra’s calls in chennai theatres

chithra calls

மீண்டும் மீண்டும் சிம்பு படத்திற்கு அழகான தமிழ் பெயர் வைத்த கௌதம் மேனன்

மீண்டும் மீண்டும் சிம்பு படத்திற்கு அழகான தமிழ் பெயர் வைத்த கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார்.

கமல், சூர்யா, அஜித், தனுஷ் உள்ளிட்ட பல ஹீரோக்களை கௌதம் மேனன் இயக்கியிருந்தாலும் தனக்கு இயக்க பிடித்த ஹீரோ சிம்பு தான் என கூறியிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் சிம்பு-கெளதம் மேனன் கூட்டணியை 3வது முறையாக வேல்ஸ் பிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் இணைத்துள்ளார்.

இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், பிப்ரவரி 25ல் இயக்குநர் கெளதம் மேனன் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது.

இதற்கு “நதிகளிலே நீராடும் சூரியன்” என அறிவித்துள்ளனர்.

இது அழகான தமிழ் பெயர் என ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

STR – Gautham Menon next film title revealed

Nadhigalilae Neeradum Suriyan

EvFWwXxXYAQKPDk

BREAKING இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

BREAKING இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tha Pandiyan (1)இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று பிப்ரவரி 26ல் காலமானார். அவருக்கு வயது 88.

வயது மூப்பு காரணமாக கடந்த சில நாள்களாக தா.பாண்டியனின் உடல்நிலை மோசமடைந்ததால், சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, கடந்த சில ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது.

செயற்கை சுவாசக் கருவியுடன் தா.பாண்டியனுக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.

இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தா. பாண்டியன் காலமானார்.

Communist leader Tha. Pandiyan passed away

More Articles
Follows