துல்கர் சல்மானின் 3வது தமிழ் படத்தில் நான்கு நாயகிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான்.

இவர் வாயை மூடி பேசவும் மற்றும் ஓகே கண்மணி ஆகிய நேரடி தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது 3வது தமிழ் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் சார்பாக செல்வகுமார் தயாரிக்க, புதுமுக இயக்குனர் கார்த்தி இயக்குகிறார்.

ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்ய, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இப்படத்தில் இவருடன் நான்கு நாயகிகளாக நடிக்கவிருக்கிறார்களாம்.

தற்போது முன்னனி நாயகிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

Dulquer Salmaans 3rd tamil project with four heroines

Exclusive : அட்லி பட அப்டேட்ஸ்: விஜய்யை அரெஸ்ட் செய்த சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கிவரும் தளபதி 61 படத்தில் விஜய் 3 விதமாக கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.

இதில் ஒரு கேரக்டர் தந்தை என்றும் மற்ற இரண்டு கேரக்டர்கள் அவரது மகன்களாக நடிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

தந்தை கேரக்டருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க, மகன்களுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் சமந்தா நடிக்கின்றனர்.

விஜய்யும் காஜலும் டாக்டர்களாக நடிக்க, அதன் சூட்டிங்கை ஐரோப்பா நாட்டில் படமாக்கினார் அட்லி.

தற்போது விஜய், சமந்தா காட்சிகளை சென்னையருகே படமாக்கி வருகிறார்.

இந்த விஜய் கேரக்டர்தான் மாறா என்று அழைக்கப்படுவதை பார்த்தோம்.

இந்நிலையில் ஒரு சூழ்நிலையில் இந்த மாறா கேரக்டரை போலீஸ் சத்யராஜ் அரெஸ்ட் செய்வது போல காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

அப்போது மக்கள் திரண்டு வந்து, மாறாவை விடுதலை செய் என கோஷமிட்டு போராடுவதாக காட்சிகளையும் படமாக்கியுள்ளார் அட்லி.

Sathyaraj arrested Vijay Atlee 3 movie updates

தனுஷ் படத்தில் 3 வேடங்களில் கலக்கும் சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தயாரித்து நடிக்கும் வடசென்னை படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முழுக்க ஒரு சிறைச்சாலை செட்டுக்குள்ளேயே படமாக்கியிருக்கிறார்களாம்.

3 பாகங்களாக உருவாகி வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இதில் தனுஷ் உடன் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் சமுத்திரக்கனி 3 வேடங்களில் நடித்து வருவதாக செய்திகள் வந்துள்ளன.

துனுஷ் கேரக்டர் அளவுக்கு சமுத்திரக்கனி கேரக்டரும் பெரிதாக பேசப்படும் என சொல்லப்படுகிறது.

In Dhanush’s Vadachennai movie Samuthirakani plays 3 characters

வேலைக்காரனின் அடுத்த திட்டம் ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெமோ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த இரண்டு படங்களையும் 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

இதில் ஒன்றான வேலைக்காரன் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகீறது.

இப்படத்தை வருகிற செப்டம்பர் மாதம் இறுதியில் வெளியிட உள்ளனர்.

இதனையடுத்து சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை பொன்ராம் இயக்குகிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் ஆகிய இரு வெற்றிப் படங்களை இந்த கூட்டணி கொடுத்துள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு தற்போதே உருவாகிவிட்டது.

இமான் இசையமைக்க, இப்படத்தில் சமந்தா, சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதன் சூட்டிங் வருகிற ஜீன் 15ஆம் தேதி தொடங்கவிருக்கிறதாம்.

Sivakarthikeyan Samantha new movie updates

‘விஜய்யை எப்படி பார்க்கனும் ஆசைப்பட்டேனோ அப்படியொரு படம் தளபதி 61’ – அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தன் 61வது படத்தை இயக்கும் வாய்ப்பை அட்லிக்கு கொடுத்தார் விஜய்.

தற்போது இதன் சூட்டிங் சென்னை மீனம்பாக்கம் அருகே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய் மற்றும் அட்லி இருவரும் ஒரு தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

அப்போது அட்லி பேசும்போது…

“நான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகன். சினிமாவில் நுழையும்போதே அவருடன் இணைந்து பணி புரிய வேண்டும் என ஆசைப்பட்டேன்.

நான் அவரை எப்படி எல்லாம் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேனோ அப்படி ஒரு படத்தைதான் (தளபதி61) தற்போது இயக்கி வருகிறேன்” என தெரிவித்தார்.

Atlee open talk about Vijay and his Thalapathy 61 movie

படிப்பை பாதியில் விட்டதால் இன்றும் வருந்தும் ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சோளிங்கர் நகரில் உள்ள அரசு பள்ளிகளில் 2016-2017ம் ஆண்டு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையும், நினைவுபரிசும் வேலூர் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக சோளிங்கர் என்.ரவி அவர்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற சில நிகழ்வுகள்.

இது போன்ற நிகழ்ச்சிகளில் மாணவர்கள் நின்று கொண்டும், பரிசு வழங்குபவர்கள் அமர்ந்து கொண்டும் இருப்பார்கள்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களை அமர வைத்து அவர்கள் மத்தியில் நின்று மகிழ்ந்தார்.

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வயது வித்தியாசமின்றி இருகரம் கூப்பி வணங்கி வரவேற்று மகிழ்ந்தார்.

பின்னர் என்.ரவி அவர்கள் பேசியதாவது…

தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் மாணவர்கள் மீது மிகுந்த பற்றுக் கொண்டுள்ளார்.

அவர் நன்றாக படிக்கவில்லையே என்று அடிக்கடி ஏங்குவதுண்டு.

தன்னைப் போல ஒரு நாளும் இனி வரும் தலைமுறையினர் வருந்தக் கூடாது என்று நினைப்பவர் தலைவர் ரஜினி.” என்று பேசினார்.

Till today SuperStar Rajinikanth feel sad about his discontinued Education

More Articles
Follows