தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சர்கார் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இதில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
அண்மையில் வெளிநாட்டில் படிக்கும் தன் மகனைப் பார்க்க விஜய் சென்றதால் அவர் சூட்டிங்கில் கலந்துக் கொள்ளவில்லை.
முக்கியமான காட்சிகளை சென்னையில் படமாக்கி வந்தனர். ஆனால் ரசிகர்களின் அன்புத் தொல்லையால் சூட்டிங்குக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்படுகிறதாம்.
எனவே பிரம்மாண்ட் செட்டுக்களை ஸ்டூடியோக்களில் அமைத்து வருகிறார்களாம்.
சில தினங்களுக்கு முன்பு சென்னை நேப்பியர் பாலத்தை பிரசாத் ஸ்டுடியோவில் செட்டாக அமைத்திருந்தார்களாம்.
இவ்வாறாக செட்டுகளை அமைத்து வருவதால் படத்தின் பட்ஜெட்டும் ஒரு பக்கம் அதிகரித்து வருகிறதாம்.
விஜய் படங்கள் நன்றாக வசூலித்தாலும் இதுபோன்ற திட்டமிட படாத செலவுகளால் பட்ஜெட் அதிகமாக லாபம் குறைந்து வருகிறதாம்.
Due to fans crowd Vijay movies getting into troubles