ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் “பெல்லி சூப்புலு” தமிழ் பதிப்பின் டப்பிங் பணி துவங்கியது !

ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் “பெல்லி சூப்புலு” தமிழ் பதிப்பின் டப்பிங் பணி துவங்கியது !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Harish Kalyanதிருமணங்கள் நடந்தேறும் காலங்கள் அனைவரையும் கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்லும். எல்லை தாண்டி சந்தோஷ கூச்சல்கள் கேட்கும். திருமண சங்கீதங்கள் எங்கும் ஒலிக்கும். குடும்பத்தில் எல்லோரும் இணையும் திருமணம் அத்தனை மகிழ்ச்சியானதாய் இருக்கும். நாம் இங்கு பேசுவது திருமணத்தை பற்றி அல்ல. திருமணத்தை மையமாக வைத்து காதலை கொண்டாடிய “பெல்லி சூப்புலு” தெலுங்கு படத்தின் தமிழ்பதிப்பை பற்றி. விஜய் தேவரகொண்டா நடிப்பில் சக்கை போடு போட்ட “பெல்லி சூப்புலு” திரைப்படம் நடிகர் ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் தமிழில் உருவாகிவருகிறது. தமிழில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முற்றாக முடிக்கப்பட்டு, தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.

தயாரிப்பாளர் கொனேரு சத்யநாரயணா படம் பற்றி கூறியதாவது…
தமிழ் பதிப்பின் படப்பிடிப்பு மிக வேகமாக முடிந்து தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் முழு வீச்சில் துவங்கியுள்ளது. 2020 பிப்ரவரி 7 படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழில் ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்கள். தமிழில் வெகு நிறைவான படைப்பாக படம் உருவாகி வருவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன். குறிப்பாக இயக்குநர் கார்த்திக் சுந்தர் என்னை வெகுவாக கவர்ந்து விட்டார். பின்வரும் காலங்களில் அவர் தயாரிப்பாளர்களின் செல்வமாக விளங்குவார். மிகப்பெரும் வெற்றியடைந்து, எல்லைகள் தாண்டி பேசப்பட்ட ஒரு படத்தை, ரீமேக் செய்வதென்பது அத்தனை எளிதல்ல. அதுவும் கலாச்சாரத்துடன் தமிழ் மொழியின் தன்மை மாறமல், வாழ்வியல் தன்மைகள் வெளிப்பபடும்படி திரைக்கதை அமைக்க பெரும் திறமை வேண்டும். அதில் அவர் வித்தகராக இருக்கிறார். இப்படம் கதாப்பாத்திரங்களின் உணர்வு வெளிப்பாடுகளை மையமாக கொண்ட படம். அசல் பதிப்பின் ஆத்மா எந்த விதத்திலும் சிதைந்து விடாமல் ஹரிஷ் கல்யாணும், ப்ரியா பவானி சங்கரும் தங்கள் கதாப்பாத்திரத்தை அட்டகாசமாக உயிர்ப்பித்துள்ளார்கள். எடுக்கப்பட்ட ரஷ் காட்சிகள் பெரிய உற்சாகத்தை தந்தது. படத்தை முழுதாக பார்க்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். இப்படம் ரசிகர்களுக்கு பெரு விருந்தாக இருக்கும் என்றார்.

A Studios LLP சார்பில் தயாரிப்பாளர் கொரேனா சத்யநாரயணா மற்றும் A Havish Pictures இப்படத்தை தயாரிக்க, தயாரிப்பு பணிகளை SP Cinemas மேற்கொள்கிறது. Production No 2 என தற்போது அழைக்கப்படும் இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்குகிறார். இவர் இயக்குநர் விஜய்யிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது. விஷால் சந்திரசேகர் இசையமைக்க கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் ஒருங்கிணைப்பை முரளி கிருஷ்ணா செய்கிறார். 2020 கோடை கால விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு பற்றி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

படம் எடுக்க தெரியாத ராம்-வெற்றி மாறன்-என்னை திட்டுங்க.. – மிஷ்கின்

படம் எடுக்க தெரியாத ராம்-வெற்றி மாறன்-என்னை திட்டுங்க.. – மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Mysskins controversial speech at Baaram Press Meet அண்மையில் பாரம் என்ற தமிழ் படம் தேசிய விருதை பெற்றது.

இந்த படத்தை பெண் இயக்குனர் ப்ரியா கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார்.

விரைவில் இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

படக்குழுவினருடன் இயக்குனர்கள் மிஷ்கின், ராம், வெற்றிமாறன் உள்ளிட்டர்களும் கலந்துக் கொண்டு படத்தை பாராட்டினர்.

இதில் மிஷ்கினின் பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துவிட்டது. சில நேரங்களில் கொஞ்சம் ஓவராகவே பேசிவிட்டார் மனிதர்.

மிஷ்கின் பேசியதாவது…

எந்த நடிகனும் ஒரு கேரக்டராகவே வாழ முடியாது. கற்பழித்தால் அது போலவே வாழ முடியுமா?

கேரக்டராகவே வாழ்ந்தார் என்று என் படத்தில் எவனாவது சொன்னால் வெளியே போடான்னு சொல்லிடுவேன்.

நான் இயக்கிய சைக்கோ படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்று சொன்னால். டேய் அது எல்லாம் ஒரு தடவ தான் பார்க்க முடியும்.

ஆனால் ஒருவன் படத்தை நிறைய முறை பார்த்தேன் என்றார்.

அவனுக்கு வேலையில்லை போல. அந்த படத்தில் ஒரு மயிரும் இல்ல..

பாரம் படம் பார்த்த அன்று நான் மது அருந்த வில்லை.

மது அருந்தி இருந்தால் பாரம் பட இயக்குனர் ப்ரியா வீட்டுக்கு சென்று அவர் காலில் விழுந்திருப்பேன். ஸ்ரீதேவி என்னடீ படம் எடுத்து இருக்க.?

நிஜமாக சொல்றேன். எனக்கு ராமுக்கு வெற்றி மாறனுக்கு எல்லாம் படமே எடுக்க தெரியல. என்னடா படம் எடுக்குறீங்கன்னு எங்களையே நீங்க திட்டலாம்.

நம் சின்ன வயதில் நம் மலத்தை அம்மா அள்ளி கழுவி விட்டுப்பார்கள். ஆனால் அவர்கள் பெரியவர்கள் ஆனவுடன் நாம் அப்படி எல்லாம் செய்ய மாட்டோம்.

பாரம் படத்தை பார்த்தா கண்டிப்பாக உடனே நாம் எல்லாரும் அம்மா அப்பாவ பார்க்க போவோம். நான் என் அம்மா அப்பாவுக்கு பணம் அனுப்பினாலும் நன்றாக பார்த்துக் கொண்டாலும் அவர்கள் என்னுடன் இல்லையே என்பதை இந்த பாரம் படம் சொல்லுகிறது.

இந்த படத்திற்கு போஸ்டர் கூட அடிக்கவில்லை என்று சொன்னார் பிரியா. நான் என் செலவில் போஸ்டர் அடித்து நானே சுவர்களில் ஒட்டுகிறேன்.

என்று மிஷ்கின் பேசினார்.

Director Mysskins controversial speech at Baaram Press Meet

BREAKING போயி வேற வேலை இருந்தா பாருங்கடா; விஜய்சேதுபதி டென்ஷன் ஏன்.?

BREAKING போயி வேற வேலை இருந்தா பாருங்கடா; விஜய்சேதுபதி டென்ஷன் ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathiவிஜய் வீடு, பிகில் பட தயாரிப்பாளர் அலுவலகம், பைனான்சியர் அன்புச் செழியன் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர்.

விஜய்க்கு எதிராக பல வதந்திகளை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.

அதுபோல விஜய் சேதுபதியும் மதம் மாற்றப்பட்டுவிட்டார் என்று சமூக வலைதளத்தில் பரப்பப்பட்ட கருத்துக்களையெல்லாம் பதிவிட்டனர்.

நடிகர் விஜய்யின் சொத்துகளை அரசு பறிமுதல் செய்யனும்.. – அர்ஜூன் சம்பத்

இதனால் டென்ஷன் ஆனார் விஜய் சேதுபதி.

எனவே ‘போயி வேற வெல இருந்தா பாருங்கடா’ என்று விஜய் சேதுபதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

https://twitter.com/VijaySethuOffl/status/1227496726451257347

சந்திரா மீடியா விஷன் படக்குழுவினர் அனைவரும் நடிகர் ஆரி அருஜுனா விற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

சந்திரா மீடியா விஷன் படக்குழுவினர் அனைவரும் நடிகர் ஆரி அருஜுனா விற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aari Arjunaசந்திரா மீடியா விஷன் படக்குழுவினர் அனைவரும் இன்று பிப்ரவரி 12ம் நாள் நடிகர் ஆரி அருஜுனா விற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

சந்திரா மீடியா விஷன்ஸ் எஸ் எஸ் திருமுருகன் தயாரிக்கும் இரண்டாவது படத்தில் நடிகர் ஆரி அருஜுனா உடன் லாஸ்லியா , ஸ்ருஷ்டி டாங்கேவை தொடர்ந்து பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடேசனும் தற்போது இணைந்துள்ளார்.

சந்திரா மீடியா விஷன் முதல் படைப்பாக யோகி பாபு நடிப்பில் பட்டிபுலம் என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டிருந்தது, தற்போது இரண்டாவதாக தயாரிக்கவுள்ள பெயரிடப்படாத படத்தில் நடிகர் ஆரி அருஜுனா உடன் லாஸ்லியா, ஸ்ருஷ்டி டாங்கே, யோகிபாபு, செந்தில் ஆகியோரைத் தொடர்ந்து பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடேசனும் இணைந்துள்ளார் இவரைத் தொடர்ந்து இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைய உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு எல். கே. விஜய், இசை சி.சத்யா, கலை இயக்கம் வீரசமர், படத்தொகுப்பு தியாகராஜன்.m, சண்டைப்பயிற்சி ஹரி தினேஷ், கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஆல்பர்ட் ராஜா.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மலேசியா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

மனதில் இடம்பிடிக்கும் நம் வாழ்வின் காதல் பயணம் “ஓ மை கடவுளே” – இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து

மனதில் இடம்பிடிக்கும் நம் வாழ்வின் காதல் பயணம் “ஓ மை கடவுளே” – இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Ashwath Marimuthuஇளமை ததும்பும் காதல் கதைகள் தமிழ் சினிமாவில் அருகிவிட்டது. அந்த ஏக்கத்தை நீக்கி, தற்கால இளைஞர்கள் கொண்டாட, காதலை நவீன வடிவில் ஃபேண்டஸி கலந்து சொல்லும் படைப்பாக வருகிறது “ஓ மை கடவுளே”. டிரெய்லர், டீஸர் பெரும் வரவேற்பு பெற்று கண்டிப்பாக திரையரங்கில் பார்த்தே தீரவேண்டுமென, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை விதைத்திருக்கும் இப்படம் 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகிறது.

இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அஷ்வத் மாரிமுத்து படம் குறித்து பகிர்ந்துகொண்டதாவது….

“ஓ மை கடவுளே” நம் வாழ்க்கையை சொல்லும் படைப்பு. நம் தினசரி வாழ்வில் நிகழ ஆசைப்படும் அதிசயங்களை, திருப்பங்களை, மற்றொரு வாய்ப்பை இப்படம் திரையில் காட்டும். இப்படத்தின் நாயகனுக்கு தன் வாழ்வை தானே வடிவமைக்கும் வாய்ப்பு ஒரு அதிசயமாக கிடைக்கிறது. அந்த பயணம் தான் படம்.

டிரெய்லர், டீஸர் வீடியோக்கள் சில திருப்பங்களை சொல்லிவிட்டது. விஜய்சேதுபதி பாத்திரம் வீடியோவில் வெளிப்படுத்தியது படத்தின் மையத்தை சொல்லியது போன்று இருக்கும் நிலையில், நீங்கள் கூறுவது கதையின் சுவாரஸ்யத்தை உடைத்து விடாதா என வினவியபோது …

படகுழுவாக நாங்கள் ரசிகர்களை இப்படத்தின் வித்தியாசமான பயணம் நோக்கி தயார் செய்யவே விரும்புகிறோம். அது ரசிகர்கள் படத்தை ரசிப்பதற்கு ஏதுவாகவே இருக்கும். மேலும் படத்தில் இன்னும் நிறைய திருப்பங்களும் ஆச்சர்யங்களும் காத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் வெறும் திருப்பங்கள் மட்டுமே இதன் கதை அல்ல. இது காதல் உணர்வுகளை, உறவின் சிக்கல்களை, நட்பின் வலிமையை சொல்லும் படைப்பு. ரசிகர்கள் படம் பார்க்கும்போது தங்கள் வாழ்வோடு இப்படத்தை தொடர்புபடுத்தி கொள்வார்கள். அவர்கள் வாழ்வின் பிரதிபலிப்பாக படம் இருக்கும். திருப்பங்களை சொல்லிவிடுவதால் படத்தின் ஆச்சர்யங்கள் தீராது. இது எல்லோர் மனதிற்கும் நெருக்கமான படைப்பாக இருக்கும்.

படக்குழு பற்றி பேசும்போது …

அசோக் செல்வனுடன் எனது நட்பு நீண்ட கால நினைவுகள் கொண்டது. படம் செய்ய வேண்டுமென்கிற எங்களது நெடுநாள் கனவு இப்படம் மூலம் நனவாகியிருக்கிறது. அசோக் செல்வனின் திறமைக்கு சரியான தீனி அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை. அவரை பெரும் உயரங்களில் காண விரும்புகிறேன். இப்படத்திற்கு பிறகு அவர் வெகு பிஸியான நடிகராக மாறிவிடுவார். ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு பேசும்படி இருக்கும். ரித்திகா சிங் தான் இப்படத்தின் ஆத்மா அவர் இல்லையெனில் அனு கதாப்பாத்திரம் முழுமை பெற்றிருக்காது. தனது கடும் அர்ப்பணிப்பால் அனு கதாப்பாத்திரத்திற்கு உயிர் தந்திருக்கிறார் ரித்திகா சிங். வாணி போஜன் எங்கள் படத்திற்கு மற்றுமொரு பலம். பலர் நிராகரித்த நிலையில் அந்த கதாப்பத்திரத்தை புரிந்து மிக அழகாக செய்துள்ளார். விஜய் சேதுபதி எங்கள் படத்திற்கு கிடைத்த சிறப்பு. அவரது கதாப்பாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்படும். இப்படம் நம் வாழ்வை நாமே நெருங்கி பார்க்கும் பயணம். அனைவர் மனதிற்கு நெருக்கமான ஒரு படைப்பாக இப்படம் இருக்கும் என்றார்.

2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

வாணி போஜன், M S பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து , இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து

இசை – லியான் ஜேம்ஸ்

ஒளிப்பதிவு – விது அயன்னா

படத்தொகுப்பு – பூபதி செல்வராஜ்

கலை இயக்கம் – இராமலிங்கம்

உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்

உடைகள் – முகம்மது சுபையர்

சண்டைப் பயிற்சி – ராம்குமார்

பாடல்கள் – கோ சேஷா

புகைப்படம் – ராஜா

தயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ்

நிர்வாக தயாரிப்பு – நோவா.

மூவி ட்ராக்கர்ஸ்களை கட்டுப்படுத்த புரொடியூசர்ஸ் நியூ ப்ளான்

மூவி ட்ராக்கர்ஸ்களை கட்டுப்படுத்த புரொடியூசர்ஸ் நியூ ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producers plans to control fake movie trackers ஒரு திரைப்படம் வெளியானால் அதன் வசூல் நிலவரம் சரியாக தெரிய குறைந்த பட்சம் ஒரு வார காலம் ஆகும்.

ஆனால் ரிலீசான முதல் நாள் இரவு காட்சி தொடங்கிய உடனே ட்ராக்கர்ஸ் என்ற பெயரில் சிலர் முதல் நாள் வசூல் இத்தனை கோடிகள் என டன் கணக்கில் பொய்யை சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர்.

இவர்கள் திரைத்துறையை சார்ந்து இருக்கிறார்கள் என்பதால் இதை எல்லாம் நிஜம் என்றே நம்பி மற்றவர்களும் அந்த வசூல் தொகையை ட்ரெண்ட் செய்கின்றனர்.

சிலர் கொடுக்கும் கூலிக்காக இதை எல்லாம் செய்கின்றனர் என்பதை அறியாதவர்கள் தான் இதனை ட்ரெண்டாக்குகின்றனர்.

இப்படி அதிகப்படியான பொய்களை முக்கியமாக விஜய், அஜித் படங்களுக்கு சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் இந்த ட்ராக்கர்ஸ்.

சமீபத்தில் இவர்களின் பொய்யான தகவல்களால் மாட்டிக் கொண்டவர் நடிகர் விஜய்.

இதனால் பிகில் பட தயாரிப்பாளர், பைனான்சியர் வீடுகளில் வருமான வரி சோதனைகள் நடைபெற்றது.

இதை தடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் விரைவில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

இதுபோல் தெலுங்கு திரையுலகிலும் பிரச்சினைகள் தொடரவே அங்குள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் (கில்டு) புதிய நடவடிக்கையை எடுக்கவுள்ளனர்.

அண்மையில் வெளியான ‘சரிலேரு நீக்கெவரு, அலா வைகுந்தபுரம்லோ’ ஆகிய படங்கள் வசூல் விவரங்களை அங்குள்ள ட்ராக்கர்ஸ்களும் இங்குள்ள ஒரு சிலரும் பொய்த் தகவல்களை போட்டி போட்டுக் கொண்டு அளித்தார்கள்.

வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள படங்களின் வசூல் விவரங்களை தயாரிப்பாளர் கில்டு சங்கமே வெளியிடப் போகிறதாம்.

இதனால் சரியான வசூல் விவரங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

தமிழ் சினிமாவிலும் இது நடைபெற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஏனென்றால் தங்களுக்கு பிடித்த நடிகர்களையும், லட்சணக்கணக்கில் பணம் கொடுக்கும் தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்த இது போன்ற வேலைகளில் ஈடுபடும் ட்ராக்கர்ஸை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பலரின் ஆவலாக உள்ளது.

Producers plans to control fake movie trackers

More Articles
Follows