அந்த காட்சியில நடிக்க விஜய் எப்படிதான் ஒத்துக்கிட்டாரோ..? புலம்பும் ரவீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் நாம் ரசிக்கும் பல ஹீரோயின்களுக்கு குரல் வளம் அழகாக இருப்பதில்லை. சிலருக்கு தமிழ் மொழியே தெரியாது.

அவர்களுக்கு டப்பிங் கொடுத்து நம்மை ரசிக்க வைப்பவர்களில் ஒருவர் டப்பிங் கலைஞர் ரவீனா ரவி.

இவர் ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

இவர் ஹீரோயினாக நடித்துள்ள காவல்துறை உங்கள் நண்பன் படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் கூட மாளவிகா மோகனனுக்கு ரவீனா தான் டப்பிங் பேசியிருக்கிறார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் மாஸ்டர் பட குறித்து மாஸ் அப்டேட் கொடுத்துள்ளார் ரவீனா.

மாஸ்டர் படம் பார்த்தேன். வழக்கமான விஜய் படம் போல் மாஸாக இல்லாமல் வித்தியாசமாக இருந்தது.

ஆனால் சில காட்சிகளை பார்த்தபோது, விஜய் எப்படி தான் இதில் நடிக்க ஒத்துக்கிட்டார்னு தெரியலையே என்று நினைத்தேன்” என தெரிவித்துள்ளார் ரவீனா.

Dubbing Artist Raveena talks about Master and Vijays Character

நடிகை பிரகதிக்கு பாலியல் பிரச்சினை கொடுத்த காமெடியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் இயக்கி நடித்த ‘வீட்ல விசேஷங்க’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரகதி.

விஜயகாந்துடன் பெரிய மருது, பாண்டியராஜனின் சும்மா இருங்க மச்சான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் வெளியான இனிமே இப்படித்தான் படத்தில் சந்தானத்தின் அம்மாவாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் பிரகதி கொடுத்துள்ள அண்மை பேட்டியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒரு காமெடியனை பற்றி தெரிவித்துள்ளார்.

அதில்…

காமெடி நடிகர் ஒருவர் நன்றாக பழகினார். ஆனால் நாளடைவில் அவரது பேச்சும் செயலும் சரியாக இல்லை.

எனவே அவரை கேரவனுக்குள் அழைத்து பேசினேன்.

தவறான முறையில் என்னை அணுக சிக்னல் கொடுத்தேனா? அல்லது எனது உடல் மொழி உங்களை அழைப்பதுபோல் இருந்ததா?

சூட்டிங்கில் திட்டி இருப்பேன். உங்களுக்கு இருக்கும் மரியாதையை கருத்தில் கொண்டு தனியாக சொல்கிறேன் என்றேன்.

அதன் பிறகு அவர் என்னிடம் மோசமாக நடந்து கொள்ளவில்லை”. என பிரகதி தெரிவித்துள்ளார்.

அந்த காமெடியன் யாரோ? என்பது தெரியவில்லை.

Pragathi recalls Comedy Actors misbehavior with her

என் இனிய தமிழ் மக்களே… தனிமைப்படுத்தப்பட்டார் பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் எவரும் எதிர்பாராத வகையில் சென்னையில் அதிகளவில் கொரோனா தொற்று உள்ளதால் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

இதனால் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களை கொரோனா பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

இந்த நிலையில் இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா சென்னையில் இருந்து தேனியில் உள்ள தனது சொந்த ஊரான அல்லிநகரத்துக்கு அனுமதி பெற்று சென்றுள்ளார்.

உடல் நலமில்லாமல் இருக்கும் தன் சகோதரியை பார்க்க சென்றுள்ளார்.

அந்த மாவட்ட எல்லையில் இயக்குனருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

கொரோனா தொற்று எதுவும் இல்லாததால், அவரை ஊருக்கு செல்ல அனுமதித்தனர்.

ஆனாலும் அதிகம் பாதிப்புக்குள்ளான சென்னை சிவப்பு மண்டலத்தில் இருந்து பாரதிராஜா வந்துள்ளதால், அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி, நகராட்சி அதிகாரிகள் அவரது வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார்களாம்.

Director Bharathiraja quarantined him self

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 65; தமன் இசையில் 2021 தீபாவளிக்கு ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் தர்பார் படத்தை அடுத்து விஜய் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

‘துப்பாக்கி, கத்தி, சர்கார்’ படங்களைத் தொடர்ந்து இந்த கூட்டணி இணைகிறது.

சன் டிவி தயாரிக்கும் இந்த படம் ‘துப்பாக்கி’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க உள்ளார்.

ஏஆர். ரஹ்மான் அல்லது அனிருத் இசையமைக்கலாம் என எதிர்பார்த்த நிலையில் தமன் இசையமைக்கிறார் என ஒரு தகவலும் வந்துள்ளது.

தமன் இசைக்கு தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல மார்கெட் உள்ளதால் முருகதாஸ் தமனை புக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். 2021 தீபாவளிக்கு படம் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

Thalapathy 65 movie set to release on Diwali 2021

சம்பளம் வாங்கும் ரஜினி தயாரிப்பாளருக்கே அரிசி-பருப்பு கொடுப்பதா.?; புது சர்ச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பாலும் பல நாடுகளின் ஊரடங்காலும் ஒட்டுமொத்த உலகமே முடங்கியுள்ளது எனலாம்.

இதில் திரை உலகமும் விதிவிலக்கு அல்ல.

கோடிகளில் புரளும் சினிமாத் துறை இந்த ஊரடங்கால் முற்றிலும் செயல் இழந்துள்ளது.

இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நலிவடைந்த தயாரிப்பாளர்கள் 750 பேருக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவரின் கோரிக்கையை ஏற்று ரஜினியினம் 750 + 250 தயாரிப்பாளர்களுக்கு 20 டன் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

இந்த செய்தியை நம் தளத்தில் முதன்முதலாக வெளியிட்டு இருந்தோம்.

தயாரிப்பாளர் கே. ராஜன் மற்றும் தயாரிப்பாளர் திருமலை என்பவரும் நன்றி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரஜினியின் இந்த உதவி தற்போது தயாரிப்பாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே. சுரேஷ் கூறியுள்ளதாவது…

தயாரிப்பாளர்கள் ரஜினியின் நிவாரணம் உதவி பெறுவது தன்மான இழுக்கு. அவர்கள் இதை பெற கூடாது.
வசதியான தயாரிப்பாளர்கள் மற்ற தயாரிப்பாளர்களுக்கு ரூ. 50000 அல்லது ரூ. 1 லட்சம் கொடுத்து உதவியிருக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.

மற்றொரு தயாரிப்பாளர் சுரேஷ் என்பவர்… தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்குகிறவர் நடிகர் ரஜினி. அவரிடம் அரிசி பருப்பு வாங்குவது கேவலமானது. அது சரியானது அல்ல.

லாரன்ஸ் செய்த உதவியை போல அவர் பெரும் தொகையை கொடுத்திருக்கலாம். அதை தயாரிப்பாளர்கள் பிரித்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

நடிகரும் தயாரிப்பாளரும் பாபு கணேஷ் அவர்கள் கூறியுள்ளதாவது…

ரஜினிகாந்த் இது போன்ற நிவாரணங்களை கொடுப்பதற்கு பதிலாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக குறைவான சம்பளம் பெற்றுக் கொண்டு ஒரு படத்தில் நடித்து கொடுக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

Rajini donation to Film Producers became controversy

சம்பளத்தை குறைத்த விஜய் ஆண்டனி..; ரஜினி-விஜய்-அஜித் செய்வார்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்த விஜய் ஆண்டனி தற்போது ஹீரோவாகவும் ஜெயித்து விட்டார்.

நான், சலீம், பிச்சைக்காரன், எமன், அண்ணாதுரை, ‘காளி’ திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக தென்னிந்திய திரையுலகத்தையும் பெரிதாக பாதித்திருக்கும் இந்த நேரத்தில், நடிகர் விஜய் ஆண்டனி, தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஒத்துக் கொண்ட சம்பளத்தில் இருந்து 25% சதவீதம் குறைத்திருக்கிறார் (ஒரு ‌கோடி ரூபாய் அளவில்).

இதன் மூலம், தான் தற்போது நடித்து வரும் 3 படங்களின் தயாரிப்பாளர்களும் பயன் அடைவார்கள் என கூறப்படுகிறது.

விஜய் ஆண்டனியின் இந்த தாராள மனதை “அக்னி சிறகுகள்” தயாரிப்பாளர் T. சிவா மனமுவந்து பாராட்டி கூறுகையில்,

கொரோனா ஊரடங்கு தமிழ் சினிமாவை மொத்தமாக புரட்டி போட்டிருக்கிறது. 50 நாட்களுக்கு மேலாக எந்த பணிகளும் நடக்காமல், திரையரங்குகளும் இயங்காமல், பல படங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன.

புது படங்கள் திரையரங்குகளில் வெளியிட மேலும் மூன்று மாதங்கள் ஆகும் என்ற சூழ்நிலையில், தன்னை நம்பி திரைப்படங்கள் தயாரித்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து தனக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்து கொள்ளுமாறு இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் தெரிவித்து விட்டார்.

இந்த சம்பளக் குறைப்பு மூலம், மூன்று தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களின் மொத்த பட்ஜெட்டை குறைத்து, வெகு விரைவில் அவர்களின் படங்களை எந்த பிரச்சனைகளும் இல்லாமல் வெளியிட முடியும் என்று விஜய் ஆண்டனி நம்புகிறார் என அவர் கூறியுள்ளார்.

இவரைப் போல அதிக சம்பளம் வாங்கும் ரஜினி, விஜய் அஜித் சூர்யா உள்ளிட்ட மற்ற நடிகர்களும் செய்வார்களா? என தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ம்…ம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..

Vijay Antony slashes his salary to support Film Producers

More Articles
Follows