தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் திரை உலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர் ராகவா லாரன்ஸ்.
திரையுலகில் நடனக் குழுவில் பயணித்து படிப்படியாக உயர்ந்த நடன இயக்குனரானார் ராகவா லாரன்ஸ்.
பார்த்தேன் ரசித்தேன் மற்றும் அமர்க்களம் உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
கே பாலச்சந்தர் இயக்கிய ‘பார்த்தாலே பரவசம்’ படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.
அதன் பின் சில படங்களில் நாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்தில் இயக்குனராக மாறி முனி படத்தை எடுத்து அதில் நாயகனாக நடித்து தமிழக மக்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் எடுத்தார் லாரன்ஸ்.
அதன் பின்னர் காஞ்சனா 1 காஞ்சனா 2 என அதிரடியான பேய் படங்களை கொடுத்து பேய் பட இயக்குனர் என்ற பெருமையை பெற்றார்.
அதிலும் 100 கோடி வசூலை அள்ளி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தார்.
மேலும் ஹிந்தியிலும் படங்களை இயக்கினார்.
தற்போது ‘ருத்ரன்’, ‘அதிகாரம்’ மற்றும் ‘சந்திரமுகி 2’ ஆகிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
இத்துடன் ‘லாரன்ஸ் அறக்கட்டளை’ என்ற நிறுவனத்தையும் நடத்தி, அதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்கிறார்.
கல்வி மற்றும் மருத்துவமனை செலவுகள் உள்ளிட்ட பல நல உதவிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் சமூக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில், ராகவா லாரன்ஸிற்கு சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கி இன்று கௌரவித்துள்ளது.
இது தொடர்பாக ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்…
“சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் பெற்றது எனக்கு கிடைத்த பெருமை. இந்த விருதை எனக்கு வழங்கியதற்காக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சிலுக்கு மனமார்ந்த நன்றி.
எனது சார்பாக என் அம்மா இந்த விருதினை பெற்றது சிறப்பு” என குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும்
லாரன்ஸிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Doctorate to Raghava Lawrence.; Who? Do you know what they gave? Interesting information