தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜூன் 10 தேதி உயிரிழந்தார்.
எனவே அம்மாவட்ட பொறுப்புக்கு அக்கட்சியினரிடையே போட்டி நிலவியது.
இந்த சூழலில் யாரும் எதிர்பாராத வண்ணம் அந்த பொறுப்புக்கு சிற்றரசு நியமிக்கப்பட்டார்.
திமுக.வில் பல சீனியர்கள் இருந்தும் சிற்றரசு நியமிக்கப்பட்டதால் மூத்த நிர்வாகி அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் தொண்டர்களிடையே சலசலப்பும் உருவானது.
மேலும் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் திமுக கட்சியின் தலைமை நிலையச் செயலாளருமான கு.க. செல்வமும் அதிருப்தி அடைந்தார்.
இதனையடுத்து பிஜேபி-யில் இணைய பேச்சு வார்த்தை நடத்தி வந்தார் கு.க. செல்வம் MLA.
இன்று மாலை டெல்லியில் ஜே.பி நட்டா தலைமையில் அவர் பாஜகவில் இணைய உள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.
இந்நிலையில் ஜே.பி.நட்டாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் கு.க.செல்வம்.
நான் பாஜகவில் இணைய வரவில்லை என்றார். தமிழ்க்கடவுள் முருகனை அவதூறாக பேசியவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்.
திமுகவில் தனக்கு அதிருப்தி இல்லை. ஆனால் திமுக தலைமை தன்மீது நடவடிக்கை எடுத்தால் பரவாயில்லை என செல்வம் கூறினார்.